விக்கியில் எனது ஓவியங்கள்

வணக்கம் நண்பர்களே, சில காலம் கணினியில் போட்டோசாப் உதவியுடன் டிஜிட்டல் ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். போட்டோசாப்பில் உள்ள பெண் என்ற டூலை வைத்து ஓரளவு ஓவியங்களை வரைந்தேன். அவற்றை சிறப்பான ஓவியங்கள் என்று கூற இயலாது என்றாலும் ஓரளவு மனநிறைவு தந்தன.

அதன் பிறகு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் உள்ள ஆட்டோ டெஸ்க் ஸ்கெட் புக் என்ற செயலியைக் கொண்டு நன்றாக ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். விக்கிப்பீடியாவிற்கு தேவையான ஓவியங்கள் சிலவற்றையும் வரைந்து பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியாவின் காமன்ஸ் தளத்தில் எனக்கென ஒரு பகுப்பே உருவாக்கியிருக்கிறார்கள். ஆர்ட் ஒர்க் பை ஜெகதீஸ்வரன். என் என்ற பகுப்பில் என் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காண்க

https://commons.wikimedia.org/wiki/Category:Artwork_by_Jegadeeswaran.N.

ஓவியர் செல்வம்
நடிகர் வெள்ளை சுப்பையா
ஓவியர் ஏ. பி. செல்வராஜ்
ஓவியர் மாருதி

நன்றி.

திருமாலின் திருமச்சம் – சிற்ப ஆய்வு

திருமச்சம் அல்லது சிறீ வத்சம் என்பது திருமாலின் மார்பிலுள்ள மச்சம் ஆகும். இது திருமாலின் வலது மார்பு பகுதியில் உள்ளது. இது முக்கோண வடிவு கொண்டது. இதனை மச்சம், மரு என்றும் கூறலாம்.உலோக சிற்பங்கள், கற் சிற்பங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், மார்பில் திருமச்சம் உள்ளதென அறிந்தால் அச்சிற்பத்தை திருமால் என்று கூறலாம்.

மூன்று துளசி இலை வடிவ திருமச்சம்
லட்சுமி தேவி

திருமால் சிலையின் வலது மார்பில் முக்கோண வடிவிலான புடைப்பாக காட்சி தரும். முக்கோண பகுதியில் மூன்று துளசி இலைகளை கொண்டதாகவோ, திருமகளின் வடிவு கொண்டதாகவோ அமைகின்றன.திருமச்சம் திருமகளாக கருதப்படுவதால் அரூபதிருமகள் என்றும் திருமால் திருவுறை மார்பன் என்றும் அறியப்படுகிறார்.

ஓவியங்கள் – விக்கிப்பீடியா கட்டுரைக்காக வரைந்தது.

அர்ஜூன தவம் பகிரத தவம் – சிற்ப ஆய்வு

சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.1. பகீரத தவம் – கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.2. அர்ஜூன தவம் – பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.


பகீரத தவம் – பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.


அர்ஜூன தவம் – பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் ‘பாசுபதம்’ எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான். பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.


தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.

அரிதான மரபு விதைகளை வீட்டிலிருந்தே பெறுவது எப்படி

ஆதியகை விதை மையத்தை முகநூல் மூலமாக தெரியும். அதன் நிறுவனரான பரமேசுவரன் ஒவ்வொரு விதையும் தேடி பயணிக்கையில் நேர்ந்த அனுபவத்தை அவ்வப்போது எழுதுவார். கிடைத்திட்ட இரண்டு, மூன்று விதைகளைக் கொண்டு அவற்றை உருவாக்கி விதைகளை பெருக்கம் செய்துள்ளார். யூடிபில் வறண்ட நிலத்தில் சாகுபடி செய்யும் யுத்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை என்னைப் போன்ற மானாவாரி நிலங்களில் வாழ்வோருக்கு மிகவும் பயனுள்ளவை. என் இளையோனின் திருமணத்திற்கு நாட்டுவிதைகளை தாம்பூலத்துடன் தருவதற்கான யோசனை அவருடைய முகநூல் பதிவுகளிடமிருந்து பெற்றது.

30 வகையான சுரை, 13 வகையான வெண்டை, 12 வகையான கத்தரி, 7 வகையான அவரை என அவரிடம் உள்ளவை முழுமையான பட்டியல். கீரை ரகங்கள், மூலிகைகள் என 120 வகையான விதைகளை வைத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் நிறைய அரிதானவைகள் உள்ளன. அவற்றில் என்னால் வளர்க்க முடியுமென்ற சில ரகங்களை மட்டும் கேட்டுள்ளேன்.

ஆதியகை விதைப்பட்டியல்

பீர்க்கங்காய் ரகங்கள்
1. குண்டு பீர்க்கங்காய்
2. கொத்து பீர்க்கங்காய்
3. சித்திரை பீர்க்கங்காய்
4. பனையேரி பீர்க்கங்காய்
5. பேய் பீர்க்கங்காய்
6. மெழுகு பீர்க்கங்காய் (நுரை பீர்க்கங்காய்)
7. வரி பீர்க்கங்காய் – குட்டை
8. வரி பீர்க்கங்காய் – நீளம்
9. வரியில்லா குட்டை பீர்க்கங்காய்

பூசணிக்காய் ரகங்கள்
1. ஆந்திரா நாட்டு பூசணி
2. உருட்டு பூசணி
3. குளவிக்கல் பூசணி
4. சட்டி பூசணி
5. சதை பூசணி
6. சிட்டு பூசணி
7. தலைகாணி பூசணி
8. தேங்காய் பூசணி
9. நீள பூசணி
10. வரி பூசணி
11. வெண்புள்ளி பூசணி
12. வெண்புள்ளி பூசணி 2
13. வெளிர் மஞ்சள் பூசணி

images (9)

வெண்டை ரகங்கள்
1. உருட்டு வெண்டை
2. ஊசி வெண்டை
3. சிவப்பு வெண்டை
4. சுனைமர வெண்டை
5. பச்சை வெண்டை
6. பருமன் வெண்டை
7. பலகிளை சிவப்பு வெண்டை
8. பலகிளை வெள்ளை வெண்டை
9. பொம்மடி நீள வெண்டை
10. மலை வெண்டை
11. மாட்டுக்கொம்பு வெண்டை
12  யானைதந்த வெண்டை
13. வெளிர்பச்சை வெண்டை

கத்தரி
1. உடுமலை உருண்டை கத்தரி
2. உடுமலை சம்பா கத்தரி
3. ஊதா முள் கத்தரி
4. ஊதா முள் கத்தரி
5. எலவம்பாடி கத்தரி
6. கடவூர் உருண்டை கத்தரி
7. கல்லம்பட்டி கத்தரி
8. கும்பகோணம் குண்டு கத்தரி
9. கோபி பச்சை கத்தரி
10. சேலம் முள் கத்தரி
11. திண்டுக்கல் ஊதா கத்தரி
12. தொப்பி (அ) தக்காளி கத்தரி
13. நத்தம் கீரி கத்தரி
14. நந்தவன பச்சை கத்தரி
15. நாமக்கல் பொன்னு கத்தரி
16. நெகமம் வரி கத்தரி
17. பச்சை கத்தரி
18. பச்சை குண்டு கத்தரி
19. மணப்பாறை கத்தரி
20. வெண்வரி உருண்டை கத்தரி
21. வெள்ளை வரி கத்தரி

பீன்ஸ்
1. கருப்பு பீன்ஸ்
2. குத்து செடி பீன்ஸ்
3. கொடி பீன்ஸ்
4. ரெட்டை பீன்ஸ்
5. வரி பீன்ஸ்

மிளகாய்
1. காந்தாரி மிளகாய்
2. குண்டு மிளகாய்
3. சம்பா மிளகாய்
4. குண்டு மிளகாய்

புடலை

1. குட்டை புடலை
2. திருச்சி நீள புடலை
3. தேனி நீள புடலை
4. பாம்பு புடலை

வெள்ளரி
1. குமரி வெள்ளரி
2. பழ வெள்ளரி
3. குமரி வெள்ளரி

கீரைகள்

1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. காசினிக்கீரை
4. கொத்தல்லி
5. சக்கரவர்த்தி கீரை
6. சிவப்பு அகத்திக்கீரை
7. சிவப்பு சிறுகீரை
8. சிவப்பு தண்டங்கீரை
9. சிவப்பு புளிச்சகீரை
10. பச்சை சிறுகீரை
11. பச்சை தண்டங்கீரை
12. பச்சை புளிச்சகீரை
13. பருப்பு கீரை
14. பாலக்கீரை
15. மணதக்காளி கீரை
16. முளைக்கீரை

பல்லாண்டு பயிர்
1. கோவில்பட்டி முருங்கை
2. சுண்டக்காய்
3. நாட்டு ஆமணக்கு
4. நாட்டு பப்பாளி
5. மர பருத்தி எ செம்பருத்தி
6. மரத்துவரை

இந்த பட்டியலில் சுரை ரகங்கள், தட்டை, காராமணி போன்றவற்றை இணைக்கவில்லை. சுரையில் ஆள் உயர சுரை, கும்ப சுரை, உருட்டு சுரை, செம்பு சுரை போன்ற சில ரகங்களின் பெயர்கள் மட்டுமே இணையத்தில் இருக்கின்றன. முழுமையான பட்டியல் இல்லை. உழவர் ஆனந்த் அவர்களைப் போல ஒரு பீடிஎப் செய்தால் பரவாயில்லை. ஆனால் ஆதியகை நிறுவனருக்கு கூடுதல் வேலையாக இது இருக்கும்.

20191119_121358

என் தேர்வுகள்-
மூக்குத்தி அவரை
கோவில்பட்டி முருங்கை
மர பருத்தி
நாட்டு பப்பாளி
நாட்டு ஆமணக்கு
காந்தாரி மிளகாய்
யானைதந்த வெண்டை
பாம்பு புடலை

ஆதியகை பரமேசுவரன் எண் – +91 85263 66796

இந்த எண்ணிற்கு நமக்கு தேவையான விதைகளின் பட்டியலையும், உடன் முகவரியையும் வாட்சப்பில் அனுப்ப வேண்டும். பகல்நேரங்களில் வேலையில் இருப்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில் பதில் தருகிறார். அவர் நமது பட்டியல் மற்றும் நமது முகவரியின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நமக்கு கூறுகிறார். என் பட்டியலுக்கு 200 ரூபாய் என்றார். பாம்பு புடலைக்காக சென்னை வரை சென்று சேகரித்திருக்கிறார் என்பதை அறிவேன். அந்த தொகையை அவரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு மீண்டும் தகவல் தர வேண்டும். அவ்வளவே. அரிதான மரபு விதைகள் நம் வீடு தேடி வந்துவிடும். விதைகளைப் பெற்றதும் இடுகையிடுகிறேன். அரிதான சில ரகங்களை வீட்டு தோட்டத்தில் வளர்க்க தொடங்கினால் பரவலாக்கம் பெற்றுவிடும். மரபு ரகங்களில் இருந்து விதை எடுத்து சுற்றியுள்ள ஆர்வளர்களுக்கும், உறவினர்களுக்கும் தருதல் வேண்டும். நம்மிடம் விதைகள் இல்லாது போனாலும் அரிதான ரகங்கள் நாம் கொடுத்தவர்களிடம் இருக்கும். அவற்றை மீளப்பெருதல் எளிதாக இருக்கும். நன்றி.

நாட்டு காய்கறி விதைகள் மற்றும் மரவிதைகள் ஆன்லைனில் வாங்குவது எப்படி

மணவாடிப் பகுதியில் எப்போதும் மழை குறைவாக உள்ளது. காவேரி கரையில் முப்போகம் விளைந்த இடத்தில் வளர்ந்துவிட்டு வானைநோக்கி பார்த்துக் கொண்டே இருப்பது கடினம்தான். ஆடி பட்டம் தேடினாலும் வராது என எல்லோரும் தயாராகிவிட.. இங்கு ஒன்றுமே செய்யவில்லை. ஆவடி புரட்டாசியில் மழை எட்டிபார்க்க‌ காட்டில் உழவு ஓட்டி சோளம் போட்டாச்சு. அம்மாவாசையில் விதைப்பது வழக்கமாகிவிட்டதால் பாவை, புடலை, அவரை, வெண்டை என விதைத்தோம்.

கத்திரி, மிளகாய், தக்காளி எல்லாம் பின்னால் சேர்ந்து கொண்டது. நீர் பூசணியும், பரங்கிக்காயும், பீர்க்கனும் மாட்டுக் கொட்டகையில் விதைத்தோம்.‌ இப்போது காய்கறிகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

வீட்டு தோட்டத்திற்கும் பண்ணையில் பசுமை உண்டாக்கவும் நாட்டு விதைகளை உழவர் ஆனந்த் அண்ணனிடம் கேட்டுள்ளேன். கொடி அவரை சொதப்பலாகிவிட்டது. நாட்டு வெண்டை ஆறு அடிக்கு வளர்ந்து இரண்டு நாட்களாக காய் தர தொடங்கியிருக்கிறது.

அடுத்தது கார்த்திகை பட்டம். ஆடிக்கும் தைக்கும் இடையேயான பனிக்கால நாட்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள புதிய நாட்டின காய்கறி செடி வகைகளை வாங்கலாமென முடிவெடுத்தேன்.

உழவர் ஆனந்த்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே கடை அமைத்திருக்கிறார். காய்கறி செடி விதைகளை 10 ரூபாய்க்கும், மரவிதைகளை 20 ரூபாய்க்கும் தருகிறார். யூடிபில் தோட்டம் சிவா போன்ற பலரும் உழவர் ஆனந்திடம் விதைகளை வாங்கி பயன்படுத்தி நன்றாக உள்ளது என கூறியிருக்கின்றார்கள்.

உழவர் ஆனந்த் எண் – 9840960650

இந்த எண்ணிற்கு விதைகள் தேவைப்படுகிறது. விலைப்பட்டியல் அனுப்புங்கள் என கேட்டால் சீரான பிடிஎப் கோப்பினை அனுப்புகிறார். அதிலிருந்து வேண்டியதை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரிக்கலாம். பிறகு விலையை கூட்டி வைத்துக்கொண்டு கொரியர் செலவுக்கு 40 ரூபாயை சேர்த்து அனுப்பினால் போதுமானது. அவர் அனுப்பிய பட்டியலைக் கீழே கொடுக்கிறேன். ஒவ்வொரு முறையும் விதையின் இருப்பின் அடிப்படையில் மாறும். எனவே புதுப் பட்டியலை கோருதல் நலம்.

IMG_20191118_154124

IMG_20191118_154134

IMG_20191118_154145

IMG_20191118_154213

என்னுடைய பட்டியல்

சிகப்பு புளிச்சக்கீரை -2
சிகப்பு தண்டுக்கீரை -2
காசினி கீரை-2
சக்ரவர்த்தி கீரை-2
பசலைக்கீரை
பப்பாளி -2
தர்பூசணி
வெள்ளரி
நீட்ட மிளகாய்
நீள் புடலை
குண்டு சுரக்காய்
நீட்ட சுரக்காய்
செடி முருங்கை

சவுக்கு
கொய்யா
சீதா
கொடுக்காப்புலி

இவற்றுக்கு 260 ரூபாயும் கூரியர் செலவு 40 ரூபாய் என மொத்தம் 300 ரூபாய் வந்தது. எஸ்பிஐ வங்கியில் IMPS FUND TRANSFER வசதியானது காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணியிலிருந்து வரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். உழவர் ஆனந்திற்கு பணம் அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன். விதைகள் வந்ததும் இடுகை இடுகிறேன். நன்றி.

காட்டுப்புத்தூர் அமிர்தத்தம்மையார் சோடசத் தோத்திர மாலை – முகவுரை

காட்டுப்புத்தூர் அமிர்தத்தம்மையார் சோடசத் தோத்திர மாலை

எழுதியவர் – தவத்திரு சண்முகானந்த சுவாமிகள்

இந்நூல் 1973 இல் காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் மடத்தில் நாராயண பிரம்மேந்திரருக்கு கொண்டு செய்து வந்த அமிர்தத்தம்மையார் 19. 08. 1973 இல் மறைந்தார். அவரை நாராயண பிரம்மேந்திரர் சமாதிக்கு எதிரே நந்தி இருந்த இடத்தில் புதைத்து அதன் மேல் நந்தியை நட்டுள்ளனர்.

மடாலயத்தில் 28.08.1973 இல் அமிர்தத்தம்மையாரின் மோட்ச தீப விழா நடைபெற்றது. அப்போது தவத்திரு சண்முகானந்த சுவாமிகள் இயற்றிய நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் மடத்தில் இருந்து வந்த தவத்திரு சதாசிவனந்தா அவர்கள் இப்பாக்களை பாடியுள்ளார்.

இந்நூலுக்கு கலைமகள் ஆசிரியர் கி.வ. ஜகந்நாதன் பாராட்டுரை எழுதியுள்ளார்.

IMG_20190706_213317

IMG_20190706_213411

IMG_20190706_213436

IMG_20190706_213456

IMG_20190706_213516

IMG_20190706_213516

IMG_20190706_213552

 

உரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து

உரைப்பான்

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தாலும் அதனுடைய செரித்தல் திறனை மேம்படுத்த உரைப்பான் என்ற பெயரில் சில மருந்துப் பொருட்களை அரைத்து தருகிறார்கள். கீழ்கண்ட ஒன்பது பொருட்களில் கிடைக்கின்றவைகளை தாய்ப்பாலுடன் உரைப்பான் கல்லில் ஐந்து மூன்று என்ற கணக்கில் உரைத்து குழந்தைக்கு தருகிறார்கள்.

1) வசம்பு
2) சுக்கு
3) மாச்சக்காய்
4) சாதிக்காய்
5) சித்தரத்தை
6) முறுக்குத் திப்பிலி
7) ஒருதலைப் பூண்டு
8) பெருங்காயக் கட்டி
9) மான் கொம்பு

இப்பொருட்களில் வசம்பு என்பது புள்ளவளர்த்தி (பிள்ளை வளர்த்தி) என்றும் அழைக்கப்படுகிறது. மாலை நேரங்களில் இந்தப் பெயரைக் கூறாமல் பெயர் சொல்லாதது என்றும் வழங்குகிறார்கள். முறுக்குத் திப்பிலி என்பது குழந்தைகள் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இப்பொருட்களை சாணத்தில் வைத்து பதப்படுத்தி, விளக்கு சுடரில் காட்டி தீய்த்து உபயோகம் செய்கின்றார்கள். இப்பொருட்களில் பெரும்பாலானவை இன்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

நெடுங்காலமாக விளம்பரங்களில் குழந்தை அழுதால் உட்வான்ஸ் வாட்டர் கொடுங்கள் என்று கூறப்படும் பொருளுக்கு மாற்றாக கிராமங்களில் இந்த உரைப்பானே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#மகரயாழினி #நாட்டார்_சடங்குகள் #பிறப்பு_சடங்குகள்

2017 சனவரி மாதம் 12ல் முகநூலில் பதிவு செய்தது.

மழலை பாடல்கள்

2017 சனவரி 8 ல் எனது முகநூலில் மகரயாழிக்கான மழலை பாடலை பதிவு செய்திருந்தேன்.

என்னுடைய அம்மாச்சியும், கருப்பாயி என்ற உறவுக்காரப் பாட்டியும் நிறைய நாட்டார் பாடல்களை மகரயாழினிக்காக நேற்று பாடினார்கள். பல் போன பாட்டிகள் தங்களின் நினைவுப் பைகளிலிருந்து சில்லறைகளைப் போல நாட்டார் பாடல்களை சிதறவிடுகிறார்கள். கருத்திற்கோ, பொருளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் ஓசைநயத்திற்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்ற பாடல்களாக அவை இருக்கிறன. மொழியே அறியாத மூன்று மாதங்கள் கூட நிரம்பாத அந்த மழலை மகிழ்ச்சியை பொக்கை சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இங்கு இங்கு இங்கு..
இது இங்கு குடிக்கிற சங்கு.
வார்த்தை கேட்கிற வண்டு.
பாட்டு கேட்கிற பாங்கி,
பேச்சு கேட்கிற பூச்சி
இது இங்கு கேட்கிற இளஞ்சியம்

இந்தப் பாடல் கேள்வியாகவும் முடியும் வண்ணமும் மாற்றிப் பாடுகிறார்கள்.

இது இங்கு குடிக்கிற சங்கா என்பதுபோல மழலையோடு உரையாடுவதாகவும் பாடுகிறார்கள். 🙂

இந்தப்பதிவிற்கு விக்கிப்பீடியரும், தமிழார்வருமான செல்வா ஐயா தன்னுடைய கருத்தினை பகிர்ந்திருந்தார்.

IMG_20181025_193624

செல்வா ஐயா குறிப்பிட்ட ஒந்து.. ஒந்து காசு பாடலை..

“உந்தி உந்தி காசு..
யார் கொடுத்த காசு..
மாமா கொடுத்த காசு..
மாயமாப் போச்சு..”

என ஊர் பக்கம் பாடுகிறார்கள். இதில் உந்தி உந்தி எனும் போது இடது உள்ளங்கையில் வலதுகை ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டவும்.. மாயமாய் போச்சு எனும் கையை விரித்து ஆட்டி இல்லை என விவரித்தார்கள்.

#மகரயாழினி க்கு பிடித்த பாடலாகிப் போனது. “வூ..ம்.. வூ..ம்” என ஓசை எழுப்பிக் கொண்டு உள்ளங்கையில் ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டுவாள்.. அப்படியானால் நாம் உந்தி உந்தி காசினை பாட வேண்டும்.

அவளின் அம்மா பாடி முடித்ததும்.. என்னுடைய அம்மாக்கள் பாட வேண்டும்..

வணக்கம் வைக்க இருகரம் கூப்பவும், குட்மார்னிங் வைக்க நெற்றியில் கை வைக்கவும் தொடங்கிய பிறகு இந்த உந்தி உந்தி காசு பாடல் மறையத் தொடங்கிவிட்டது.

#மகளதிகாரம்

பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

சகோதர சகோதரி – சிறுகதை

சென்னை மெரினா கடற்கரை. எல்லோருக்கும் தெரிந்தது அந்த மெரினா சென்னையின் அடையாளம், இரண்டாவது பெரிய கடற்கரை அவ்வளவே. சல்லிக்கட்டு போராட்டம் சகல உலகத்தினருக்கும் மெரினாவையும், தமிழர் பெருமையையும் கொண்டு சேர்த்தது. அந்தப் போராட்டத்தில் தமிழச்சிகளோடு தமிழர்களும் இரவு பகலாக இருந்தார்கள். ஒரு சின்ன சீண்டல்கள், சலசலப்புகள் என எதுவுமே இல்லை. அங்கு நடைப்பெற்றிருக்க கூடிய ஒரு கற்பனை இது.

அவள் பெயர் சுலோச்சனா, தோழர்களும் தோழிகளும் சுலோ சுலோ என்று அழைப்பார்கள். ஆனால் உண்மையில் சுலோ சுலோவானவள் இல்லை. மெரினாவில் ஆங்காங்கே கோசமிட்டுக் கொண்டிருந்த வெகுசில பெண்களில் மிகவும் கவனிக்கத்தக்கவளாக இரண்டாம் நாளே மாறியிருந்தாள் சுலோ. அவளுடைய எதுகை மோனையில் எல்லா அரசியல்தலைவர்களும் சின்னா பின்னமாகினார்கள். கூட்டத்தோடு கூட்டமாக எல்லாப்பக்கமும் இருந்த உளவுத்துறை சுலோச்சனாவின் பெயரையும் தன்னுடைய பட்டியலில் இணைத்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியது.

மூன்றாம் நாளை மாலை. கலைகட்டியிருந்த மெரினாக் கூட்டத்தில் சுலோ தன்னுடைய நெருங்கிய தோழியான தாமரையுடன் சேர்ந்து கழிவறைக்குச் சென்றால் வடக்குபுறம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு நடமாடும் கழிவறைகளிலும் எண்ணற்ற நபர்கள் வரிசையில் இருந்தார்கள். தாமரை அங்கே நின்றுகொண்டிருந்த கூட்டதோடு நின்றாள். ஆனால் சுலோவிற்கு இந்தக் கூட்டத்தில் நின்று கழிவறைக்கு செல்லும்வரையெல்லாம் தாங்காது என்று தெரிந்துபோனது. அவளுடைய புண்டையிலிருந்து சில சொட்டு பேண்டீசை நனைத்து அதை அவளுக்கு உணர்த்தியது. தாமரையிடம் சைகையில் கலங்கரை விளக்கு நோக்கி காமித்துவிட்டு சாலைக்கு வந்தாள்.

அவள் அருகே சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒருநபர் வருகின்ற இருசக்கர வாகனத்தைப் பார்த்து நிறுத்துமாறு சைகை காட்டினாள். இவள் துரதிஸ்டம் வந்தவன் கவனிக்காமல் முன்னே சென்றுவிட, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த சிவப்புநிற போர்ட் மகிழுந்து அவளை நெருங்கி நிறுத்தியது. அதன் கண்ணாடிகள் கீழறங்க,. நாயகன் போல வெங்கட் அதிலிருந்தான்.

கம் இன் என்றான். யோசிக்க நேரமில்லாதவள் அவனுடைய மகிழுந்தின் முன்புற கதவினைத் திறந்து அமர்ந்து கதவை மூடினாள். அதற்குள் பின்னால் இருந்து வாகனங்களின் ஒலிப்பான்கள் காதுகளைப் பிளந்தன. வெங்கட் சட்டென ஒரு பொத்தானை அழுத்த எல்லாக் கதவுகளின் கண்ணாடிகளும் உயர்ந்து கதவு தாழிட்டுக் கொண்டது. உடனே வண்டி விரைந்தது.

ஜல்லிக்கட்டு புரோட்டஸிசா
ஆமாம் என்றபடியே நெருங்கிக் கொண்டிருந்த மற்றொரு பப்ளிக் டாய்லெட்டைப் பார்த்தாள். அதுவும் மிகவும் கூட்டம். ச்சே என்றவளின் வார்த்தையில் வலியும் இருந்தது.
வாட்.
ம்.. அந்த குப்பம் பக்கம் நிறுத்தறீங்களா. பாத்ரூம் அர்ஜெண்ட்.
ஓகே. அங்க டாய்லெட் உறுதியாக கிடைக்குமா. அர்ஜெண்டுனா எங்க வீட்டுக்கு வாங்களேன்.
வீட்டுக்கா.. நோ..நோ.. பிளீஸ் இங்கேயே இறக்கி விட்டுடுங்க.
பயப்படாதீங்க. நானும் அந்தக் குப்பத்துல தான் இருக்கேன். இது நான் வேலை செய்ய முதலாளியோட காரு.
ஓ.. உண்மையைத்தான் சொல்லறீங்களா.
ஏங்க நீங்க கைகாட்டி நிறுத்தாம போன பைக்காரனைப் பார்த்துட்டு நான் வண்டியை நிறுத்தி ஏத்திக்கிட்டேன். இப்ப கூட நம்பிக்கை இல்லையா சிஸ்டர்.
சிஸ்டருன்னு கூப்பிடிங்க பாருங்க. இப்ப நம்பிக்கை வந்துடுச்சு பிரதர். கொஞ்சம் வேகம் பிளீஸ்..