சகோதர சகோதரி – சிறுகதை

சென்னை மெரினா கடற்கரை. எல்லோருக்கும் தெரிந்தது அந்த மெரினா சென்னையின் அடையாளம், இரண்டாவது பெரிய கடற்கரை அவ்வளவே. சல்லிக்கட்டு போராட்டம் சகல உலகத்தினருக்கும் மெரினாவையும், தமிழர் பெருமையையும் கொண்டு சேர்த்தது. அந்தப் போராட்டத்தில் தமிழச்சிகளோடு தமிழர்களும் இரவு பகலாக இருந்தார்கள். ஒரு சின்ன சீண்டல்கள், சலசலப்புகள் என எதுவுமே இல்லை. அங்கு நடைப்பெற்றிருக்க கூடிய ஒரு கற்பனை இது.

அவள் பெயர் சுலோச்சனா, தோழர்களும் தோழிகளும் சுலோ சுலோ என்று அழைப்பார்கள். ஆனால் உண்மையில் சுலோ சுலோவானவள் இல்லை. மெரினாவில் ஆங்காங்கே கோசமிட்டுக் கொண்டிருந்த வெகுசில பெண்களில் மிகவும் கவனிக்கத்தக்கவளாக இரண்டாம் நாளே மாறியிருந்தாள் சுலோ. அவளுடைய எதுகை மோனையில் எல்லா அரசியல்தலைவர்களும் சின்னா பின்னமாகினார்கள். கூட்டத்தோடு கூட்டமாக எல்லாப்பக்கமும் இருந்த உளவுத்துறை சுலோச்சனாவின் பெயரையும் தன்னுடைய பட்டியலில் இணைத்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியது.

மூன்றாம் நாளை மாலை. கலைகட்டியிருந்த மெரினாக் கூட்டத்தில் சுலோ தன்னுடைய நெருங்கிய தோழியான தாமரையுடன் சேர்ந்து கழிவறைக்குச் சென்றால் வடக்குபுறம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு நடமாடும் கழிவறைகளிலும் எண்ணற்ற நபர்கள் வரிசையில் இருந்தார்கள். தாமரை அங்கே நின்றுகொண்டிருந்த கூட்டதோடு நின்றாள். ஆனால் சுலோவிற்கு இந்தக் கூட்டத்தில் நின்று கழிவறைக்கு செல்லும்வரையெல்லாம் தாங்காது என்று தெரிந்துபோனது. அவளுடைய புண்டையிலிருந்து சில சொட்டு பேண்டீசை நனைத்து அதை அவளுக்கு உணர்த்தியது. தாமரையிடம் சைகையில் கலங்கரை விளக்கு நோக்கி காமித்துவிட்டு சாலைக்கு வந்தாள்.

அவள் அருகே சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒருநபர் வருகின்ற இருசக்கர வாகனத்தைப் பார்த்து நிறுத்துமாறு சைகை காட்டினாள். இவள் துரதிஸ்டம் வந்தவன் கவனிக்காமல் முன்னே சென்றுவிட, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த சிவப்புநிற போர்ட் மகிழுந்து அவளை நெருங்கி நிறுத்தியது. அதன் கண்ணாடிகள் கீழறங்க,. நாயகன் போல வெங்கட் அதிலிருந்தான்.

கம் இன் என்றான். யோசிக்க நேரமில்லாதவள் அவனுடைய மகிழுந்தின் முன்புற கதவினைத் திறந்து அமர்ந்து கதவை மூடினாள். அதற்குள் பின்னால் இருந்து வாகனங்களின் ஒலிப்பான்கள் காதுகளைப் பிளந்தன. வெங்கட் சட்டென ஒரு பொத்தானை அழுத்த எல்லாக் கதவுகளின் கண்ணாடிகளும் உயர்ந்து கதவு தாழிட்டுக் கொண்டது. உடனே வண்டி விரைந்தது.

ஜல்லிக்கட்டு புரோட்டஸிசா
ஆமாம் என்றபடியே நெருங்கிக் கொண்டிருந்த மற்றொரு பப்ளிக் டாய்லெட்டைப் பார்த்தாள். அதுவும் மிகவும் கூட்டம். ச்சே என்றவளின் வார்த்தையில் வலியும் இருந்தது.
வாட்.
ம்.. அந்த குப்பம் பக்கம் நிறுத்தறீங்களா. பாத்ரூம் அர்ஜெண்ட்.
ஓகே. அங்க டாய்லெட் உறுதியாக கிடைக்குமா. அர்ஜெண்டுனா எங்க வீட்டுக்கு வாங்களேன்.
வீட்டுக்கா.. நோ..நோ.. பிளீஸ் இங்கேயே இறக்கி விட்டுடுங்க.
பயப்படாதீங்க. நானும் அந்தக் குப்பத்துல தான் இருக்கேன். இது நான் வேலை செய்ய முதலாளியோட காரு.
ஓ.. உண்மையைத்தான் சொல்லறீங்களா.
ஏங்க நீங்க கைகாட்டி நிறுத்தாம போன பைக்காரனைப் பார்த்துட்டு நான் வண்டியை நிறுத்தி ஏத்திக்கிட்டேன். இப்ப கூட நம்பிக்கை இல்லையா சிஸ்டர்.
சிஸ்டருன்னு கூப்பிடிங்க பாருங்க. இப்ப நம்பிக்கை வந்துடுச்சு பிரதர். கொஞ்சம் வேகம் பிளீஸ்..

திருப்பூத்து

அன்றைய நாள் பகவதி மிக அழகான ஆடை உடுத்தியிருந்தாள். நேற்று அவளைக் காணவந்த ஒரு ஒருவர், அவளுக்கு  பட்டுச்சட்டையும், பட்டுப்பாவாடையும் வாங்கிவந்திருந்திருந்தார். பட்டுச்சட்டையில் ஆங்காங்கே மாங்காய் லட்சனை பதிக்கப்பட்டிருந்தது. பாவாடையின் இறுதியில் அதே மாங்காய் சின்னங்கள் அணிவகுத்திருந்தன. பகவதியை அவர் முன்பு பார்த்தில்லை என்றாலும் அவளுக்கு மிகப் பொருத்தமான பச்சையாடையை தந்திருந்தார். அதைப் போட்டுக் கொண்டு பகவதி தன்னைக் காண வருகின்றவர்கள் அத்தனை பேரிடமும் அந்த சட்டையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அளவுக்கு அதிகமான உற்சாகம் இருந்தது. நேற்று மொத்தமும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ, இன்று காலையிலிருந்து அவளுடைய வயிற்றில் லேசான வலியுண்டானது. ஒரு வேளை நேற்று அளவுக்கு அதிகமாக உண்டு விட்டேனோ என்று யோசித்துப் பார்த்தாள், மகிழ்ச்சியில் எந்த அளவுக்கு உண்டாள் என்றே அவளுக்கு நினைவில்லை.

தொப்புளுக்குக் கீழ்பகுதியில் அடிவற்றியில் இருந்த வலி கொஞ்சம் அதிகரித்தது. அந்த வலி அப்படியே மெல்ல மெல்ல கீழ்நோக்கி அல்குல்  வரை சென்று ஒரு சுண்டு சுண்டியது. இதுநாள் வரை இப்படியொரு வலியை அவள் உணர்ந்ததே இல்லை. இது புதுமாதிரியான வலியனுபவம். உதவிக்கு ஒரு பெண்ணிடம் செல்ல அவளுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் கண்களுக்கு எட்டியவரை எந்தப் பெண்களும் இல்லை. அவ்வப்போது சில ஆண்கள் மேலாடையின்றி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்களையே அழைத்துவிடலாமா என்று பகவதிக்கு தோன்றியது. ஆனாலும் இத்தனை நாள் போற்றிக் காப்பாற்றிய ஏதோ ஒன்று அவளைத் தடுத்துவிட்டது.

வயிற்றுப்பகுதியிருந்து அல்குல் வரை சொல்லப்படாத வலியோடு நின்றபடி இருந்தாள். நேற்று புதிதாக உடுத்திய பட்டுப்பாவடையில் ரத்தக் கரைப் பட்டது. பகவதி தனக்குள் பொறுமிக் கொண்டிருந்தது அங்கு அலைந்துக் கொண்டிருந்தவருக்கு கேட்டதோ என்னவோ, அவர் பகவதியின் முன்னால் இருந்த பொருட்களையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, ஒரு திரையை இழுத்துவிட்டார். பின்பு பகவதியை நெருங்கி அவளுடைய சட்டையையும் பாவாடையும் எடுத்துவிட்டார். பகவதிக்கு வெக்கமாகவும் அருவருப்பாகவும்  இருந்தது. எதுவும் செய்ய முடியாதவளாய் நின்றாள். முன்னும் பின்னுமாக சட்டையையும் பாவாடையையும் பார்த்தவர், அதிர்ந்தார். பகவதியை ஆச்சிரியமாகப் பார்த்துவிட்டு, அவளுடைய அல்குலை தொடையோடு தடவிப் பார்த்தார். கை பிசுபிசுத்தது. வெளியே சென்றார். சிலரை அழைத்து பாவாடையைக் காட்டிப் பேசினார். எல்லோரும் ஆண்கள் என்பதால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. அந்த மனிதனர் வீட்டிற்கு ஓடி, தன்னுடைய மனைவியிடம் காட்டினார். அவள் பகவதி பெரியவளாகிவிட்டாள் என்று கூறினாள். அதன்பின் பகவதியை அந்த இடத்திலிருந்து தூக்கி தனியாக குடிசைக்குள் அந்த மனிதரே வைத்தார். எல்லோரிடமும் இந்த சம்பவத்தைக் கூறி, அவளை யாரும் பார்க்காத வண்ணம் செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்டது போல பகவதி எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். மூன்றாம் நாள் அவளை ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி மீண்டும் புத்தாடை கொடுத்து நிறுத்திவைத்தார்கள். மீண்டும் அவளை பார்க்க நிறைய நபர்கள் வந்தார்கள். யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து தனக்கு எனக்கு நடந்தது என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தாள் பகவதி. ஆனால் எல்லோருமே அவளுடைய அறைக்கு வராமல் அவளை கைகூப்பி பார்த்துவிட்டு சென்றனர். மனவருத்ததுடன் தன்னுடைய பீடத்திலேயே நின்றிருந்தாள் செங்கன்னூர் பகவதி அம்மன்.

சோழ ரகசியம் – பாகம் 2

உடையார்குடி கிராமம் சோழப்படைகளால் சூழந்திருந்தது. மன்னர் உடையார் சிறீ ராஜராஜர் தனித்தேரிலும், மும்முடிச் சோழப் பிரம்மராயர், தளபதிகள், படை தலைமையாட்கள், ஒற்றர் படைத் தலைவர் போன்றோர் குதிரையுடனும் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் நடுவே நின்று பறையை மிகவும் வேகமாக அடித்து, “இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஆதித்த கரிகாலன் கொலையில் இங்கிருக்கும் ஒவ்வொரு பிஞ்சுகளுக்கும் கூட சம்மந்தம் இருப்பதை அறிகிறோம். நெடுநாட்கள் நடந்த விசாரணையில் அவை தெளிவாக மக்களுக்கு நிறுபனம் செய்யப்பட்டன. அதனால் உடையார் குடியில் இருக்கும் அந்தணர்னர்களையும், பெண்டுகளையும், சிறார்களையும் அவர்களோடு உறவுமுறை கொண்டுள்ள அனைவரையும் சோழ தேசத்தினை விட்டு நாடு கடத்துகிறோம். அவர்கள் அனைவரின் சொத்துகளும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். வாழ்க சோழம். வாழ்க உடையார் சிறீ இராஜராஜர்.” என்று அறிவித்தனர்.

அந்தணர்களிடமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆடைகளோடு அவர்களை அணிவகுக்க வைத்தார்கள் சோழவீரர்கள். மும்முடிச் சோழப் பிரம்மராயர் தனியாக ஆட்களை நியமித்து அவர்களின் அடையாளங்களை சரிபார்த்தார். சில வீரர்கள் அந்தணர்களின் உறவுகளையும் அவர்களின் உறவு முறைகளையும் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். பெண்களில் சிலரும், ஆண்களில் சிலரும், ஆதித்த கரிகாலரின் கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என சத்தம் எழுப்பினார்கள். சிலர் கர்பிணிப் பெண்களுக்கும் இதே தீர்ப்பா எனவும், பச்சிளம் குழந்தைகளுக்கு இதிலென்ன சம்பந்தம் எனவும் கூச்சல் போட்டார்கள்.

மும்முடிச்சோழப் பிரம்மராயரே அனைத்தும் விடையளிக்கும் விதமாக, “நாங்கள் இங்கிருக்கும் அனைத்து நபர்களும் சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரின் கோரக் கொலையில் சம்பந்தம் இருப்பதை அறிந்தோம். உடையார் சிறீ இராஜராஜ சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முறையாக வழக்குகளும், வாதங்களும் எடுத்துரைக்கப்பெற்று அவற்றை நிறுபனம் செய்தும் உள்ளோம். சோழமக்களும் அதனை உறுதி செய்துள்ளார்கள். மாமன்னர் தீர்ப்பு வழங்கியதும், மீண்டும் ஒன்றுமறியாதது போல நீங்கள் பேசுவதில் ஞாயம் இல்லை. சோழத்தேசத்திற்கு எதிராக தேசதுரோகத்தில் ஈடுபட்ட போதும், உங்கள் அனைவரையும் உயிரோடு நாடுகடத்தவே மாமன்னர் உடையார் சிறீ இராஜராஜர் தீர்ப்பு தந்துள்ளார். சோழமக்களின் கோபத்திற்கு ஆளாவதற்குள், இங்கு மக்கள் கிளர்ந்து எழுவதற்குள் நீங்கள் நாட்டினைக் கடப்பதே உத்தமமான காரியம்.” என்றார்.

ஒரு பெரிய வீரர்களின் வளையத்திற்குள் அத்தனையும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து சரிபார்க்கப் பட்டதாய் பிரம்மராயருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டவுடன். அவர் இராஜராஜரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தினை உணர்ந்த இராஜராஜர், கைகளை முன்நோக்கி அசைத்தார்.

வீரர்கள் சூழ்ந்திருக்கும் அந்தணர்க் கூட்டம் நகர்ந்து சென்றது. எதிர்த்துப் பேசியவர்களுக்கும், மறுத்து நின்றவர்களும் பிரம்பால் தாக்கப்பட்டார்கள். ஒரு ஊரே காலிச் செய்து செல்வதை கனத்த மனதோடு பார்த்துக் கொண்ட இராஜராஜர் அங்கிருந்து தன்னுடையத் தேரில் கிளம்பினார். இதுவரை ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு தக்க நடவெடிக்கை எடுக்கவில்லை என்ற அவரது மனவலி அகன்றது. உறவைக் கொன்றவர்களும் தயவுக்காட்டி, நாடுகடத்த கூறியிருக்கும் நல்மனதுடன் அவர் அரண்மனை நோக்கிச் சென்றார். எல்லாவற்றையும் கவனித்துவந்த பிரம்மராயர் குதிரையை வேறுபக்கம் செலுத்தினார்.
பிறகு உயிரோடு நாடுகடத்தப்படுவதை அறிந்த சோழ மக்கள் வெகுண்டு எழுந்து அந்தணர்கள் வாழ்ந்த வீடுகளை தீவைத்தார்கள். அவ்வூரே தீப்பிழம்பாக மாறியது. அந்நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாக சோழர் படை அந்தணர்களையும், அவரது உறவுகளையும் சேர நாட்டை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருந்தது. அவ்வாறு போகின்ற வழியில் சில விசயம் அறிந்த சோழமக்கள் அவர்களை துன்புருத்தினர். சோழப் படைவீரர்கள் அதனை தடுத்து அந்தணர்களை முன்நோக்கி அழைத்துச் சென்றது.

***
பெண்கள் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும், சிறுவர்களும் நடப்பது புரியாது தாய் தந்தையோடு ஒடுங்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். ஆண்களுக்குள் இதுவரை இருந்த சோழப் பகைமை கொழுந்துவிட்டு எறிந்துக் கொண்டிருந்தது. கர்பினியாய் இருந்த ஒருபெண் எப்படி இந்த சோழ தேசத்தினை நிர்மூலம் ஆக்குவது என வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு சொல்லித் தந்துகொண்டிருந்தாள். வெற்றிலை எச்சிலை துப்பி, கல்லெடுத்து எரிந்து கனல் பொங்கும் கண்களோடு சோழ மக்கள் ஏசியதை வழியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
சோழத்தை ஏசுவதிலேயே கவனம் கொண்டமையால் அவர்களின் இருபுறமும் கிராமத்திற்கு கிராமம் படைவீரர்கள் கூடிக்கொண்டு போவதையும், ஏற்கனவே அவர்களோடு வந்த ராஜராஜரின் படைவீரர்கள் விலகிக்கொள்வதையும் அவர்கள் கவனிக்கவில்லை.
காடுகளின் ஊடே நடந்து ஒரு சமவெளியை கூட்டம் அடைந்தபோது, அந்தக்கூட்டத்தினை விட பெரிய அளவில் படைவீரர்கள் இருந்தார்கள்.

வாழ்க பாண்டிய தேசம் என்றொரு சத்தம் கேட்ட திசையை நோக்கினான் வாமதேவம். ஒரு வயதான மூதாட்டி கையில் கம்பினை ஊன்றி நடைதளர்ந்து வந்தவளிடமிருந்து அந்த சத்தம் வந்திருக்க கூடும். அவளின் மீது கண்களைப் பதித்தான். அவள் மீண்டும் வாழ்க பாண்டிய நாடு என்று கத்தினாள். இடைப்பட்ட கூச்சலிலும் அந்த மூதாட்டியின் அருகில் இருந்த சிறுவர்களும் பாண்டியர் புகழ் உரைப்பதை கேட்ட வாமதேவம் அதிர்ந்தான்.

“சோழதேசத்தில் அந்நியர்களுக்கு அடைக்கலம் தந்தது எத்தனை பெரியக் குற்றம். மன்னர்களின் நல்மனதினை இவர்கள் இப்படி நயவஞ்சமாக அல்லவா பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த பிஞ்சுகள் சோழ தேசத்தில் பிறந்தும் வாழ்ந்தும் இம்மண்ணை நேசிக்கவில்லையே. எத்தனை வன்மம். இதோடு அனைத்தும் நிறைவடையட்டும்.” என தனக்குள் உரையாடிக் கொண்டிருந்தவன், தன் இடையிலிருந்த சங்கை முழங்கினான். அந்தச் சத்தம் நிறைந்த காட்டில் மரங்களிடைப் புகுந்து அனைவருக்கும் கேட்டது. சோழ வீரர்கள் அப்படியே நின்றர். குதிரைகள் கூட ஒரு அடி எட்டுவைத்து அப்படியே நின்றன.

சோழ தேசத்திற்கு எதிராய் இவர்கள் இடும் கூச்சலையும், வசவுகளையும் கேட்டுக் கொண்டேப் பயணித்துவந்தோம். மாமன்னர் சிறீ இராஜராஜப் பெருவுடையார் இவர்களை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தாலும், முக்காலமும் அறிந்த நம் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் கட்டளையப்படி இவர்களில் சிறு பிஞ்சுகளை கூட உயிரோடு விடுவதென்பது நாளைய சோழப் பேரரசின் பேரழிவுக்கு ஒப்பாகும். மாந்திரிக தாந்திரிகத்திலும், அதிர்வண வேதத்திலும் வல்லவர்களான இவர்கள் நேரடிப் போரில் நம்மை வீழ்த்த முடியாது என்றாலும், பிற மந்திர வேளைகளில் ஈடுபட சகல வழிகளும் உண்டு. ஆகவே அனைவரையும் மண்டியிட வையுங்கள்.

வீரர்கள் விரைந்து செயல்பட்டார்கள்.

முன்சென்ற சேனைத் தலைவன் தன்னுடைய இடத்திலிருந்து ஒரு மஞ்சள் நிற கொடியை காண்பித்தான். வீரர்கள் சோழ கூட்டத்திற்குள் நுழைந்து ஆண், பெண், சிறார்கள் என மூன்றாய்ப் பிரித்தனர். “என்ன செய்கின்றீர்கள். எதற்காக என் மனைவியைப் பிரிக்கின்றீர்கள், எதற்காக என் பேரனை கொண்டு செல்கின்றீர்கள்” என எல்லாபக்கமும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அக்கேள்விகளுக்கு விடை சொல்வாரில்லை.

தலைமை படைவீரனான மங்களநேசன் அக்கூட்டத்தின் முன் தன் குதிரையை செலுத்தி அவர்கள் முன்பு நின்றான்.

“இறுதி கிராமத்தினையும் கடந்து வந்துவிட்டோம். இன்னும் இரண்டு பரலாங்களுகள் கடந்தால், நீங்கள் வேறு தேசத்திற்கு உரியவர்களாகிவிடுவீர்கள். அதனால் கூட்டத்திற்குள் இருக்கும் நம் தேசத்து ஒற்றர்கள் எழுக” என்றான்.

அந்தணர்கள் திகைத்தார்கள். என்ன நம் கூட்டத்திற்குள் சோழ தேசத்து ஒற்றர்களா. இதெப்படி சாத்தியம். நாம் மிகவும் சாமர்த்தியமாக நம் குலத்தவர்களை மட்டுமே உடையார்குடியைச் சுற்றி குடியமர்த்தி வைத்தோம். என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஆங்காங்கே.. சிலர் எழுந்து நின்றனர். அவர்களை முன்நோக்கி வருமாறு சைகை செய்தான். அவர்களை வீரர்கள் சோதித்தார்கள். அடையாளங்கள் சரியாக இருந்தன.

சருகுகள் உதிரும் சத்தம் மட்டுமே கேட்டது. அனைவரும் அமைதியானார்கள். அப்போது குதிரைகள் விரைந்துவரும் சத்தம் கேட்டது. அனைவர் பார்வையும் அங்கு செல்ல… மூன்று குதிரைகள் அவர்களை நோக்கி வந்தன. அதில் இரண்டில் இருந்தவர்கள் தங்களுடைய அடையாளங்களை மறைத்திருந்தார்கள். பிரம்மதேவராயரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. “பிரம்மதேவராயர் ஒழிக” என கூட்டத்தில் யாரோ சத்தமிட அனைவர் கழுத்துகளின் மேலும் வீரர்களின் வாள் அடுத்தநிமிடம் இருந்தது.

“அதர்வண அந்தணர்கள். சோழப் பேரரசின் கீழ் நீங்கள் வந்தபோதே நாங்கள் உங்களையும் சோழர்களாகவே எண்ணினோம். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையை கோரமாய் கொலை செய்துவிட்டு அதனை பெருமை பேசி குழந்தைகளை வளர்க்கின்றீர்கள். அனைத்தும் அறிந்தும் தர்மக் கடவுளான இராஜஇராஜ சோழர் வழக்கு எடுத்து ஆதாரம் கொண்டு நிறுவி உங்களையெல்லாம் கொல்ல மனமின்றி நாடுகடத்த ஆனையிட்டிருக்கிறார். ஆனால் அத்தகைய மாண்புகொண்டோரையும் உங்களால் மதிக்க முடியவில்லை. வரும் வழியெல்லாம் சோழத்துக்கு எதிராய் உங்கள் ஏச்சுகளும், பேச்சுகளும் இருந்தன.”
“இனி உங்களால் படைதிரட்டி சோழத்தினை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அந்நிலையை கடந்துவிட்டோம். சோழப்பேரரசின் மகாசேனைக்கு இவ்வுலகே பயம்கொள்ளும். ஆனால் பேடிகளைப் போல மறைந்து திட்டம் தீட்டி, தந்திர மந்திர யாகம் வளர்த்து உங்களால் தொடர்ந்து இடையூருகள் உண்டாகும். எனவே…” என கட்டளைப் பிறப்பிக்கும் முன் தன்னுடைய இடபக்கம் நின்ற குதிரையின் மீதிருந்தவரைப் பார்த்தார். அவர் கைகளில் ஏதோ செய்கை செய்ய, பிரம்மதேவ ராயர் அதிர்ந்து கண்களை விரித்தார். பின்பு தன்னை மீட்டுக் கொண்டு சிறார்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்தகணம் குழந்தைகளும், சிறார்களும் கொல்லப்பட்டனர். அதர்வணப் பெண்களும், ஆண்களும் திகைத்து கதரினார்கள்.
பிரம்மதேவராயர் மீண்டும் அந்த குதிரைமேலிருந்த உருவத்தினைப் பார்த்தார். இம்முறையும் அவருக்கு செய்கையால் கூறப்பட்டது. ஓம் என்று அந்தண ஆண்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு கட்டளைகள் செல்ல அனைவர் தலையும் உருண்டது.

ஒருபக்கம் ஆண்கள் மடிந்து கிடக்க, மறுபக்கம் சிறார்களும், குழந்தைகளும் சிதைந்து கிடக்க. நடுவே பெண்கள் கூட்டம் பெரும் ஓலம் இட்டு கதறிக் கொண்டிருந்தது. அடுத்தது அவர்கள் தான் என்று நினைக்கையில் பிம்மதேவராயர் அருகில் இருந்த உருவம் தன்மேல் போர்த்தியிருந்த ஆடையை சுழற்றி வீசியது. அதைப் பார்த்த அனைவருமே கண்களை முடிந்தமட்டும் திறந்து தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள். அது குந்தவை நாச்சியார்.

“கூட்டத்தில் கற்பினிகள் இருக்கிறார்கள். அவர்களையாவது விடுங்கள். சூலிப் பெண்களை கொல்வது சோழ தேசத்தை நிர்மூலமாக்கும்.” என்று கத்தினாள் ஒரு மூதாட்டி. அதனை மற்றப் பெண்களும் ஆமோதித்து குரல் எழுப்பினார்கள்.

குந்தவை பேசத்தொடங்கினாள். “ஆலகால விசத்திற்கெல்லாம் கருணை காட்டுதல் என்பது இயலாது. பாரதத்தில் அர்ஜூனன் செய்த தவறை நாங்களும் செய்ய மாட்டோம். உங்கள் கண்முன்னே உறவுகள் கொல்லப்பட்டமைக்கு காரணம் பெண்களாகிய நீங்களே சோழ தேசத்திற்கு எதிரிகள். நீங்களே எய்தவர்கள். ரவிதாசனும், உங்களுக்கு துணை போனவர்களும் வெறும் அம்புகள். சோழத் தேசத்து பெண்கள் மீது நீங்கள் வன்முறையை உங்கள் உறவுகளைக் கொண்டு ஏவுனீர்கள். எங்கள் பெண்களின் முலைகளையும், மூக்கினையும் அறுத்தீர்கள். குறிகளைக் காயம் செய்தீர்கள். சூலிப் பெண்கள் என்றும் நீங்கள் கருணை கொள்ளவில்லை. இப்போது அதே கருணையை உங்களுக்கு எதிர்ப்பார்க்கின்றீர்கள். இதுகண்டு பொறுக்காது பாண்டியனைத் தண்டித்த ஆதித்த கரிகாலரையும், வஞ்சமாய்க் கொன்றீர்கள். உண்மையில் இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஆதித்த கரிகாலருக்காக அல்ல. உங்கள் மனதில் ஈரமில்லாமல் செய்த காரியத்திற்காக.”

“பிரம்மராயரே, இவர்களை தீவைத்து எரித்து சாம்பலை காவேரில் கரையுங்கள். மிஞ்சும் எழும்புகளை பொடியாக்கி வையுங்கள். சோழ தேசத்தில் நாம் கட்டப்போகும் பெருங்கற்றளிக்கு இவர்களே அஸ்திவாரம். இங்கு நடந்தவை அனைத்தும் சோழ ரகசியமாக இருக்கட்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அதற்காக நீங்கள் எது செய்தாலும் இந்தக் குந்தவை முழு ஆதரவு தருவாள்.”
பிரம்மராயர் ஓம் என்றார். எஞ்சியப் பெண்களை ஒருசேர பிணைக்கப்பட்டு முழுக்க எண்ணைய் ஊற்றினார்கள். ஓலக்குரல் எழும்ப எழும்ப தீ வானொக்கி எரிந்தது.

“அந்தணர்களைக் கொல்லக்கூடாது என்பது பரவலான கருத்தாக்கம். ஆனால் இன்று நாம் கொன்றது அந்தணர்களை அல்ல. இம்மண்ணின் எதிரிகள். நம் குலக்கொழுந்து நிகரற்ற வீரன் ஆதித்த கருங்காலனை நயவஞ்சகமாய் கொன்ற துரோகிகள். அந்தணன் என்றால் அறவோன் என்ற கூற்றின் படி பார்த்தால், இந்த துரோகிகளை மன்னித்து நாடுகடத்த சொன்ன நம் மன்னன் இராராஜ உடையாரே அந்தணன்”. என்றார் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் அருகில் தன் அடையாளம் காட்டாத நபர்.

ஆதித்த கரிகாலன் இறந்தபிறகு கடமை தவறியதாக நினைத்து வருந்திக் கொண்டிருந்த கரிகாலனின் மெய்காவல் படையினர் நெடுநாட்களுக்குப் பிறகு சிரித்தார்கள். குந்தவை கண்களிலிருந்து நீர் திரண்டு சோழத்தாயின் மடிமீது விழ, வீரர் பெருங்கூட்டம் இராஜராஜ உடையாரின் மெய்கீர்த்தியை பாடியது.

***
பிரம்மராயர் அமைதியாய் இருந்துவிட்டு, “அம்மா.. பெருங்கற்றளி என்று சொன்னீர்களே.. அது என்ன. இவர்களைக் கொன்றமைக்காகவா அதனை எழுப்பப் போகிறோம்.”
“தேவராயரரே. ஒருவகையில் அந்தக் கற்றளிக்கு இவர்களும் காரணம். ஆனால் நெடுநாட்களாய்.. இராஜராஜ சோழருக்கென ஒரு கனவு இருக்கிறது. அவர் கனவு இந்த உலகில் நிறைவேறும் போது சோழ தேசத்திற்கு எதிரிகள் என்று எவரும் இருக்க கூடாது.”
“அம்மா… கோபிக்க வேண்டாம். எல்லா எதிரிகளையும் தான் நாம் அழித்துவிட்டோமே. இன்னுமா எதிரிகள் இருப்பதாக கருதுகிறீர்கள்.”

“பிரம்மதேவராயரே.. நீங்கள் இதற்கு முன்கண்ட அரசியல் அல்ல இவை. நேருக்கு நேர் நின்று பகைமை தீர்க்கும் வல்லமையும் துணிச்சலும் அற்றுப்போய் கோழைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதோ எரிந்து கொண்டிருக்கும் இவர்கள் வெறும் சல்லிவேர்கள். ஆணி வேரொன்று இருக்கிறது. அதுவும் சோழ தேசத்திலேயே இருக்கிறது. அதனையும் இராஜராஜ சோழருக்கு தெரியாமலே அகற்ற வேண்டியிருக்கும். அதன்பின் எல்லாம் சுபமாகும்.”

ஆ.. அம்மா. யார் அந்த ஆணிவேரன்றே கூறுங்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

அவசரம் வேண்டாம், பிரம்மராயரே. இங்கு நடந்ததையே இராஜராஜருக்கு தெரியாமல் மறைத்தாக வேண்டிய சூழ்நிலை. இதைச் சரியாக செய்து முடிக்கவே நமக்கு சில காலங்கள் ஆகும். அதற்குள் தக்க காலத்தில் மற்றவற்றை எடுத்துறைக்கிறேன். வீரர்கள் எவறேனும் சந்தேகப்படும் நபர் உண்டா.

அப்படியிருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் அம்மா. அனைவருமே மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். கடுகளவும் இந்த விசயம் வெளியே தெரியாது. நாளைய வரலாறு.. இவர்கள் தூரதேசத்திற்கு அனுப்பபட்டார்கள் என்பதோடு முடிந்துபோகும். அத்துடன் பேச்சின் இடையே கற்றளி என்று கூறினாயே. அது யாருக்காக சோழர்களின் குலதெய்வமான நிதம்பசூதனிக்கா.

“இல்லை பிரம்மராயரே. சாக்தம் இம்மண்ணில் தளைத்தால் மீண்டும் சோழ தேசம் அல்லல்படும். மந்திரங்களும், தந்திரங்களும் முடக்கப்பட்டு, அன்பு சமயமொன்று இங்கு எழவேண்டும். அத்தோடு ஆதித்த கரிகாலரும், அவர் பொருட்டு இதுவரை இறந்த அத்தனை உயிர்களும், இனி இறக்கப்போகிற உயிர்களுக்கும் நல்வழிகாட்ட ஈசனையே சரணடைய வேண்டும். அதனால் பெருங்கற்றளி ஈசனுக்கு உரித்தாகும்.

ஈசன் இனி சோழநாட்டினை பாதுகாப்பான். அன்பே வடிவான அருண்மொழிக்கு இனி ஈசனே துணை.”

சோழம்.. சோழம்.. சோழம்..

சோழ ரகசியம் – சிறுகதை பாகம் 1

முன்குறிப்பு – பொன்னியின் செல்வனைப் படித்தமையிலிருந்து ஆதித்த கரிகாலச் சோழரின் கோரக் கொலையை ஏற்கவே முடியவில்லை. அதன்பிறகு இராஜராஜர் கொலைக்காரணமானவர்களை தன்னுடைய கருணைமிகு இதயத்தினால் நாடுகடத்த மட்டுமே கூறியிருக்கிறார் என்றார்கள். அவர்களின் முடிவு அவ்வாறு இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். உடையாரை படிக்கத் தொடங்கியதும், எனக்குள் தோன்றியதை சிறுகதையாக வடித்திருக்கிறேன். இது புனைவு மட்டுமே. இப்படி நடந்திருக்க வேண்டுமென்ற ஆதங்கம். இனி கதை..

மும்முடிச் சோழப் பிரம்மராயர் நிதம்பசூதனியைப் பார்த்தார். அந்த தீபந்தங்களின் ஒளியில் அவளுடைய உக்கிர கோலம் அவருக்குள் உற்சாகம் தந்தது. “தாயே. இந்த சோழ தேசத்திற்கும், சோழ பரம்பரம்பரைக்கும் நீயே துணை. நீயே துணை” என்று வணங்கினார். உடனிருந்த மூன்று நபர்கள் ஜெய நிதம்பசூதனி என்று ஒன்றாக வணங்கினார்கள். காதில் குண்டலமும், கைகளில் காப்பும், கால்களில் வீரதண்டும், மார்பில் சன்னவீரமும், கழுத்தில் சிறு அட்டிகையும், இடையில் குறுவாள் பட்டையும் அணிந்த வீரன் எதிரே வந்தான். அவனுடைய நெற்றியில் நிதம்பசூதனியின் குங்குமப் பிரசாதம் விரவியிருந்தது. “வீரனே உன் பெயரென்ன”

“அருண்மொழி”
“உடையார் ராஜராஜ சோழரின் பெயரா. தாயே.. நிதம்பசூதனி. நீயே துணை” என அவனை ஆரத்தழுவினார். “நீயே நம் சோழத் தேசத்திற்காக உயிர்துறக்கப் போகும் இறுதி மனிதனாக இருக்க வேண்டும்.” என்று கூறினார் பிரம்மராயர்.

அன்னையின் முன் மண்டியிட்டான் அவன் கரத்தில் ஓர் கூரிய அரிவாள் தரப்பட, முடிந்த கூந்தலினை வலக்கையால் இறுகப்பற்றி, இடக்கையால் தலையை அரிந்துக்கொண்டான்.
அனைவரும் அவனை பரவசமாப் பார்த்தனர். உயிர்த்துடிப்பு அடங்கும்வரை பிரம்மராயர் கண்களை மூடியபடியே இருந்தார். பிரம்மராயரை நீலன் அனுகினான். “அய்யனே, அரிகண்டம் நிறைவாய் நடந்தேறியது.”

“நீலா.. உரிய முறையைச் செய், நடுகல்மட்டும் ஒருவாரம் பின் நடப்படட்டும். ஏராளமானப் பணிகள் இருக்கின்றன. நான் அரண்மனைக்குச் செல்கிறேன். வாழ்க சோழம். வாழ்க உடையார் சிறீ ராஜராஜர்”
சுற்றியிருந்தோர் வாழ்க வாழ்க என்றனர்.

***
ஏற்ற தருணம் வந்துவிட்டது. மும்முடிச்சோழப் பிரம்மராயர் கர்ஜித்தார். அவரது கர்ஜனையில் அருகில் கேட்டுக்கொண்டிருந்த ஏழு தலைமை  படைவீரர்களும், ஒரு ஒற்றர் தலைவனும் சிலிர்த்தார்கள். ஒற்றை தீப்பந்ததில் அந்த நான்குகால் மண்டபம் கொஞ்சம் ஒளிப்பெற்றிருந்தது. திருமண் நெற்றியில் ஒளிர, இடையில் உறைவாளும், குறுவாளும் இருந்தன. முப்புரிநூல் அவரின் குறுக்கே ஓடிற்று. பிரம்மராயர் தீவிர வைஷ்ணவராக இருந்தாலும் சாக்ததின் கோட்பாடுகளை சோழத்திற்காக கற்று வைத்திருந்தார். அவை வெளியே தெரியாதவாறு ஒரு மெல்லிய துணியை போர்த்தியிருந்தார். அவருடன் இருந்தவர்கள் வேளாலன், குடியோன் என பல வேடத்தில் இருந்தார்கள். சோழதேசத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் யாவரும் அறியாவண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“சோழப் பேரரசர், எவருக்கும் ஈடில்லா வீரச் சிம்மம் ஆதித்த கரிகாலர் கொலை வழக்கு நாளையோடு முடிவுக்கு வருகிறது. சிறீ ராஜராஜ உடையார் அவர்களுக்கு நாளை தீர்ப்பு நல்குவார். அப்போது அத்தீர்ப்பிலிருந்து யவரும் தப்பிவிடாதப்படி இருக்க. நெடுநாட்களாய் சேகரம் செய்த தகவல்களை உறுதி செய்ய வேண்டும். உடையார்குடியும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களும் நம் காவலுக்கு கீழ் இன்று நள்ளிரவுக்குள் வந்துவிடும். பணி நிமிர்த்தம் பயணத்திலும், உறவினர்கள் ஊர்களுக்கு சென்றவர்களும் கூட சோழ வீரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். நாளை வரலாறு நோக்கும் தினமாக இருக்கும்”

அனைவரும் ஒரு சேர “ஓம்” என்றார்கள்.

“கவனமாயிருங்கள். திட்டத்தில் சிறிதளவு பிசங்கினாலும், இராஜராஜரின் அன்பை இழப்போம். அது மரணத்தினைவிடக் கொடியதாக இருக்கும். பணிகள் நிறைய இருக்கிறன்றன. எனவே விடைபெறுகிறேன். நீங்கள் நாளைக் காலை ஆயத்தமாக இருங்கள்.” என்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் பிரம்மராயர். அவர் சென்றதும் அதுவரை பரவியிருந்த சந்தனவாசமும் குறைய ஆரமித்தது.
“மாமன்னர் இராஜராஜ உடையார் நாளை எந்தத் தீர்ப்புத் தந்தாலும், நாம் பிரம்மராயரின் சொற்படி நடப்போம். இதனால் மன்னரின் கோபத்திற்கு ஆளனாலும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பாவோம். இது சோழத்திற்காக. உறுதியளியுங்கள்” என தலைமை ஒற்றர் வாமதேவம் கைகளை நீட்டினார். அனைவரும் அவருடைய கையின் மீது கைகளை வைத்து உறுதியளித்தார்.
***

விஜயாக்கா – சிறுகதை

29733691103_2493d06955_b

சன்னமாய் தட்டுமுட்டு சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டது. அதுவே கொஞ்சம் கொஞ்சம் அதிமாக கேட்கத் தொடங்கியது. அம்மாச்சி இருமல் சத்தம் மூலையில் இருந்துக் கேட்டது.
ஏ. கழுத.. அதான் முழுப்பு வந்துடுச்சுல்ல. எந்திருச்சி தொலைக்க வேண்டியதுதானே  என சத்தமிட்டுக் கொண்டே சட்டியில் எதையோ கடைந்து கொண்டிருந்தாள் அம்மா.
ஏன்தான் சீக்கிரமே விடிந்து தொலைக்கிறதோ. இரவு சின்னக்குஞ்சானோட விளையாடிக் கொண்டிருந்தது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. அம்மா விரிப்பைப் போட்டு என்னைக் கிடத்தியிருக்க வேண்டும். சின்னக்குஞ்சான் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டே கொல்லைப் பக்கம் சென்றேன். செங்கலை எனக்கும் சேர்த்தே பொடியாக்கி வைத்திருந்தாள் அம்மா.

கொஞ்சத்தை அள்ளி பீச்சாங்கையில் போட்டுக் கொண்டு, சோத்துக் கையில் எச்சிலைத் துப்பி செங்கல் பொடியை தொட்டு ஈ எனக்காட்டி பல்லை விளக்கினேன். அங்கிருந்து அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்று தெரியும். ஆனாலும் நான் சின்னக்குஞ்சானை பார்த்தேன். அவன் கொட்டிலிலேயே இன்னும் இருந்தான். வழக்கமாய் இந்நேரம் எழுந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஏன் நான் சீக்கிரம் எழுந்துவிட்டேனோ என்று தோன்றியது. என் காலுக்கு அடியில் ஒரு உண்டை ஓடியது. அது பீயுருட்டி வண்டு. சாணியை உருண்டையாக உருட்டி லாவகமாய் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்து. நான் குத்துக்காலிட்டு உட்காந்து அதன் உருவத்தைப் பார்த்தேன். அது இப்படியொருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறானே என்ற கூச்சம் இல்லாமல் ஓடியது. எழுந்து அதைக் காலால் ஒரு எத்துவிட்டு அம்மாவின் பக்கம் வந்தேன். அந்த வண்டு எவன்டா என்னை உதைத்தது என என்னை தேடிக்கொண்டிருக்கும், உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அம்மாவிடம் ஈ எனக் காட்டினேன். அவள் போய் வாய்க்கொப்புளி என்றவுடன் அங்கிருந்து தொட்டியிலிருந்து நீரெடுத்து வாய்க்குள் இட்டு அந்நாந்து குலவை இட்டேன். வாயிலிருந்து நீீர் மார்பில் வழிந்தது. நன்றாக கொப்பிலித்துவிட்டு முகத்தில் நீரை இறைத்து முகத்தில் அடித்தேன். டவுசர் நினைந்துவிடாதவாறு உடல்முழுக்க நனைத்துவிட்டு நிமிர்ந்தபோது, வயிற்றுக்குள் பிசைவு உண்டாகியது. கீறிச்சிடும் தகரக்கதவைத் திறந்தேன். உள்ளே பெரிய குழியும் இரு கால் வைக்க மேடும் கொண்ட கக்கூஸ் இருந்தது. அதன் வலதுபக்கம் ஒரு பழைய இரும்பு சட்டியில் நிறைய சாம்பலும், கதவுக்கு அருகே நீர்வாளியும் டப்பாவும் இருந்தன. டவுசரை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு அந்த கால்வைக்கும் இடத்தில் ஒரு காலை கவனமாக வைத்துக் கொண்டேன். அடுத்தக் காலை வைக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இது பெரியவர்களுக்கு செய்யப்பட்டது. அதனால் குழியின் அகலம் அதிகமாக இருந்தது. குழிக்குள் எல்லோரும் கழித்த மலம் விதவிதமாக இருந்தது. நிறைய சாம்பலை அள்ளிப் போட்டிருந்தார்கள். அப்படியும் அதில் இருந்த மஞ்சள் நிறம் மறைவதாய் இல்லை.

என்னுடைய மலம் தொங்கியவாறு இருந்து அறுந்து அறுந்து விழுந்தது. வயிற்றுள் ஒரு வலியுடன் கூடிய இன்பம் கிடைத்தது. எனக்கு அருகில் ஒரு எறும்பு எதையோ தூக்கிக் கொண்டு ஓட அதைப் பின்தொடர்ந்து அங்கும் இங்கும் அலைந்தவாரு மற்றொரு எறும்பும் ஓடிக்கொண்டிருந்தது. அதனுடைய உணவை இது எடுத்துக் கொண்டு போயிலிருக்கலாம். சட்டென குழிக்குள் வெளிச்சம் பரவியது. அதன்பின்பக்கம் இருந்த தகரத்தை தூக்கி எட்டிப்பார்த்த ஒட்டச்சி “ஏலே.. மணி என்னாவுது இன்னும் கக்கூச உட்காந்துக்கிட்டு கிடக்க என்றாள்”. நான் அதிர்ந்து என்னுடைய டவுசரை முன்னுக்கு வைத்து மறைத்து சுவரோடு நின்றிருந்தேன். “என்னாடா பல்லிக் கணக்கா சுவத்துல ஒட்டிக்கிட்டு இருக்க. அந்த சாம்பல அள்ளி குழிக்குள் போடு” என்றாள். எனக்குள் எழுந்த படபடப்பு அடங்குவதற்குள், அவளிடம் திட்டுவாங்ககூடுமென நான் டவுசரை எங்கு வைத்துக் கொண்டு சாம்பலை அள்ளுவது. அவளிடம் அனுமதி கேட்டு கழுவிக் கொள்ளலாமா. ஒருவேளை அதுக்கும் திட்டினாள் என்ன செய்வது என்று பயந்து டவுடசை தூர வைத்துவிட்டு சாம்பலை கையில் அள்ளிப் போட்டேன். “இன்னும் போடு” .நானும் போட்டேன்.

சாம்பல் முழுக்க மூடியதும், அகப்பையால் அள்ளி அள்ளி கூடைக்குள் போட்டுக் கொண்டாள். எல்லாவற்றையும் அள்ளுவதற்குள் நான் ஓடிச்சென்று கழுவி டவுசரையும் போட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் வீ்ட்டின் வாசல் பக்கம் வந்து நின்றாள். ஐயயோ.. இப்போதும் திட்டுவாள் போலிருக்கே என்று நான் பின்பக்கம் ஓடினேன். “அம்மா.. அம்மாவோவ்..” என்னுடைய அம்மா வந்து பார்த்தால், ஒட்டச்சியைப் பார்த்தும் அவள் கக்கூசுக்குப் போய் தண்ணியை ஊற்றிவிட்டாள். ஒட்டச்சி விளக்கமாறால் அந்தக் குழியைக் கழுவி விட்டு தன்னுடைய கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஏன்டா கொஞ்ச நேரம் நின்னு தண்ணியை ஊத்திக்கிட்டு வந்திருக்கலாமுள்ள”
“அந்த ஒட்டச்சி, நான் ஒட்காந்து இருக்கும்போதே திறந்து பார்த்துடுச்சு.”
அம்மா சிரித்துக் கொண்டே, “நீ பொழுது முழுக்க தூங்கி எந்திருச்சி வெளுக்கிப் போனா, அவ திறந்து பார்க்கத்தான் செய்வா. சீக்கிரமே கக்கூசுக்கு போயிட்டு வந்தடனும்” என்றாள். நான் சரியென மண்டையை ஆட்டினேன். இரண்டு அடி என்னைக் கடந்து எடுத்துவைத்தவள். சற்று முகத்தினை மட்டும் திருப்பி,..”அவளை ஒட்டச்சின்னு இனி சொல்லாதே, விஜயாக்கன்னு கூப்பிடு. பாவப்பட்ட சாதியில்ல பிறந்து ஊரு பீயை அள்ளி பிழைச்சுக்கிட்டு இருக்கா.” என்றபடி நடந்தாள் அம்மா.

 

 

கலைத்தாகம் – சிறுகதை

yyஎன்னடே, எதுக்கு ஆளனுப்பி விட்டே.
அண்ணே அடுத்த புரோஜெக்ட்
அதுக்குள்ளவா. ஏன்டே, போன தடவை கொடுத்ததையே முடிக்கறத்துக்குள்ள போதும் போதும் ஆகிடுச்சு. செத்த கழிச்சு ஏற்பாடு பண்ணக்கூடாதா.
அதெல்லாம் நம்ம கையிலேயா இருக்குதுண்ணே. இப்பவே பதுக்கி வைச்சுக்கிட்டாத்தான் அவுங்களுக்கு தோதுவா இருக்கும் போல. எல்லாத்தையும் விரசா முடிங்கன்னு சொல்லிடாங்க.
அந்தாளுக்கு வேற சோளியே இல்லையா. போன தடவக் கொடுத்தை வித்திருப்பான்னாலே.
நீங்க வேற நாம கொடுத்தது இரண்டே இரண்டு. அந்தாளுக்கு முதலமைச்சர் மாதிரி ஒன்பது ராசியாம். போன தடவை நூத்தியெட்டு பொருள் கடல் தாண்டி போயிருக்காம்.
அடக் கடவுளே, கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனா கோயிலையேக் காணாமுன்னு பழமொழி வந்திடும் போல. அது சரி. இந்த தடவை கொஞ்சம் விலையை ஏத்தி சொல்லிடு. ஒன்னுத்துக்கும் ஆகாத கூட இங்க எடுக்கறத்துக்கு படாதபாடு பட வேண்டிக் கிடைக்கு.
அதெல்லம் சரிண்ணா. நான் பார்த்துக்குறேன். இந்த தடவை எல்லாமே கல்லுங்க. ஒரு ஐம்பொன், செம்பு சிலை கிடையாது. நமக்கு பொருளை எடுத்துக்கிட்டு போறது செம சுலபம்.
சரி கிடக்கட்டும். எந்தக் கோயில், எந்தச் சிலை.
அண்ணே, திருவட்டார்.
அட்ரா.. அந்த ரதி மன்மதன் சிலையா.
இல்லைண்ணே.
டேய் பெருமாளேவாடா.
அய்யோ.. அண்ணே இது ஏதோ ஒரு கோமாளி அவன் சுன்னையை எடுத்து அவனே வாயில வைச்சுக்கிற சிலையாம்.
கருமம்,.. கருமம்.. இதையெல்லாம் எடுத்துக்கிட்டு வெளிநாட்டுக் கொண்டு போய் நம்ம மானத்தை வாங்கவாடா. இந்த மாதிரி சிலையெல்லாம் எதுக்குத்தான் நம்ம சிற்பிங்க செதுக்கி வைச்சானுங்களோ. அதுசரியாப் போச்சு. வேற என்ன சிலை வேணுமாம்.
இப்போதைக்கு இதுமட்டும் தான்ணே. இந்தச் சிலையை பாண்டிச்சேரி குடோனுக்கு அனுப்பி வைச்சாதான் அடுத்தது.
ஓகோ. சரிடா. இதுக்கு அந்த மானங்கெட்ட ஆபிசருங்கள சரிக்கட்டி சீக்கிரம் கோயில் மண்டபத்தை வேலை செய்ய வைக்கனும், அதுக்கு அப்புறம் அந்தத் தூணை மட்டும் மேல ஒடச்சு. அது பின்னமாகிடுச்சுன்னு கோயிலுக்கு வெளியே போட்டுடலாம். எல்லோரும் அதைப்பத்தி மறந்த உடனேயே அதை பாண்டிச்சேரிக்கு அனுப்பிடலாம். நான் அந்த மரத் தேரை வாங்கி வைச்சுருக்கேனே, அதுல இருக்கிற பிரம்மா சிலைக்கு ஒரு கணக்கு வந்திருக்கு. இவனுங்கக்கிட்ட கேளு மரச்சிலையை வாங்கிக்குவானுங்களான்னு.
அண்ணே அவனுங்களுக்கு இந்த மரமெல்லாம் தேவைப்படாதுன்னா, இப்போதைக்கு கல்லுக்குதான் வேலையே.
சரிடே. வந்திருக்கிறது டெல்லிக்காரன் பாரு, நம்ம ஊரு காசுக்கு மதிப்பு போடறான். வெளிநாட்டுக்காரன் யாராவது சிக்குன்னா சொல்லு. அதைக் கொடுத்திடலாம். மரம் பாரு நாம ரொம்ப காலம் வைச்சுக் காப்பாத்த முடியாது.
ம்.. நீங்க போயி திருவட்டாரு வேலையைப் பாருங்க. நான் சொல்லியனுப்பறேன்.
சரிடே.

குறிப்பு : நான் மிகவும் ரசித்துப் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு உந்துதலாக அமைந்த திருவட்டாறு ஆதிக்கேசவப் பெருமாள் கோயில் பற்றி சமீபத்தில் கேள்வியுற்றேன். திருவட்டாறு பற்றி இணையத்தில் தேடியமையால் எண்ணற்ற செய்திகள் கிடைத்தன. அச்செய்திகளையும் ஒரு கதையும் இணைக்க எனக்கு தற்போதைய நிலையில் சிலைத்திருட்டு செய்திகள் கை கொடுத்தன. அதனையே கதைக்களமாக்கியுள்ளேன்.
மங்களாசனம் செய்யப்பட்ட கோயிலின் துரும்பை எவரும் எடுக்க முடியாது என்று நினைத்தால் மூலவரையே விலைக்கு விற்றுவிடக்கூடியவர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள். இறை நம்மைக் காப்பது போல தன் சிலையையும் காத்துக் கொள்ள வேண்டும்.

பொங்கச்சோறு – சிறுகதை

pongalsoru

அன்று மாலையில் பெய்யத்தொடங்கிய மழை சன்னமாக இருள்கவிழ்ந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. உறவுமுடிந்து கிடக்கும் உடல்போல பூமி குளிந்திருந்தது. எங்களுடைய அறை சன்னல் வழியாய் மழையின் இசையை கேட்டவாறு படுத்திருந்தோம். நீண்டிருந்த மௌனத்தை “அப்பாக்கிட்ட ஒரு கதை கேளுடா மவனே” என வெட்டினாள்.
“டேய்.. பயலே.. அம்மாக்கிட்ட சொல்லிடு. கதை முழுசும் கேட்கலைன்னா.. அபிமன்யூ போல எங்காவது போய் மாட்டிக்குவேன். அதனால கதை முழுசும் முடியிற வரைக்கும் அம்மா தூங்க கூடாதுன்னு”
“தூக்கம் வராத மாதிரி கதையை சொல்லச் சொல்லுடா. ”
“கதையெல்லாம் தூக்கம் வரதுக்கு சொல்லறதுல்ல இல்லை. அப்படி தூக்கம் வரதுக்குன்னு சொல்லியிருந்தா, பாதிக் கதைதானே இருக்கும்.”
“அதெல்லாம் சரிதான். கதையை ஆரமியுங்க. உள்ளுக்குள்ள பையன் தூங்கிடப் போகுது”
“ம்.. ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தாராம்…”
“ம்கூம்.. இராஜா கதை வேணாம்.”
“ஏ.. என்னடீ. அது வேணாம் இது வேணாமுனுக்கிட்டு. தெரிஞ்ச கதையைத் தானே சொல்ல முடியும்.”
“வேற ஏதாவது கதையைச் சொல்லுங்க.”

“சிவபுரமுன்னு ஒரு ஊரு. அந்த ஊருக்கு நடுவிலேயே ஒரு சிவன்கோயில் பாழடைஞ்சுக் கிடந்துச்சு. அந்த சிவன்கோயிலுக்கு தினமும் ஒரு அய்யர் மட்டும் வந்து பூசை செஞ்சிட்டு போவாரு. கையில கொஞ்சம் சக்கரைப் பொங்கல் எடுத்துவருவாரு. பிள்ளையாருக்கும், சிவனுக்கும் இரண்டு குடம் தண்ணியை ஊத்தி கழுவிட்டு, மத்த சாமிகளுக்கெல்லாம் கொஞ்சம் தண்ணியை தெளிச்சு விடுவாரு. ”
“ஏங்க எல்லா சாமிக்கும் அபிசேகம் செய்ய மாட்டாறா..”
“ஒத்த ஆளு, அந்தக் கோயில இருக்கிற நாயன்மார்களே 63 பேரு, அப்புறம் மீதம் வள்ளி, தெய்வானை முருகன், ஏழு கன்னிகள் அதெல்லாம் ஒழுங்கா கழுவி வேலை செய்யனுமுன்னா பெரிய கூட்டமுள்ள வேணும்..”
“சரி கதையை சொல்லுங்க..”

“தனக்காக ஒருத்தன் தினமும் வந்து நெய்வேத்தியம் பண்ணறான்னு, சிவபெருமான் கைலாயத்துல இருந்து தினமும் நேரத்துக்கு கோயிலுக்கு வந்துடுவாராம். இந்த அய்யரு பூசையெல்லாம் செஞ்சிட்டு அந்தப் பொங்கலை சாமிக்கு கொடுக்காம எடுத்துக்கிட்டு போயிடுவாறாம்.”
“ம்கூம்.. ஆரமிச்சுட்டிங்களா..”
“இந்தா.. இப்படி இடை இடையே தடுத்தீன்னா.. கதையெல்லாம் சொல்ல மாட்டேன். மகனே உன் ஆத்தா.. கதை சொல்லவிடமாட்டேங்குதுடா.”
“ம்..சரி.. சரி.. அப்பனாச்சு, மகனாச்சு.. ”

“அந்தக் கோயிலுக்கு சிவபெருமான் தினமும் போறதும், அந்தக் கோயில் அய்யர் பொங்கலைத் தராம வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறதையும் கைலாயத்துல இருக்கிற இரண்டு பூதங்களுக்கு தெரிஞ்சுப் போச்சு. அதுங்க இரண்டும் சண்டி, முண்டின்னு பேரு. நிறைய குறும்பு பிடிச்சதுங்க. தங்களுக்கு தெரிஞ்சத மறைச்சு வைக்காம, எல்லா சிவகணத்தையும் கூட்டி ஒரு நாடகமா நடிச்சு காட்டியதுங்க. சண்டி சிவபெருமான் மாதிரி உட்காந்து கொள்ள, முண்டி அய்யராக வந்து பொங்கலை அவரிடம் காட்டி உடனே மூடிக்கொண்டது. சண்டி அதைப் பார்த்து தனக்கு பொங்கல் கிடைக்கவில்லையே என ஏக்கப் பெருமூச்சு விட, முண்டி பொங்கலை வெளுத்துக் கட்டுவதாக நடிச்சது. இதையெல்லாம் பார்த்த சிவ கணங்கள் வயிறு குலுங்க குலுங்க சிரித்தன. கைலாயத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சிவபெருமானுக்கு இந்த சிரிப்புச் சத்தம் கேட்டது.”

“எதற்காக இந்த சிரிப்புச் சத்தம் வருகிறது என்பது சிவபெருமானுக்கு தெரிஞ்சுப் போச்சு. சண்டி, முண்டி இரண்டு பேரையும் கைலாயத்தை விட்டுட்டு சிவபுரம்  கோயிலுள்ள இருக்க சொல்லிட்டாரு. சிவபெருமானுக்கே பொங்கல் தராத அய்யரா, பூதங்களுக்கு தந்திடப் போறாரு. இரண்டு மூனு நாளா சாப்பாடு கிடைக்காம பூதங்கள் பசியாவே கிடந்துச்சுங்க. அடுத்த நாளு அய்யர் வந்து பூசை செய்யும் போது பொங்கல் மொத்தத்தையும் காலி பண்ணிடுச்சுங்க. சாப்பிட்டதுக்கு அப்புறமா அதுகளுக்கு மறுபடியும் குறும்புத்தனம் வந்துச்சு. அய்யர் வீட்டுக்கு கிளம்பும் போது பொங்கல் சட்டியை எடுத்தா. அது கணம் இல்லாம இருந்துச்சு. அய்யருக்கு உள்ளுக்குள்ள பயம் வந்துச்சு. மெதுவாக சட்டியை திறந்து பார்த்தா கொஞ்சம் கூட மிச்சம் இல்ல.”
“அய்யரு சட்டியை அங்கேயே போட்டுட்டு ஊரு முழுக்க சாமி பொங்கல சாப்பிட்டுச்சுன்னு சொன்னாரு. ஒன்னு ரெண்டு பேரு அடுத்த நாள் பொங்கலை செஞ்சு கொண்டுவந்து படைச்சாங்க. அதையும் சண்டியும் முண்டியும் சாப்பிட்டுட்டு காலியாகவே வைச்சுச்சுக்கு. அவங்களும் மக்கள்கிட்ட சாமி பொங்கலை சாப்பிடுவதைச் சொன்னாங்க. ”
“கொஞ்ச நாள் கழிச்சு. சிவபெருமானுக்கு சண்டியையும், முண்டியையும் பத்தி நெனச்சுக்கிட்டாரு. சரி அருளே வடிவான நாமளே மன்னிக்கலேன்னா எப்படியென, அவர்களை மன்னிச்சு சிவபுரத்துக்கு வந்தார். அந்த ஊரே தலைகீழா மாறிப்போயிருந்துச்சு. சாலையில் இரண்டு பக்கமும் சொகுசு வண்டிகளிலிருந்து மிதிவண்டிவரைக்கும் வரிசை கட்டி நின்றன. பொங்கல் வைக்க தனியாக ஒரு திடலே இருந்தது. அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பொங்கல் வைச்சுக்கிட்டு இருந்தாங்க.பொங்கலுக்கு தேவையான அரிசியும், வெல்லமும் விற்பதற்காக கடைகள் இருந்தன. எங்கிருந்தோ வந்த யாகசம் கேட்பவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். பொங்கலை வைக்க சட்டிகள் ஒரு பக்கம் வானுய அடுக்கப்பட்டிருந்தது. எல்லாத்தையும் பார்த்துட்டு சிவபெருமான் கோயிலுள் போனார். அங்கே சண்டி முண்டியோட சேர்ந்து பக்கத்து ஊருல இருக்கிற எல்லா சாமிகளும்  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “

கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா? – என் கேள்வியும் ஜெமோ பதிலும்

11

அன்பு ஜெ,

சமயம் சார்ந்த வழிகாட்டுதல்களுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேறு.

உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோரதெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாயகாளி, பூமாகாளி, பாதாளகாளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்தத் தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.

ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சி பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ளன. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகர்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

நன்றி.

ஜெகதீஸ்வரன் நடராஜன்

***

அன்புள்ள ஜெகதீஸ்வரன்

தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல் வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.

ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா, கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]

இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.

ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.

பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?

பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.

இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?

இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.

கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.

இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.

அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?

என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.

அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.

இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.

ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்

கடைசியாக இரண்டு விஷயங்கள்.

ஒன்று: ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித் தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.

அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்

அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.

இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்

அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.

இரண்டு: கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.

அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.

ஜெ

இக்குவாகுவின் வலி – சிறுகதை

dscn6201 copy

1990 களில் கட்டப்பட்ட கட்டிடம். பாறைக்கற்களை உடைத்து ஒட்ட வைத்து புதுடிசைன் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. நான்கு புறமும் இரண்டு ஆட்கள் நடந்து செல்வதற்கு போதுமான இடைவெளியும், கிழக்குப்பக்கத்தில் தோட்டம் போடுவதற்கென விடப்பட்ட ஒரு சென்ட் நிலத்தினையும் சேர்த்து ஏழு சென்ட் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள கட்டிடம். சுற்றுபுறத்தில் கல்லுமச்சுவீடு என்று அறியப்பட்ட அந்த வீட்டின் முன்புதான் நிற்கிறேன். கருப்பு நிற கடப்பக்கல்லில் “சிவபதி இல்லம்” என பொறிக்கப்பட்டிருந்தது.

அழைப்பு மணியை அடிக்க வாசற்கதவிற்குள் கையை விட்டு துலாவி அடிக்க வேண்டும். சிறுபிள்ளைகள் அடிக்கடி அழைப்புமணியை அடித்துவிட்டு ஓடிவிடுவதால் இந்த தெருவில் யார் வீட்டிலும் அழைப்புமணியை வெளியே வைப்பதில்லை. என்னுடைய வீட்டிலும் இப்படிதான். நான் இந்த வீட்டின் பக்கத்தில் குடிவந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. வந்த புதியதில் ஏற்பட்ட தவறான அபிப்ராயத்தால் இன்றுவரை இந்த வீட்டின் மனிதர்களோடு சகஜநிலை ஏற்படவில்லை.

சிவபதி சார்,… சிவபதி… சார்…

பதிலில்லை. ஆனால் வீட்டிற்குள் சலசலப்புகள் கேட்கின்றன. அவர்களுக்கு நான் வந்திருப்பது என் குரல் மூலம் தெரிந்திருக்கும். குறைந்தபட்சம் வேறு நபர்கள் கூப்பிட்டிருந்தால் இந்நேரம் வந்து வரவேற்கின்ற மனிதர்கள். என்னைமட்டும் மிகக் கடுமையாக வெறுக்கின்றார்கள். அழைப்பு மணியையும் சடங்கிற்காக அடித்தேன்.

பதிலில்லை.

எங்களது வீட்டு வாசலில் ஒய்யாரமாய் சாய்ந்தவாறு என் மனைவி என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சபாபதி வீட்டுவாசலில் தினமும் அழைப்பதும், அவள் என்னை வழுக்கட்டாயமாய் இங்கே நிற்கவிடாமல் இழுத்துச் செல்வதும் இன்றைக்கு நடக்கவில்லை. அவள் களைத்துப் போய்விட்டாள். ஆனால் நான் அப்படியல்ல. இன்று ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தேன். அது எப்படியாவது வீட்டிற்குள் நுழைந்து அவளைப் பார்த்துவிடுவது.

மீண்டும் அழைத்தேன். அழைப்புமணியை அடித்தேன்.

பதிலில்லை.

ஒரு எம்பு எம்பி வாசல் கதவின் பின்பக்கம் இருக்கும் கொக்கியை விடுவித்தேன். கருப்பும் தங்கநிறமும் பூசப்பட்ட கதவினை திறந்து நுழைந்தேன். என்னுடைய வருகை அவர்களுக்கு மேலும் கசப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் நான் உள்ளே வந்துவிட்டேன் என்பதை அறிந்தும் அவர்கள் வெளியேவரவில்லை. வராமல் போகட்டும். நான் அவரையோ, அவர் மனைவியையோ, அல்லது அவர் உருவமாகவே வந்துபிறந்திருக்கும் அவர் பிள்ளையையோ பார்க்க வரவில்லை. நான் வந்தது ரோசியைப் பார்க்க.

எங்கே அவள்.. வழக்கமாய் இருக்கும் இடத்தில் காணவில்லை. ஒருவேளை வீட்டின் தோட்டப்பகுதியில் இருக்கலாம். பத்துநாட்களாய் அவளைப் பார்க்க தவித்துக் கொண்டிருக்கிறேன். கிழக்குப்பகுதியிலிருக்கும் தோட்டத்தில் இரண்டு தென்னை மரங்களும், ஜாதிமல்லிகை கொடியும் இன்னும் சில காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன.

ரோசி நடைபாதையில் ஒரு சாக்கின் மீது படுத்திருந்தாள். அவளுடைய தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை எறும்புகள் உணவாக்கிக் கொண்டிருந்தன.   என்னுடைய வருகையை அவள் உணர்ந்திருக்க வேண்டும். வால் மெதுவாக ஆடியது. அவளருகில் சென்றேன். நாக்கினை பல்லிடுக்கில் கடித்து வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள். மெல்ல முனகல் சத்தம் மட்டும் கேட்டது.  வலது கண்ணுக்கும் காதுக்கும் இடையே எலும்பு முறிந்து அதன் பாதிப்பால் வீக்கமும், சீலும் ஏற்பட்டு, தற்போது ஒற்றைக் கண்ணை ரோசி இழந்துவிட்டாள்.

பக்கத்துவீட்டுக்கு குடிவந்ததும் முதலில் பழக்கமானவள் ரோசிதான். புசுபுசுவென தங்கநிறத்தில் இருந்தாள். பொமேரியன் நாட்டுநாய் கிராஸ் என்றார்கள். நெய்ரோட்டி, கோழி குழம்பு, முள்எடுத்த மீன் என எங்களுடைய சமையலில் அவளுக்கும் பங்குவைத்தோம். சிவபதி எப்போது கதவினைத் திறப்பார், எப்போது வெளியே ஓடலாம் என்றிருப்பாள். சாலையில் ஒரு ஓட்டம் ஓடிய பிறகே அவளை பிடித்து வீட்டிற்குள் அடைக்கமுடியும். எப்போதுமே துள்ளலாய் திரியும் அவள் ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டு… துக்கம் பீரிட்டது..

“ரோசி என்னை மன்னிச்சுடுமா… மன்னிச்சுடு..”

என்ன இருந்தாலும் நான் இப்படி உன்னை காயப்படுத்தியிருக்க கூடாது. சொந்தங்கள் அத்தனை பேரும் வந்து கூடியிருக்க விழா அன்னைக்கும் நீ வந்து வாசல்ல ஒன்னுக்கடிச்சுட்ட. அவங்க முன்னாடி என் வீட்டுக்கும் எனக்கும் நடந்த அசிங்கமா நான் நெனச்சுட்டேன். அவங்களோட கேலியான சிரிப்பால, கொஞ்சநேரம் மிருகமாயிட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காம அங்கிலிருந்த கட்டையை எடுத்து அடிச்சுட்டேன். ஆனா அந்த அடி இப்படி உன்னை நரக வேதனையில தள்ளுமுன்னு நான்  நினைக்கல. நீ வலியில துடிக்கும் போது, என் மனசு பதருது. உன்கிட்ட மன்னிப்பு கேட்கனுமுன்னு நாய்மாதிரி உன்வீட்டு வாசல பத்துநாள் நின்னுக்கட்டு இருக்கேன். உன்னை அடிச்சதுக்கப்புறம்தான் புத்திவந்துச்சு. ஆனா நான் பாவி. உன்னை முடமாக்கிட்டு நான் நடந்துக்கிட்டு இருக்கேன். ஐஞ்சறிவு படைச்ச உன்கிட்ட ஆறறிவ எதிர்ப்பார்த்து நான் அறிவை இழந்துட்டேன். உன்னோட இயல்ப உணராம, நான் என் இயல்ப இழந்துட்டேன். நீ படர வேதனையை நானும் தினமும் பட்டுக்கிட்டு இருக்கேன்டீ.

பேருந்துக்குள் மழை – சிறுகதை

Rain-Korea copy

“தம்பி.. தம்பி.. வலையப்பட்டி இறங்கனுமுன்னு பேசிக்கிட்டு வந்திங்க. இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிங்க” அருகில் இருக்கும் புண்ணியவான் தூக்கத்தினைக் கலைத்தார்.

“வலையப்பட்டி வந்துடுச்சுங்களா” மிரட்சியுடன் கேட்டேன்.

“இல்லைப்பா. இனிமேதான் வரப்போகுது.”

“அப்பாடா” உண்மையிலேயே அவர் புண்ணியவான்தான். அவர் எழுப்ப வில்லையென்றால் வலையப்பட்டியைத் தாண்டி பேருந்து செல்லும் போது, எதற்சையாக என்னைக் காணும் நடத்துனர். கண்டபடி வசைபாடி ஏதேனும் ஒரு நிறுத்ததில் தள்ளிவிட்டு போயிருப்பார். அதன் பின்பு அங்கிலிருந்து மீண்டும் வலையப்பட்டிக்கு வந்திருக்க வேண்டும். ம்.. அது நடவாமல் போனது மகிழ்ச்சி. நான் எழுந்து மேலே வைத்திருந்த ஒரு சின்ன சோல்டர் பேக்கையும், அதற்குப் பின் ஒளித்துவைத்த லேப்டாப் பையையும் எடுத்துக் கொண்டேன்.

மணியைப் பார்த்தேன். அதிகாலை மூன்று. அருகில் என்னுடன் இறங்க ஒருவர் ஆயத்தமாக இருந்தார். ஓய்வு பெற்ற காவலதிகாரியா, இல்லை ஏதேனும் கிராமத்து பஞ்சாயத்து தலைவரா தெரியவில்லை. இறுகிய முகத்தில் தடித்த முறுக்கிய மீசை.. நான் முகத்தை திருப்பி சாலையில் கவனத்தினை வைத்தேன்.

“வலையப்பட்டியெல்லாம் இறங்கு” நடத்துனரின் குரல் மட்டும் கேட்டது. படபடவென இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்ததில் நின்றுகொண்டேன். இனி நான்கு முப்பது வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய ஊருக்கு செல்ல பேருந்து வரும். அதுவும் அதிஸ்டமிருந்தால். சென்ற முறை வந்தபோது ஐந்து இருபத்துக்குதான் வந்தது.

ஐந்து நிமிடங்களுக்கு பத்து பதினைந்து பேருந்துகள் வந்துபோகும் நகரங்களிலிருந்து கிராமத்திற்கு வந்தால், காத்திருப்பின் கடினம் புரிந்து போகும். திருச்சியிலிருந்து சேலத்திற்கோ, நாமக்கல்லிற்கு செல்லும் இரவுப் பேருந்தினைப் பிடித்து இந்த ஊர் வரை வந்துவிடலாம். அதன்பின்பு இங்கிருந்து காட்டுப்புத்தூருக்கு உள்ளே செல்ல தனிப் பேருந்து வரும். அதிலும் எங்கள் ஊர் இந்த சாலையின் உள்ளே இருக்கிறது. அதற்கு மூன்று நான்கு பேருந்துக்கு ஒன்றுதான் எங்களூருக்கு செல்லும். அப்படி இப்படியென ஒரு அரைமணி நேரத்தினைக் கழித்திருந்தேன். சாலைக்கு அந்தப் பக்கத்திலிருக்கும் டீகடைக்கு சென்றாலாவது நேரத்தினைக் கழிக்கலாம் என தோன்றியது. ம்.. அதுதான் சரியான முடிவென பைகளைத் தூக்கிக் கொண்டு சென்றேன். ஒடிசலாய் ஒருவர் நின்று புகைத்துக் கொண்டிருந்தார். ஓரு பீடியே பீடி பிடிக்கிறதே என பார்த்திபன் போல கவிதை வந்தது.

அந்த மீசைக்காரர் பென்ச்சில் அமர்ந்து நாளிதலைப் பார்த்துக் கொண்டிருந்தார். விடியும் முன்பே பிரதானச் சாலைகளில் இருக்கும் டீகடைகளுக்கு செய்திதாள்கள் வந்துவிடுகின்றன. எங்களூருக்கு காலை ஏழு மணிக்கு கேகேபி பேருந்தில்தான் வரும். சில நேரங்களில் அந்தப் பேருந்தும் வராமல் போனால். மறுநாள்தான் கிடைக்கும். அவர் தீண்டாமல் வைத்திருந்த துணுக்கு செய்திதாளை எடுத்து அமர்ந்தேன்.

“சார் டீயா”

“ம்.. ராகிமால்ட் இருக்கா”

இல்லை சாரே. தீர்ந்துபோயிடுச்சு. டீ தாரேன்.

சரி. ஒரு டீ… ஆர்டர் தந்துவிட்டேன். அந்த செய்திதாளில் உள்ளூரில் நடந்த கடை திறப்பு, கட்சி கூட்டம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து எந்த எந்த திரையரங்குகளில் என்ன படம் ஓடுகிறது என்பதே பல பக்கங்களுக்கு இருந்தது. அதை வைத்துக் கொண்டு இனி ஒப்பேற்ற முடியாது எனும் போது சரியாக டீ வந்தது.

“காட்டுப்புத்தூருக்கு போறீங்களா”

“இல்லைன்னா முன்னாடியே ஆலம்பட்டி”

“சரி சரி. நாலே முக்காலுக்கு வந்துடும்” இன்னும் கால் மணிநேரம் கூடுதலாக.. ம்.. விடியகாலை இருட்டில் காத்திருப்பது. அதற்குள் இரண்டு மூன்று சேலம் பேருந்துகள் கடந்து போயிருந்தன. திருச்சிக்கு ஒரே ஒரு பேருந்து போனது. அதிலிருந்து இறங்கியவர்களுக்காக இருசக்கர வாகனங்களில் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். வந்து இறங்கியதும் அவர்களின் உடமைகளோடு காணாமல் போனார்கள். நான் தான் வெகுநேரமாக பொழுதினை கடினமாக கழித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வழியாக காட்டுப்புத்தூர் பேருந்து வந்தது. நான் வேகமாக ஓடி பேருந்து நிற்பதற்குள் நெருங்கிவிட்டேன். பேருந்திலிருந்து ஒரு இளம்பெண் கண்களில் தூக்த்துடன் வந்து இறங்கினார். அவரை வரவேற்க புதுக்கணவன் தயாராக இருந்தான். நான் ஏறிக்கொண்டு மீசைக்காரரைப் பார்த்தேன். அவர் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார். பேருந்து புறப்பட்டது. வேகம் பிடிப்பதற்குள் மீசைக்காரர் ஏறிவிட்டார்.

என்னையும் சேர்த்து ஒரு பத்துபேர் இருப்போம். பாதி பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பெண்கள் தங்களோடு வந்த கிழவனோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டிக்கெட்”

“ஆலம்பட்டி”

“ஆலம்பட்டியா. கேட்டுக்கிட்டு ஏறக்கூடாதுங்களா. ஆலம்பட்டி உள்ளுக்க போகாதுங்க. முன்னாடியே இறங்கிக்கோங்க”

“ஏங்க. இந்தபஸ் உள்ள வருங்களே”

“இப்ப லேட் ஆகிடுச்சு சார். இன்னும் காட்டுப்புத்தூருக்கு போயிட்டு வரனும். ஆலம்பட்டி உள்ளேயெல்லாம் போய் வரமுடியாதுங்க. சும்மாவே லேட் ஆகும். இப்ப ரோடு போடறேன்னு இருந்த ரோட்டை வேற சுரண்டி வைச்சுட்டானுங்க”

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆலம்பட்டிற்கு நடைதான். “சரி கொடுங்க”.

சடசடவென சத்தம் எழுந்தது. என்னவென ஊகம் செய்வதற்குள் ஜன்னலிருந்தும், பேருந்தின் மேலிருந்தும் மழை துளிகள் தெறித்துவிழுந்தன. பேருந்தே பரபரப்பானது. ஜன்னலிருந்து பழைய தார்பாய் இழுவைகளை இழுத்து தள்ளினோம். நடத்துனர் படிக்கட்டிலிருந்த தார்பாயை இழுத்துவிட்டார். இருந்தும் பேருந்துக்குள் தண்ணீர் வருவது நிற்கவில்லை. எனக்கு இரண்டு இருக்கையின் முன்னால் மேலிருந்து நீர் தாரைதாரையா வழிந்துகொண்டிருந்தது. என்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து யாருமில்லாத பின் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். சரியான பிணைப்பில்லாத வழிகளிடையேயும், மேல் கண்ணாடி உடைந்திருந்தன் வழியாகவும் பேருந்தே ஈரமாகியது. மெதுவாக துடைத்தெரியும் வைப்பரோடு ஓட்டுனர் போராடி ஓட்டிக்கொண்டிருந்தார். மழையின் தீவிரம் அதிமாகியதும். சாலையே தெரியவில்லை என நடத்துனரிடம் சொல்லி முன்னே அழைத்துக் கொண்டார்.

என்மேல் அடிக்கும் சாரல் எங்கிருந்து வருகிறது என தேடிக்கொண்டிருந்தேன். இந்தக் கலவரத்திலிருந்து என்னுடைய லேப்டாப்பினை காப்பாற்றியாக வேண்டும். கீழே மேலே என எங்கும் வைக்க முடியாது. கோழிக்குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழியைப் போல மார்போடு அணைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு துளி மேலே விழுந்தது. இது எங்கிருந்து என மேலேப் பார்த்தால் என்னுடைய இருக்கையின் மேலே ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையில் நீர்த்திவலைகள் கைகோர்த்து பெரியதாகிக் கொண்டே போயின. ஒன்று விழுந்ததும், அந்த இடத்தில் சிறியதாக ஒன்று தோன்றியது. செய்வதறியாது மேலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சடாரென இடியொன்று பனைமரத்தினை தாக்க அந்த வேகத்தில் பனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த அபரிவிதமான சத்தமும், அமானுஷ்ய வெளிச்சமும் எனக்குள் பயத்தினை உண்டுபண்ணியிருந்தன. ஓட்டுனர் இந்த பேய் மழையிலும் பேருந்தினை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருந்தார். பேருந்தின் மேற்கூறையின் மீது மழைத்துளிகள் விழும் சத்தமும், ஜன்னல் தார்பாய்களை கிழிக்கும் காற்றின் சத்தமும் அதிகரித்திருந்தன. மீசைக்காரர் என்ன செய்கிறார் என பார்த்தேன். பேருந்தின் நடைப்பாதையில் குடையொன்று பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதென்ன பேருந்துக்குள் மழையா. பேருந்துக்குள் குடையா. எனக்குள் இருந்த பார்த்தீபன் விழித்துக் கொண்டான். தலையில் மழைதேவதையின் ஆசிர்வாத அட்சதைகள் விழுந்தன.