யுனிகார்ன் – ஒற்றைக் கொம்பு உயிரினத்தின் அற்புதம்

நன்மை சொல்ல புனையப்பட்ட கதைகளில் நீதிகளை தவறவிட்டுவிட்டு கதைபாத்திரங்களை கெட்டியாக பிடித்துக் கொள்வது உலக மக்களின் பொது பண்பு. அப்படி கெட்டியாக பிடித்துக் கொண்ட சில கற்பனை கதைபாத்திரங்களான யுனிகார்ன், டிரகான், காமதேனு, ஆதிசேசன் என்பவைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள எண்ணினேன். தெரிந்துகொண்டால் சும்மா இருந்துவிட முடியுமா?. முடியாதே,. அதனால் உங்களுக்கும் நான் தெரிந்துகொண்டதை சொல்லிவிடுகிறேன்.

யுனிகார்ன் –

சிறுபிள்ளையாய் இருக்கும் போது இப்படி ஒரு உயிரினம் உலகில் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்தேன். பட்டு போன்ற மென்மையான உடல். சுருள் சுருளாய் ஒற்றை கொம்பு, மேகம் போல வெண்ணிற தேகம் என்று கதைகளில் வந்த கற்பனை வடிவம் யுனிகார்ன் மனதினை கொள்ளை கொண்டது. அன்பான விலங்கு, கருணை மிக்கது, காயங்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்று ஏகத்திற்கும் அதன் குணங்கள் அம்பியை போல இருந்ததும் காரணமாக இருக்கலாம். உலகத்தில் இந்த உயிரினம் போல நல்ல உயிரினம் வேறில்லை என்றே கதைகள் சொல்லின. யுனி என்றால் ஒரு, கார்ன் என்றால் கொம்பு என்று படித்த போது அடப்பாவிகளா, ஒற்றைக் கொம்பு என்று சொல்லைவைத்தே இத்தனை நாள் ஏமாற்றிவிட்டார்களே என்று தோன்றியது.

எந்த புனைவும் 100 % கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை. சிற்சில மாற்றங்களை உலகில் காண்பவற்றில் புகுத்தியே புனைவாக வடிவம் பெறுகின்றன. இதற்கு யுனிகார்னும் விதிவிலக்கில்லை. நான் சிறுபிள்ளையில் பார்த்த யுனிகார்ன் ஒற்றைக் கொம்புடைய வெண்குதிரை. ஆனால் யுனிகார்னை இணையத்தில் பார்த்தபோது அவை பல்வேறு விலங்குகளை ஞாபகம் செய்தன. ஆடு, மாடு என ஆரமித்து பன்றிவரை அத்தனை விலங்கினங்களையும் யுனிகார்னுக்கு பயன்படுத்தியிருந்தார்கள். ஒற்றை கொம்புடைய ஆடு, ஒற்றை கொம்புடைய மாடு என்பதோடு ஒற்றை கொம்புடைய பன்றி என்று நினைத்துவிடாதீர்கள். ஆட்டின் தாடி, சிங்கத்தின் வால், பன்றியின் வால், புறாவின் சிறகு என கிடைப்பவைகளை குதிரையோடு இணைத்துவிட்டார்கள்.

ஹரப்பா மொகஞ்சதாரோ –

கிமு 2500 வாக்கில் சிந்து சமவெளி நாகரீங்களான ஹரப்பா மொகஞ்சதாரோ பகுதியில் செய்யப்பட்ட யுனிகார்ன் தோற்றத்தினை ஒத்த ஒரு லட்சனை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒற்றைக் கொம்புடையதாக உள்ள அந்த உருவம், குதிரை போன்ற தோற்றத்தில் அல்லாமல் தடித்த தேகத்துடன் காணப்பட்டது. Elasmotherium என்று அழைக்கப்படும் உயிரினத்தின் வடிவமே அது என்கிறார்கள். தடித்த உடலுடைய காண்டாமிருகத்தின் தலையில் கொம்பு வைத்தது போல இருக்கும் இந்த உயிரினத்தினை யுனிகார்ன் என்ற தோற்றத்தின் தந்தை என்று சொல்லலாம். 13 ம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் சுற்றி திரிந்த மார்க போலோ என்றும் நாடோடி யுனிகார்ன் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். ஆனால் அவற்றினை நன்கு ஆராய்கையில் அவை காண்டாமிருகமாக இருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

ஒற்றைக் கொம்பு மருத்துவ குணம் கொண்டது என்று அசைக்கமுடியாத நம்பிக்கையில் இப்போதும் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்ற என்பது துயரமான செய்தி. யுனிகார்னும் அதுபோன்ற நம்பிக்கையால் வேட்டையாடப்பட்டு மறைந்து போன உயிரினமாக இருக்கலாம் என்று மனதினை தேற்றிக் கொள்கின்றார்கள். டைனோசர்களின் எலும்புகளும் முட்டைகளும் கிடைத்திருக்கும் வேலையில் யுனிகார்னின் எலும்புகள் கிடைத்தால் அது வாழ்ந்தற்காக அடையாளம் கிடைக்கும். சில இடங்களில் யுனிகார்ன் போல ஒற்றைக் கொம்புடைய உயிர்களின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவை குதிரையின் எலும்புகளை ஒத்துப்போகாமல், ஆடுகளைப் போன்று இருக்கின்றன.

பைபிலில் –

புனித வேதகாமத்தில் கூட யுனிகார்ன் பற்றிய செய்தி குறிப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக உள்ள ஓவியத்தில் பெண்ணின்(மேரி) அரவனைப்பில் உள்ள யுனிகார்ன் மலை ஆட்டின் (oryx) தோற்றத்துடன் ஒத்துப்போகிறது. இரண்டு கொம்புகள் இருந்தாலும், ஒரே சீரான வளர்ச்சியுடையதால் சில சமயங்களில் ஒற்றை கொம்பு போல தோற்றம் தருகின்றன இந்த ஆடுகள். ஒரு அற்புதம் என்னவென்று கேட்டால், இந்த ஆடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு, அதில் ஏதேனும் ஒற்றை கொம்பினை உடைத்திருந்தால் கூட பக்கவாட்டில் பார்க்கும் போது யுனிகார்ன் தோற்றத்தினை தருகிறது.
இருந்தும் சிலர் இந்த கற்பனை கதாபாத்திரத்தினை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். அதற்காக யுனிகார்ன் என்பதன் பொருள் காளைமாடு, குதிரை என பலவாறு தெரிவிக்கப்படுகிறது.

சிங்க தோற்றம் –

முற்றிலும் மாறுபட்ட சிங்கவடிவ யுனிகார்ன் சைனாவில் காணப்படுகிறது. சிறிய ஒற்றை கொம்பு உடைய சிங்கமாக காட்சியளிக்கிறது யுனிகார்ன். சில ஓவியங்களில் டிரகான் போன்றும் காட்சியளிக்கிறது. Qilin என்ற பெயரில் அழைக்கப்படும் சீனா யுனிகார்ன், சிங்கத்தின் நெற்றிப் பொட்டில் ஏற்ப்பட்ட வீ்க்கம் போல கொம்பு காணப்படுகிறது. டிராகன் தலை, எருதின் வால், மீன் அல்லது டிராகன் செதில்கள், மான் போன்ற கால்கள் கொண்டதாகவும் உள்ளது. உலக புகழ்பெற்ற யுனிகார்ன் சீன நடனம் பற்றி கேள்வியுற்றிருக்கின்றீர்களா. மிக நலினமான நடமாக அறியப்படும் இது, மிகவும் ஆடம்பரமான நடனமும் கூட. மற்றபடி சீன யுனிகார்ன் அதிஸ்டம் நிறைந்தது என நம்புகிறார்கள். டீசர்ட் முதல் ஏகப்பட்ட பொருகள்களில் ராஜ்யம் செலுத்துகிறது யுனிகார்ன் சின்னம்.

ஒரு சில லட்சனைகளில் யுனிகார்ன் சிங்கத்துடன் உள்ளது. யுனிகார்ன் குதிரையின் வால் பகுதி சிங்கத்தின் வால் போன்று காணப்படுகிறது. சிங்கத்தின் வாலுக்கு எதிர் வாலாக பன்றியின் வாலோடு இருக்கும் யுனிகார்னையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

யுனிகார்னின் சக்தி-

ஆதி காலம் தொட்டே யுனிகார்கள் புனிதமாக கருதப்பட்டுவந்ததால், அதன் கொம்பு முனை தீண்டிய நீர் புனிதமாகும் என்று நம்பபட்டது. அடர்ந்த காடுகளிலும், உயர்ந்த மலைகளிலும் வசிக்கும் என்று நம்ப பட்ட யுனிகார்னினை வானவில் தோற்றுவிக்கும் சக்தி பெற்றதாகவும் நம்பினார்கள். அறிவில் சிறந்த கிரேக்கர்கள் கூட யுனிகார்ன் இந்தியாவில் வாழ்வதாக நம்பியிருந்தார்களாம். மேலும் வீரம் நிறைந்த இந்த யுனிகார்னை பிடிக்க கன்னியால் மட்டுமே முடியும். யுனிகார்ன் அவளுடைய மடியில் வந்து தலைவைத்து அரவனைப்பில் இருக்கும் போது பிடிக்கலாம் என்று நம்பினார்களாம். ஆர்ட்டெமிஸ் என்ற கிரேக்க பெண் கடவுளுடன் எப்போதுமே யுனிகார்ன் காணப்படுகிறது. அது சிறியதாக மான் போன்று உள்ளது. அமைதியை விரும்பும் உயிராக கருதபட்ட யுனிகார்ன் ஆர்ட்டெமிஸூடன் இருப்பது வியப்பானது. ஏனென்றால் ஆர்ட்டெமிஸ் போரின் கடவுள். வில் அம்புடன் இருக்கும் அவளுடன் பாசத்தினை பொழிந்து கொண்டு யுனிகார்ன் அருகி்ல் இருப்பதை கிரேக்கர்கள் பெரிதும் விரும்பியிருக்க கூடும். அதிஸ்டமானது, நன்மை செய்வது, அன்பானது என்ற போற்றுதற்குறிய பண்பினால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது யுனிகார்ன்.

தொடர்புடைய பதிவுகள் –
விரைவில் நடமாடப்போகின்றன புராண மிருகங்கள்

ழகர சிந்தனை

உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை என்று எழுதப்பட்ட படம் சமீபகாலமாக தமிழ் முகநூல் முழுவதும் பரவிக்கிறது. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. எம்முறையும் அல்லாமல் இம்முறை தமிழையே குறை சொல்ல வேண்டிய நிலை வந்திருக்கிறது.

என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜெகதீஸ்வரன். இது சமஸ்கிருத பெயர். தாய் தமிழாசிரியராக இருந்தும் தந்தையின் விருப்பபடி இந்த பெயர் எனக்கு வைக்கப்பட்டதாம். இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், jagadeeswaran என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் “ஜெ”, “ஸ்” என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.

ஜெகதீஸ்வரன் சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள்.

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற வேதனையான உண்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியர்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித்தந்தார்கள், தந்துகொண்டும் இருக்கிறார்கள். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “செகதீசுவரன்” “சகதீசுவரன்” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.

எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும், ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் க,ச,ட,த,ப எல்லாம் நான்கு நான்காக உள்ளன. இதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை தமிழில் எழுதும் போது பெண், ஃபெண் என்று நாமும் எதையாவது முயன்று பார்க்கிறோம். இவைகளை இலக்கணம் ஒத்துக் கொள்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கில மொழி தமிழுடன் கலந்த காலத்திற்கு பிறகு எந்த தமிழ் இலக்கண மரபும் மாற்றியமைக்கப்படவில்லை என்பது உண்மை. நமக்கும் முன் நிறைய தமிழறிஞர்கள் தனித்தமிழ் பற்றியெல்லாம் யோசனை செய்து உள்ளார்கள். அவர்களின் நிலைப்பாட்டுடன் நமது மொழியை மாற்றியமைக்க எவரும் துணியவில்லை.

மீண்டும் தொடங்கிட இடத்திற்கே வருவோம். உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. ஆங்கிலத்தில் தமிழ் என்ற பெயர்சொல்லை Tamiழ் என்றா எழுதுகிறோம்?. இல்லையே Tamil, Thamil, Thamizh என்று எப்படி எப்படியோ எழுதிவிடுகிறோம். விக்கிப்பீடியா தமிழை ஆங்கிலத்தில் உச்சரிக்க [t̪ɐmɨɻ] என்று உச்சரிப்பு முறையை சொல்லிதருகிறது. குறியீடுகளின் மூலம் எழுத்துகளின் ஒலியமைப்பினை மாற்றி உச்சரிக்க மற்ற மொழியில் வழி செய்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருந்தும், தமிழர்கள் இருந்தும், 247 எழுத்துகள் இருந்தும் இன்று கூட நம் அண்டை மொழிகளிடம் எழுத்துகளை கடன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது வெட்கமானது இல்லையா?. தமிழின் தலைவர்கள் இத்தனை பேர் இருந்தும், உலகின் அறிவான இனம் என்ற பெருமை இருந்தும், இது இகழ்வானது இல்லையா?. மேலும் மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது என்கிறது விக்கிப்பீடியா.

சரியான புரிதல்கள் இன்றி தமிழை ஆதிகாலத்தின் நிலையிலேயே நாம் வைத்திருக்க முடியாது. வழக்கொழிந்து செல்லாமல் இருக்க பிற மொழியின் எழுத்துகளை தமிழில் பயன்படுத்துவதையும் ஏற்கமுடியாது. பிறகு என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்களா. இருக்கும் எழுத்துகளை வைத்து, அதன் மேல் ஒரு புள்ளிவைத்தால் இந்த ஒலிஓசையுடன் படியுங்கள் என பிறமொழி ஓசைகளை தமிழில் சாத்தியமாக்க வேண்டும். சட்டங்களையே காலத்திற்கு தக்கது போல மாற்றிக் கொண்டு இருக்கிறோம். செம்மொழியான தமிழ் மொழியை செம்மை படுத்த நிச்சயம் நாம் இதை செய்தே ஆக வேண்டும். இந்த இடுகை மொழியைப் பற்றியது என்பதால் கவனத்துடன் எழுதியிருக்கிறேன். தவறுகளோ, மாற்று கருத்துகளோ இருந்தால் தயங்காமல் பதிவு செய்யவும். நன்றி.

பொம்பளைக்கு ஒன்னும் தெரியாது

சென்ற குடியசு தினவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. கொடியேற்றுவதை பார்க்க எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வருவது வழக்கம். இந்த முறையும் அப்படி தான் இருந்தது. அதில் கொடியேற்றத்தை பார்க்க வந்த முதியவர் ஒருவருக்கு முன்னால் இருந்த பள்ளிகள் பெண்கள் மறைத்தபடி இருந்தார்கள்.

பல மைல் தூரம் கடந்துவந்து கொடியேற்றத்தை காண முதியவர் “அம்மா, கொஞ்சம் நகர்ந்து நில்லுமா, கொடி சரியா தெரியல” என்றார். அதற்கு அந்தப் பெண்கள் நகர்ந்து நின்றுருப்பார்கள் என நீங்கள் நினைத்தால், அப்பாவிகள் நீங்கள். அவர்களில் ஒரு பெண் கேட்ட கேள்விதான், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இருந்தது. “யேய் கிழவா, என்னைப் போய் அம்மாங்கிற, உனக்கு நான் அம்மான்னா. உங்கப்பாவுக்கு நான் யாரு?” என்று கூற அந்த மனிதர் ஆடிப் போய்விட்டார். கொஞ்சம் நிதானித்து பின்பு நகர்ந்து சென்றார்.

பெரும்பான்மையான ஆண்கள் இன்னும் பெண்களுக்காக பரிந்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான தகுதியை பெண்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

என்னுடன் வேலை செய்த ஒரு நண்பனுக்கு டேட்டிங் அனுபவம் இருந்தது. அவனுடன் டேட்டிங் சென்றது ஒரு பிரபல கல்லூரி மாணவி. அந்தப் பெண் அவனிடம் கேட்டது மூன்றே மூன்று விசயங்கள் மட்டுமே.

1. பயணத்திற்காக பைக்.
2. ஒரு சுடிதார்.
3. சாப்பாட்டிற்கும் போக்குவரத்திற்கும் பணம்.

கல்லூரிப் பெண்களின் கற்பை வெளிநாடுகளில் ஏலம் விடுவதாக செய்தியை படித்திருப்பீர்கள். ஆனால் இது நடந்தது சிங்காரச் சென்னையில்தான்.

கட்டிய மனைவியை கைநீட்டி அடித்தல் கூடாது என்ற சட்டம் வந்தவுடன் ஏகப்பட்ட வழக்குகள் ஆண்கள் மீது தொடுக்கப்பட்டது. இதற்கு குடும்ப வன்முறை மட்டுமல்லாமல், கணவன் மீதான பகையும் ஒரு காரணம் என்று சொன்னார்கள் வழக்கறிஞர்கள். கள்ளக் காதலுக்கு இடையூராக இருக்கும் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்யும் அளவிற்கு முன்னேறி விட்ட தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இது ஒரு பெரிய காரியமே இல்லை.

ஆண்கள் பெண்களை போற்றுவதற்கு தாய்மைதான் முதல் காரணம். ஆனால் சில பெண்கள் தங்கள் சுகத்திற்காக பிஞ்சுகளை கொன்று விடும் கொடூரமும் பரவிக்கொண்டு வருகிறது. சின்னத்திரையும், பெரிய திரையும் கள்ளக்காதலை ஆதரித்து சமூக புரட்சி செய்து கொண்டிருக்கின்றன.

பெண்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இது தெரியாத ஆண்கள் “பொம்பளைக்கு ஒன்னும் தெரியாது” என்று சொல்லி முட்டாள்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்.