அரிதான மரபு விதைகளை வீட்டிலிருந்தே பெறுவது எப்படி

ஆதியகை விதை மையத்தை முகநூல் மூலமாக தெரியும். அதன் நிறுவனரான பரமேசுவரன் ஒவ்வொரு விதையும் தேடி பயணிக்கையில் நேர்ந்த அனுபவத்தை அவ்வப்போது எழுதுவார். கிடைத்திட்ட இரண்டு, மூன்று விதைகளைக் கொண்டு அவற்றை உருவாக்கி விதைகளை பெருக்கம் செய்துள்ளார். யூடிபில் வறண்ட நிலத்தில் சாகுபடி செய்யும் யுத்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை என்னைப் போன்ற மானாவாரி நிலங்களில் வாழ்வோருக்கு மிகவும் பயனுள்ளவை. என் இளையோனின் திருமணத்திற்கு நாட்டுவிதைகளை தாம்பூலத்துடன் தருவதற்கான யோசனை அவருடைய முகநூல் பதிவுகளிடமிருந்து பெற்றது.

30 வகையான சுரை, 13 வகையான வெண்டை, 12 வகையான கத்தரி, 7 வகையான அவரை என அவரிடம் உள்ளவை முழுமையான பட்டியல். கீரை ரகங்கள், மூலிகைகள் என 120 வகையான விதைகளை வைத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் நிறைய அரிதானவைகள் உள்ளன. அவற்றில் என்னால் வளர்க்க முடியுமென்ற சில ரகங்களை மட்டும் கேட்டுள்ளேன்.

ஆதியகை விதைப்பட்டியல்

பீர்க்கங்காய் ரகங்கள்
1. குண்டு பீர்க்கங்காய்
2. கொத்து பீர்க்கங்காய்
3. சித்திரை பீர்க்கங்காய்
4. பனையேரி பீர்க்கங்காய்
5. பேய் பீர்க்கங்காய்
6. மெழுகு பீர்க்கங்காய் (நுரை பீர்க்கங்காய்)
7. வரி பீர்க்கங்காய் – குட்டை
8. வரி பீர்க்கங்காய் – நீளம்
9. வரியில்லா குட்டை பீர்க்கங்காய்

பூசணிக்காய் ரகங்கள்
1. ஆந்திரா நாட்டு பூசணி
2. உருட்டு பூசணி
3. குளவிக்கல் பூசணி
4. சட்டி பூசணி
5. சதை பூசணி
6. சிட்டு பூசணி
7. தலைகாணி பூசணி
8. தேங்காய் பூசணி
9. நீள பூசணி
10. வரி பூசணி
11. வெண்புள்ளி பூசணி
12. வெண்புள்ளி பூசணி 2
13. வெளிர் மஞ்சள் பூசணி

images (9)

வெண்டை ரகங்கள்
1. உருட்டு வெண்டை
2. ஊசி வெண்டை
3. சிவப்பு வெண்டை
4. சுனைமர வெண்டை
5. பச்சை வெண்டை
6. பருமன் வெண்டை
7. பலகிளை சிவப்பு வெண்டை
8. பலகிளை வெள்ளை வெண்டை
9. பொம்மடி நீள வெண்டை
10. மலை வெண்டை
11. மாட்டுக்கொம்பு வெண்டை
12  யானைதந்த வெண்டை
13. வெளிர்பச்சை வெண்டை

கத்தரி
1. உடுமலை உருண்டை கத்தரி
2. உடுமலை சம்பா கத்தரி
3. ஊதா முள் கத்தரி
4. ஊதா முள் கத்தரி
5. எலவம்பாடி கத்தரி
6. கடவூர் உருண்டை கத்தரி
7. கல்லம்பட்டி கத்தரி
8. கும்பகோணம் குண்டு கத்தரி
9. கோபி பச்சை கத்தரி
10. சேலம் முள் கத்தரி
11. திண்டுக்கல் ஊதா கத்தரி
12. தொப்பி (அ) தக்காளி கத்தரி
13. நத்தம் கீரி கத்தரி
14. நந்தவன பச்சை கத்தரி
15. நாமக்கல் பொன்னு கத்தரி
16. நெகமம் வரி கத்தரி
17. பச்சை கத்தரி
18. பச்சை குண்டு கத்தரி
19. மணப்பாறை கத்தரி
20. வெண்வரி உருண்டை கத்தரி
21. வெள்ளை வரி கத்தரி

பீன்ஸ்
1. கருப்பு பீன்ஸ்
2. குத்து செடி பீன்ஸ்
3. கொடி பீன்ஸ்
4. ரெட்டை பீன்ஸ்
5. வரி பீன்ஸ்

மிளகாய்
1. காந்தாரி மிளகாய்
2. குண்டு மிளகாய்
3. சம்பா மிளகாய்
4. குண்டு மிளகாய்

புடலை

1. குட்டை புடலை
2. திருச்சி நீள புடலை
3. தேனி நீள புடலை
4. பாம்பு புடலை

வெள்ளரி
1. குமரி வெள்ளரி
2. பழ வெள்ளரி
3. குமரி வெள்ளரி

கீரைகள்

1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. காசினிக்கீரை
4. கொத்தல்லி
5. சக்கரவர்த்தி கீரை
6. சிவப்பு அகத்திக்கீரை
7. சிவப்பு சிறுகீரை
8. சிவப்பு தண்டங்கீரை
9. சிவப்பு புளிச்சகீரை
10. பச்சை சிறுகீரை
11. பச்சை தண்டங்கீரை
12. பச்சை புளிச்சகீரை
13. பருப்பு கீரை
14. பாலக்கீரை
15. மணதக்காளி கீரை
16. முளைக்கீரை

பல்லாண்டு பயிர்
1. கோவில்பட்டி முருங்கை
2. சுண்டக்காய்
3. நாட்டு ஆமணக்கு
4. நாட்டு பப்பாளி
5. மர பருத்தி எ செம்பருத்தி
6. மரத்துவரை

இந்த பட்டியலில் சுரை ரகங்கள், தட்டை, காராமணி போன்றவற்றை இணைக்கவில்லை. சுரையில் ஆள் உயர சுரை, கும்ப சுரை, உருட்டு சுரை, செம்பு சுரை போன்ற சில ரகங்களின் பெயர்கள் மட்டுமே இணையத்தில் இருக்கின்றன. முழுமையான பட்டியல் இல்லை. உழவர் ஆனந்த் அவர்களைப் போல ஒரு பீடிஎப் செய்தால் பரவாயில்லை. ஆனால் ஆதியகை நிறுவனருக்கு கூடுதல் வேலையாக இது இருக்கும்.

20191119_121358

என் தேர்வுகள்-
மூக்குத்தி அவரை
கோவில்பட்டி முருங்கை
மர பருத்தி
நாட்டு பப்பாளி
நாட்டு ஆமணக்கு
காந்தாரி மிளகாய்
யானைதந்த வெண்டை
பாம்பு புடலை

ஆதியகை பரமேசுவரன் எண் – +91 85263 66796

இந்த எண்ணிற்கு நமக்கு தேவையான விதைகளின் பட்டியலையும், உடன் முகவரியையும் வாட்சப்பில் அனுப்ப வேண்டும். பகல்நேரங்களில் வேலையில் இருப்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில் பதில் தருகிறார். அவர் நமது பட்டியல் மற்றும் நமது முகவரியின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நமக்கு கூறுகிறார். என் பட்டியலுக்கு 200 ரூபாய் என்றார். பாம்பு புடலைக்காக சென்னை வரை சென்று சேகரித்திருக்கிறார் என்பதை அறிவேன். அந்த தொகையை அவரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு மீண்டும் தகவல் தர வேண்டும். அவ்வளவே. அரிதான மரபு விதைகள் நம் வீடு தேடி வந்துவிடும். விதைகளைப் பெற்றதும் இடுகையிடுகிறேன். அரிதான சில ரகங்களை வீட்டு தோட்டத்தில் வளர்க்க தொடங்கினால் பரவலாக்கம் பெற்றுவிடும். மரபு ரகங்களில் இருந்து விதை எடுத்து சுற்றியுள்ள ஆர்வளர்களுக்கும், உறவினர்களுக்கும் தருதல் வேண்டும். நம்மிடம் விதைகள் இல்லாது போனாலும் அரிதான ரகங்கள் நாம் கொடுத்தவர்களிடம் இருக்கும். அவற்றை மீளப்பெருதல் எளிதாக இருக்கும். நன்றி.

நாட்டு காய்கறி விதைகள் மற்றும் மரவிதைகள் ஆன்லைனில் வாங்குவது எப்படி

மணவாடிப் பகுதியில் எப்போதும் மழை குறைவாக உள்ளது. காவேரி கரையில் முப்போகம் விளைந்த இடத்தில் வளர்ந்துவிட்டு வானைநோக்கி பார்த்துக் கொண்டே இருப்பது கடினம்தான். ஆடி பட்டம் தேடினாலும் வராது என எல்லோரும் தயாராகிவிட.. இங்கு ஒன்றுமே செய்யவில்லை. ஆவடி புரட்டாசியில் மழை எட்டிபார்க்க‌ காட்டில் உழவு ஓட்டி சோளம் போட்டாச்சு. அம்மாவாசையில் விதைப்பது வழக்கமாகிவிட்டதால் பாவை, புடலை, அவரை, வெண்டை என விதைத்தோம்.

கத்திரி, மிளகாய், தக்காளி எல்லாம் பின்னால் சேர்ந்து கொண்டது. நீர் பூசணியும், பரங்கிக்காயும், பீர்க்கனும் மாட்டுக் கொட்டகையில் விதைத்தோம்.‌ இப்போது காய்கறிகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

வீட்டு தோட்டத்திற்கும் பண்ணையில் பசுமை உண்டாக்கவும் நாட்டு விதைகளை உழவர் ஆனந்த் அண்ணனிடம் கேட்டுள்ளேன். கொடி அவரை சொதப்பலாகிவிட்டது. நாட்டு வெண்டை ஆறு அடிக்கு வளர்ந்து இரண்டு நாட்களாக காய் தர தொடங்கியிருக்கிறது.

அடுத்தது கார்த்திகை பட்டம். ஆடிக்கும் தைக்கும் இடையேயான பனிக்கால நாட்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள புதிய நாட்டின காய்கறி செடி வகைகளை வாங்கலாமென முடிவெடுத்தேன்.

உழவர் ஆனந்த்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே கடை அமைத்திருக்கிறார். காய்கறி செடி விதைகளை 10 ரூபாய்க்கும், மரவிதைகளை 20 ரூபாய்க்கும் தருகிறார். யூடிபில் தோட்டம் சிவா போன்ற பலரும் உழவர் ஆனந்திடம் விதைகளை வாங்கி பயன்படுத்தி நன்றாக உள்ளது என கூறியிருக்கின்றார்கள்.

உழவர் ஆனந்த் எண் – 9840960650

இந்த எண்ணிற்கு விதைகள் தேவைப்படுகிறது. விலைப்பட்டியல் அனுப்புங்கள் என கேட்டால் சீரான பிடிஎப் கோப்பினை அனுப்புகிறார். அதிலிருந்து வேண்டியதை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரிக்கலாம். பிறகு விலையை கூட்டி வைத்துக்கொண்டு கொரியர் செலவுக்கு 40 ரூபாயை சேர்த்து அனுப்பினால் போதுமானது. அவர் அனுப்பிய பட்டியலைக் கீழே கொடுக்கிறேன். ஒவ்வொரு முறையும் விதையின் இருப்பின் அடிப்படையில் மாறும். எனவே புதுப் பட்டியலை கோருதல் நலம்.

IMG_20191118_154124

IMG_20191118_154134

IMG_20191118_154145

IMG_20191118_154213

என்னுடைய பட்டியல்

சிகப்பு புளிச்சக்கீரை -2
சிகப்பு தண்டுக்கீரை -2
காசினி கீரை-2
சக்ரவர்த்தி கீரை-2
பசலைக்கீரை
பப்பாளி -2
தர்பூசணி
வெள்ளரி
நீட்ட மிளகாய்
நீள் புடலை
குண்டு சுரக்காய்
நீட்ட சுரக்காய்
செடி முருங்கை

சவுக்கு
கொய்யா
சீதா
கொடுக்காப்புலி

இவற்றுக்கு 260 ரூபாயும் கூரியர் செலவு 40 ரூபாய் என மொத்தம் 300 ரூபாய் வந்தது. எஸ்பிஐ வங்கியில் IMPS FUND TRANSFER வசதியானது காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணியிலிருந்து வரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். உழவர் ஆனந்திற்கு பணம் அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன். விதைகள் வந்ததும் இடுகை இடுகிறேன். நன்றி.

கணினியில் விவசாயம்

விவசாயம், ஆதிமனிதனின் முதல் தொழில். நவீனப்படுத்துதலில் இறுதியில் நின்று கொண்டிருக்கும் தொழில். புதியதாக மரபனு மாற்று முறையில் பயிர்களை மாற்றி இயற்கையோடு போராடிக்கொண்டிருக்கும் தொழில். பல்வேறு பெருமைகள் இருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மை.

ஒரு முறை என்னுடைய தூரத்து சொந்தத்தில் ஒருவர் தன் மகனுடன் எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவனுக்கு விவசாயத்தைப் பற்றியும் இயற்கையை பற்றி அனுபவ அறிவு தருவதே அந்த வருகையின் நோக்கம். எங்கள் வயலில் விளைந்திருந்த நெல் நாற்றுகளைப் பார்த்து கேள்விகள் கேட்டான். நான் இதிலிருந்துதான் சாப்பிட அரிசி கிடைக்கும் என்றேன்.

என்னை திகைப்புடன் பார்த்தவன், அது அரிசி செடியிலிருந்துதானே கிடைக்கும். இது நெல் செடி அல்லவா என்றான். நாங்கள் சிரித்துக் விட்டோம். பிறகு எல்லாவற்றையும் விவரித்தோம். அந்தப் பையன் ஏதோ 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு என நினைத்துவிடாதீர்கள். அவன் அப்போது 10ம் வகுப்பு பொது தேர்வை முடித்திருந்தான்.

எனக்கும் எல்லாம் தெரியுமென வாதிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. வெள்ளாளர் சமூகத்தின் வாரிசுகளுக்கே அடிப்படை விவசாய அறிவு இருப்பதில்லை. இயற்கையோடு வாழ்ந்துவந்த கிராமத்தின் அடுத்த தலைமுறை நகரத்திற்கு சென்றால் விவசாயம் மறக்கடிக்கப்படுகிறது.

இனி அந்தப் பிரட்சனைகள் கொஞ்சம் தீரும். இணையத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விவசாயத்தை அறிமுகப்படுத்த விவசாயவிளையாட்டு வந்துவிட்டது. கைகளில் துப்பாகியை தூக்கிக் கொண்டு எதிரில் இருக்கும் நபர்களை சுடுவதும், வாகணங்களை ஓட்டி முதலில் செல்வதும் மட்டுமே விளையாட்டென இருந்தவர்களுக்கு, இது நிச்சயம் ஒரு மாற்று வழிதான்.

உழுவது, விதைப்பது, அருவடை செய்வது, கிடைக்கும் பணத்தில் பயனுள்ளவற்றை வாங்குவது என சுவாரசியமான ஒரு விளையாட்டு. என்னுடைய நண்பர்களின் அழைப்புகளால் அதில் இணைந்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் விளையாட வேண்டும் என்றால்,..

facebook -ல் ஒரு அக்கௌன்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு FarmVille க்கு சென்று விளையாடுங்கள்.

வாங்க ஒரு கப் விஷம் சாப்பிடலாம்

சாப்பாட்டுல தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கோங்க என்கின்றார்கள் மருத்துவர்கள். அதற்கு எப்போதும் பூச்சி அரிக்காத, பாலிஸ் கீரைகள் தான் நம்முடைய சாய்ஸ். ஆனால் அவ்வாறு பூச்சி அரிக்காத கீரைகளை சாப்பிடாதீர்கள் என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூச்சிகள் கூட உண்ண முடியாத அளவிற்கு தகுதியற்று போயிருக்கும் விஷ கீரையை நீங்கள் உண்ணுவதால் என்ன நேரும் என நினைத்துப் பார்க்க சொல்கிறார். கீரையில் தானே விஷம் இருக்கிறது என பழங்களுக்குப் போனால், இதைவிட கொடூரமாக இருக்கிறது விளைவுகள். பளபளக்கும் பழங்களில் எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது விஷம்.

பயிர் செய்யும் முன்பிருந்தே விதைகளை பூச்சி கொல்லி மருந்தில் ஊர வைப்பதை எங்கள் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். அடுத்தடுத்து பூச்சி கொல்லி மருந்தை தெளிப்பதால் நிலமே விஷமாகிப் போயிருக்கின்றது. ஆங்கில மருத்துவத்திற்கு பயந்து சிலர் இன்னும் சித்த மருத்துவத்தையே கடைபிடிக்கின்றார்கள். விளைவுகள் இல்லாத மருந்தென தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தால் காலம்காலமாக பயன்படுத்தி வந்த வேப்பண்ணையே விஷமாகி உயிரைக் குடித்திருக்கின்றது.

சித்த மருத்துவம் வேண்டாமென சென்றவர்களையும் போலி மாத்திரைகள் பயமுருத்தியிருக்கின்றன. எதைச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக விஷம் நமக்குள் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோக், பெப்சி மட்டுமல்ல சாதாரண குடிநீரையே இப்போது நம்ப முடியவில்லை.

இதிலிருந்து தப்புவது எப்படி, பூச்சி தின்ற கீரையை வாங்க வேண்டும், நன்கு அலசிவிட வேண்டும். பழம் வாங்கும் போது சரியான அளவிலும், சரியான ருசியையும் தருவதை மட்டுமே வாங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

போலி மருந்து, போலியான காய்கறி, பழங்களை விற்பதாக உங்களுக்குத் தெரிந்தால் காவல் துறையை அனுகலாம். அதற்கான தொலைப்பேசி எண் – 044-24321830. பல உயிர்களை காப்பாற்றிய பெருமை உங்களுக்குச் சேரட்டும்.

நன்றி- குமுதம் சினேகிதி.