உரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து

உரைப்பான்

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தாலும் அதனுடைய செரித்தல் திறனை மேம்படுத்த உரைப்பான் என்ற பெயரில் சில மருந்துப் பொருட்களை அரைத்து தருகிறார்கள். கீழ்கண்ட ஒன்பது பொருட்களில் கிடைக்கின்றவைகளை தாய்ப்பாலுடன் உரைப்பான் கல்லில் ஐந்து மூன்று என்ற கணக்கில் உரைத்து குழந்தைக்கு தருகிறார்கள்.

1) வசம்பு
2) சுக்கு
3) மாச்சக்காய்
4) சாதிக்காய்
5) சித்தரத்தை
6) முறுக்குத் திப்பிலி
7) ஒருதலைப் பூண்டு
8) பெருங்காயக் கட்டி
9) மான் கொம்பு

இப்பொருட்களில் வசம்பு என்பது புள்ளவளர்த்தி (பிள்ளை வளர்த்தி) என்றும் அழைக்கப்படுகிறது. மாலை நேரங்களில் இந்தப் பெயரைக் கூறாமல் பெயர் சொல்லாதது என்றும் வழங்குகிறார்கள். முறுக்குத் திப்பிலி என்பது குழந்தைகள் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இப்பொருட்களை சாணத்தில் வைத்து பதப்படுத்தி, விளக்கு சுடரில் காட்டி தீய்த்து உபயோகம் செய்கின்றார்கள். இப்பொருட்களில் பெரும்பாலானவை இன்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

நெடுங்காலமாக விளம்பரங்களில் குழந்தை அழுதால் உட்வான்ஸ் வாட்டர் கொடுங்கள் என்று கூறப்படும் பொருளுக்கு மாற்றாக கிராமங்களில் இந்த உரைப்பானே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#மகரயாழினி #நாட்டார்_சடங்குகள் #பிறப்பு_சடங்குகள்

2017 சனவரி மாதம் 12ல் முகநூலில் பதிவு செய்தது.

பின்னூட்டமொன்றை இடுக