மாதெருபாகன் – எதிர்ப்பு ஒரு சடங்கு

மாதொருபாகன்

 

மாதொரு பாகன் நாவல் தடைக்கோரி நீதிமன்றத்தின் படிகட்டுகளை ஏறிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்து மதத்தின் சடங்குகளைப் பற்றிய போதிய அறிவு இல்லையென்பது என் கருத்து. அதுவே உண்மை என்பதை இந்த இடுகையின் கடைசி வரிவரை படித்த பின்பு நீங்களும் கூறுவீர்கள்.

சூரியன், மரம் என இயற்கை வழிபாட்டையும், மாடு, நாய் என விலங்கு வழிபாட்டையும், அதற்கடுத்த செயற்கரிய செயல்செய்த மனிதர்களுக்கா நடுகல் வழிபாட்டையும் இன்னமும் இந்து மதம் காப்பாற்றிக் கொண்டே வருகிறது. ஆதிவாசிகளின் சடங்குகளை பேணிவருதல் இகழ்வானதல்ல, அவை நமக்கு வரலாறுகளை எடுத்துரைப்பது. அக்கால மக்களின் நடைமுறை வாழ்க்கையும், அறிவையும் நமக்கு கற்றுத் தருவது. எவையெல்லாம் பயத்தை தருகின்றதோ அவையெல்லாம் தெய்வமானது என்பதே உலக தொன்மவியல் எடுத்துரைப்பது. இருள், இடி, நாகம், புலி, யானை என எல்லாமே இங்கு தெய்வம்.

மண்ணின் மக்களுக்காக காட்டுப்பன்றி, புலியை எதிர்த்து வீரமரணம் அடைந்தால், புலிகுத்தி பட்டான், பன்றிக் குத்தி பட்டான் என கல்வெட்டு வடித்து வழிபாடு. கணவன் இறந்தமைக்காய் தீக்குளித்து இறந்த பத்தினிப் பெண்ணுக்கு மாலையம்மன், தீப்பாய்ந்தால் வழிபாடு. செய்யா தவறுக்காய் தீய்நீதி வழங்கி இறந்தாலும், சமூக சிக்களுக்காய் மனமுவந்து மரணித்தாலும் அவர்களுக்கும் வழிபாடு. இவையெல்லாமும் நடைந்தவைகளை காலம் கடந்தும் நம் நினைவுக்காய் முன்னோர்கள் செய்த முன்னேற்பாடு.

பெருமாள் முருகன் கையிலெடுத்துக் கொண்டது, இன்றைய நவீன உலகில் பெருநகரங்களின் வீதிக்கு வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கும் மெட்டியாட்ரி மருத்துவமனைகளின் யுத்தியை நம் முன்னோர்கள் கையாண்ட சடங்கு பற்றியது. முறையான உடலுறவினால் மனைவி கருதரிக்காத போது, செயற்கையாக விந்தினை செலுத்தும் முறையை நவீன மருத்துவமனைகள் கையாளுகின்றன. கணவனின் விந்தில் போதுமான அளவிற்கு ஊர்ந்து செல்லும் விந்தனுக்கள் இல்லாத போதும், உடைந்த விந்தனுக்கள் இல்லாதபோதும் பிற ஆணின் சீறான விந்தனுக்கள் செலுத்தப்பட்டு கரு உண்டாக்கப்படுகிறது. இதனை நம்முன்னோர்கள் ஓர் திருவிழாவின் இரவில் சத்தமேயில்லாமல் பல காலம்செய்து வந்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவர் யாரையேனும் அறிந்திருந்தால் வருடத்திற்கு இந்தியாவில் இப்படி விந்து உட்செலுத்துதல் மூலம் கருதரிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயம் அதிர்ந்துப் போவீர்கள். இது ஒரு ஆபாசமான சடங்கென எதிர்ப்பு தெரிவித்தால்,. இந்து தொன்மவியலில் கிளிக்கும், மானுக்கும் என மிருகப் புணர்வு செய்த முனிவர்களைப் பற்றி எடுத்துறைக்க வேண்டியிருக்கும். அவை பற்றி இந்த வலைப்பூவிலேயே முன்பொரு முறை எழுதியிருக்கிறேன் என்பதால் இங்கு விட்டுவிடுகிறேன்.

முன்பு நிலவிய இந்த சடங்கு முறை உயிர் கொடுத்தலுக்கானது. இங்கே உயிர் எடுத்தலுக்கான சடங்கும் நிலவிவந்துள்ளது. பொதுவாக புதையலை காவல் காக்கும் பூதங்களுக்கும், தீய சக்திகளுக்கும் பலி கொடுத்தலில் சூலியை பலி கொடுத்தலும் நிகழ்ந்துள்ளது. இவை கூட சடங்குதான். கள்ளர்கள் சூலாடு, சூல்பன்றிக்குப் பின்பு சூலியான பெண்ணை பலி கொடுத்திருக்கிறார்கள். இதனை பதிவு செய்திருக்கும் கதைப்பாடலை வாசித்த போது, பொன்னிறத்தாளின் தாயின் நிலையை எண்ணினேன்,. ஓர் வசனக் கவிதையாக

நா.. பொன்மாரி. பொறக்கறது அத்தனையும் ஆம்பளையா பொறக்க.. தவமிருந்து பெத்த பொட்டபுள்ளைய ஆளாக்கி, நல்ல பயனுக்கு கட்டிக்கொடுத்து, இப்ப வயிறு நிறைஞ்சு நிக்குது. இந்தா வாரேன்னு தோழிகளோடு ஓடைக்கு போனபுள்ள வீடுவந்து சேரல.. வானம் கருத்து பேய்காத்து வீசுது. கூட போன புள்ளைக ஒன்னுமொட்ட திரும்பிவந்து… காட்டாளம்மன் கோயிலுல கற்பினியவ தனிச்சிருக்கா.. பத்திரமா போய் பாங்கா கூட்டிக்கிட்டு வாங்குதுங்க.

முன்னேப் பெத்த ஏழுகளோட காட்டாளம்மன் கோயிலுக்கு போறேன். ஆடிக் காத்துல அடிமேல அடிவைச்சு அழகா நடந்துவர யாரால முடியும். அடிக்கிற எதிர்காத்துல.. அம்மன் கோவிலுக்கு வர அரும்பாடு பட்டாச்சு. கோயிலுக்கு முன்னாடி குறுதியோட ஆடு கிடக்கு. பலியா கிடக்கறது சூலாடுன்னு புரிஞ்சு.. அடேய் ஓடுங்கடா.. உன்தங்காவ பாருங்கடான்னு கத்தறேன். முன்னாடிப் போனப் பயளுக வெவவெளத்து நிக்க…

மூச்செறைக்க ஓடிவந்து முன்னெட்டி பார்க்கிறேன். ஆசை மவ அம்மணமா, அம்மன் முன்னாடி தான் கிடக்கா..பக்கத்துல தலைவாழ இலையில அவ தலைச்சம் புள்ள கரிகெடக்க… ஒம்போது மாசம் புள்ளைய சுமந்த வயிறு.. ஒன்னுமில்லாம கிழிச்சு திரீயேத்தி நிக்குது. பாவிமக நா செஞ்ச பாவமென்ன… இப்படி பலியாட கிடக்கிற மகளைகாண நா செஞ்ச பாவமென்ன….

பூச்சியம்மன் பட்டபிரான் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கதையின் நாயகனான பட்டபிரான் திருநெல்வேலி வல்லநாட்டினை சார்ந்த மறவன். தனது தொழிலுக்காக மேற்கே இருக்கும் ஊரான பாவூர் கிராமத்திற்கு செல்கிறான். அங்கு பொல்லாம் பூச்சி என்றொரு அருந்ததியினப் பெண்ணை காண்கிறான். இருவரும் காதல் கொள்கின்றார்கள்.

ஓர்நாளில் பொல்லாம் பூச்சியும், பட்டபிரானும் காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டினை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவர்களுடன் பூச்சி என்ற நாயும் வருகிறது. உழக்குடி என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தங்குகிறார்கள். தங்களுடைய பசியினைப் போக்கிக் கொள்ள கிராமத்திலிருக்கும் ஆட்டினை திருடி சமைத்து உண்கிறார்கள்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஆடு களவு போவதை கிராமத்துக்காரர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்போது பொல்லாம் பூச்சியை தேடிவரும் ஏழு அண்ணன்மார்கள் அக்கிராம்த்திற்கு வருகிறார்கள். அவர்களின் விசாரனையில் ஆடு களவு போவதும், காட்டுனுள்ளே நண்பகலில் வெண்புகை வருவது பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

பாறையொன்றில் ஏறி புகை வரும் நேரம் வரை காத்திருக்கிறார்கள். புகை வருவதைக் கண்டபின் அதனை நோக்கி செல்கிறார்கள். அங்கு பொல்லாம் பூச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் பட்டபிரானை கண்டு கோபம் கொண்டு தங்களுடைய ஈட்டியால் குத்தி கொல்கிறார்கள். அப்போது சத்தமிடும் நாயையும் கொன்றுவிடுகின்றனர்.

அண்ணன்மார்கள் தங்களுடன் பொல்லாம் பூச்சியை வந்துவிடும்படி கூறுகின்றனர். அவள் தன்னுடைய கணவனும், செல்லப்பிராணியும் கொலையுண்டது கண்டு மனம்நொந்து அண்ணமார்களுடன் செல்ல மறுக்கிறார்கள். அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் இறுதி சகோதரன் தடுத்தும் கேளாமல் மற்றோர் பொல்லாம் பூச்சியையும் கொன்றுவிடுகின்றனர்.

வந்த பிணி முடிந்து பாவூர் திரும்பும் அண்ணன்மார்களில் முதல் ஆறு நபர்களும் வழியிலேயே இறந்துவிடுகின்றனர். அதற்கு தன் தங்கையான பொல்லாம்பூச்சியே காரணம் என நினைத்து இளைய அண்ணன் கோயில் எழுப்பி வழிபடுகிறார்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதையை அறிந்த பொழுது வழமையான காதல் கதையில் நிகழ்வது தான் இதுவென அலட்சியம் செய்ய முடியவில்லை. மறவருடன் ஓடிப்போன பெண்ணான பொல்லாம்பூச்சியையும் கொன்றிருப்பதை காணுகையில் அருந்ததி இனத்தில் இருந்த கட்டுப்பாடுகளும், மறவர் இனத்தில் திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கா உறவுகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. காலம் அருந்ததி இனத்தினையும், மறவர் இனத்தினையும் மாறுபட்ட இடத்தில் வைத்துள்ளதா என வரலாற்று ஆய்வாளர்கள் தான் நோக்க வேண்டும்.