நாட்டு காய்கறி விதைகள் மற்றும் மரவிதைகள் ஆன்லைனில் வாங்குவது எப்படி

மணவாடிப் பகுதியில் எப்போதும் மழை குறைவாக உள்ளது. காவேரி கரையில் முப்போகம் விளைந்த இடத்தில் வளர்ந்துவிட்டு வானைநோக்கி பார்த்துக் கொண்டே இருப்பது கடினம்தான். ஆடி பட்டம் தேடினாலும் வராது என எல்லோரும் தயாராகிவிட.. இங்கு ஒன்றுமே செய்யவில்லை. ஆவடி புரட்டாசியில் மழை எட்டிபார்க்க‌ காட்டில் உழவு ஓட்டி சோளம் போட்டாச்சு. அம்மாவாசையில் விதைப்பது வழக்கமாகிவிட்டதால் பாவை, புடலை, அவரை, வெண்டை என விதைத்தோம்.

கத்திரி, மிளகாய், தக்காளி எல்லாம் பின்னால் சேர்ந்து கொண்டது. நீர் பூசணியும், பரங்கிக்காயும், பீர்க்கனும் மாட்டுக் கொட்டகையில் விதைத்தோம்.‌ இப்போது காய்கறிகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

வீட்டு தோட்டத்திற்கும் பண்ணையில் பசுமை உண்டாக்கவும் நாட்டு விதைகளை உழவர் ஆனந்த் அண்ணனிடம் கேட்டுள்ளேன். கொடி அவரை சொதப்பலாகிவிட்டது. நாட்டு வெண்டை ஆறு அடிக்கு வளர்ந்து இரண்டு நாட்களாக காய் தர தொடங்கியிருக்கிறது.

அடுத்தது கார்த்திகை பட்டம். ஆடிக்கும் தைக்கும் இடையேயான பனிக்கால நாட்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள புதிய நாட்டின காய்கறி செடி வகைகளை வாங்கலாமென முடிவெடுத்தேன்.

உழவர் ஆனந்த்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே கடை அமைத்திருக்கிறார். காய்கறி செடி விதைகளை 10 ரூபாய்க்கும், மரவிதைகளை 20 ரூபாய்க்கும் தருகிறார். யூடிபில் தோட்டம் சிவா போன்ற பலரும் உழவர் ஆனந்திடம் விதைகளை வாங்கி பயன்படுத்தி நன்றாக உள்ளது என கூறியிருக்கின்றார்கள்.

உழவர் ஆனந்த் எண் – 9840960650

இந்த எண்ணிற்கு விதைகள் தேவைப்படுகிறது. விலைப்பட்டியல் அனுப்புங்கள் என கேட்டால் சீரான பிடிஎப் கோப்பினை அனுப்புகிறார். அதிலிருந்து வேண்டியதை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரிக்கலாம். பிறகு விலையை கூட்டி வைத்துக்கொண்டு கொரியர் செலவுக்கு 40 ரூபாயை சேர்த்து அனுப்பினால் போதுமானது. அவர் அனுப்பிய பட்டியலைக் கீழே கொடுக்கிறேன். ஒவ்வொரு முறையும் விதையின் இருப்பின் அடிப்படையில் மாறும். எனவே புதுப் பட்டியலை கோருதல் நலம்.

IMG_20191118_154124

IMG_20191118_154134

IMG_20191118_154145

IMG_20191118_154213

என்னுடைய பட்டியல்

சிகப்பு புளிச்சக்கீரை -2
சிகப்பு தண்டுக்கீரை -2
காசினி கீரை-2
சக்ரவர்த்தி கீரை-2
பசலைக்கீரை
பப்பாளி -2
தர்பூசணி
வெள்ளரி
நீட்ட மிளகாய்
நீள் புடலை
குண்டு சுரக்காய்
நீட்ட சுரக்காய்
செடி முருங்கை

சவுக்கு
கொய்யா
சீதா
கொடுக்காப்புலி

இவற்றுக்கு 260 ரூபாயும் கூரியர் செலவு 40 ரூபாய் என மொத்தம் 300 ரூபாய் வந்தது. எஸ்பிஐ வங்கியில் IMPS FUND TRANSFER வசதியானது காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணியிலிருந்து வரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். உழவர் ஆனந்திற்கு பணம் அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன். விதைகள் வந்ததும் இடுகை இடுகிறேன். நன்றி.

2 comments on “நாட்டு காய்கறி விதைகள் மற்றும் மரவிதைகள் ஆன்லைனில் வாங்குவது எப்படி

  1. Aravind Selvaraj சொல்கிறார்:

    The information you sent was useful. Thank you very much for your effort.
    I’ll forward this to my Friends.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s