அவள் காலையில் எழுகையில்
அவளோடு தலையணையில் உறங்கிய
அவள் பொம்மையும் விழித்தெழுகிறது!
அவள் ஆனந்தமாய் குளிக்கையில்
அதுவும் அருகிலேயே குளிக்கிறது!
அவள் ஒப்பனை செய்கையில்
அதுவும் ஓரளவு அழகாகிறது!
அவள் சொப்பு விளையாடுகையில்
அதுவும் சேர்ந்தே விளையாடுகிறது!
எல்லாம் முடிந்து,..
அவள்தன் தாய்மார்பில் பாலருந்துகையில்
அதுவும் பால்ஊற்றெடுக்காத
அவள்முலையில் பசியாருகிறது!
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முன்பே
சில பெண் குழந்தைகள்
இப்படி தாயாகி விடுகின்றார்கள்!
– சகோதரன் ஜெகதீ்ஸ்வரன்.
அருமையான கவிதை…
நன்றி நண்பரே!
ungal kavetaikum karuthukkum vanakkam
நன்றி நண்பரே!.
thayavusaidu mukam suzikkum varththai kavithaiku payan padutha vandam ….
kavithaikku nalla varthai innum neeraya irruku…
அப்படியா நண்பரே,.. அந்த வார்த்தைகள் யாருடைய முகத்தையும் சுழிக்க வைக்காது என்று உறுதி தர இயலுமா உங்களால்.
ரசனை என்பதும் ஆபாசம் என்பதும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். விரைவில் புரிந்து கொள்ள வாழ்த்துகள்.
பெருத்த என்பதற்குதான் முலை, கொங்கை என்று கொள்ளப்படும்
மார்பு அல்லது நெஞ்சு என்றிருந்தால் நல்லது
முலை என்பதே பொருத்தமாக தோன்றியது நண்பரே. ஆண்குறி முதற்கொண்டு, புணர்ச்சி பொம்மைகள் வரை சகோதரன் வலைப்பூவில் எழுதிவிட்டபடியால் இது ஒன்றும் பெரியதாகப்படவில்லை நண்பரே
அருமையான கவிதை…
நன்றி நண்பரே..
அருமை நண்பரே
வாழ்த்திற்கு நன்றி நண்பரே.