செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக தமிழுக்கு நடத்தப்படும் மாநாடு என்பதால் அதிக எதிர்ப் பார்ப்பு.
மாநாட்டு சின்னம் –
முதல்வர் கலைஞர் பார்த்து பார்த்து மாநாட்டிற்கான வேலைகளை செய்கிறார். வரலாற்றில் தனக்கென இடம் கிடைக்கும் என அவருக்கு தெரியும். அதிலும் மிகுந்த கவணம் எடுத்து அமைக்கப்பட்ட மாநாட்டு சின்னத்தை அவரே வெளியிட்டார்.
திருவள்ளுவர் –
பொய்யாமொழிப் புலவன், சைவ நெறியை அழகான குறளாக மாற்றி உலகமெங்கும் செல்ல வழிவகுத்தவன். எனவே தமிழின் பெருமையை உலகுணரும் வகையில் புலவனினை சிறப்பிக்க சின்னத்தின் நடுவே இடம் கொடுத்திருக்கின்றார்கள்.
திருவள்ளுவர் சிலையின் பெருமை –
இச்சிலை பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது.
அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் என்ற சைவ நெறியை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம் –
மிகத் தொன்மையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரித்தினை முதல் நாகரீகமாக அறிஞர்கள் கருதிகின்றார்கள். சிந்து நதியின் கரையில் ஆரமித்த இந்த நாகரீகம், மிகப் பெருமளவு பரவியிருந்தது. காவேரி கரையின் சில இடங்களில் கூட இந்த நாகரீக சின்னங்கள் கிடைத்திருப்பதாக விக்கிப் பீடியா சொல்லுகிறது. தமிழ்ச் சமூகத்தின் மக்களே சிந்து நாகரீகத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என கருதுகின்றார்கள். இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
பசுபதி –
தியான நெறிகளில் சிறந்து விளங்கிய தமிழ் மக்கள் பசுபதி என்ற தியானத்தில் இருக்கும் கடவுளையே வழிப்பட்டு வந்துள்ளனர்.
பசுபதி கடவுளே பிற்காலத்தில் சிவனாக கருதப்பட்டார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.எனவே தியானத்திற்கும் யோகத்திற்கும் அதிக முக்கியத்துவம் தந்த சைவ சமயம் தான் தமிழர்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிய வரும்.
செம்மொழிச் சின்னத்தில் சிவன்
சிந்து சமவெளிச் சின்னங்களுடன் இருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டு சின்னத்தில் முதன் முதலாக இருப்பதே பசுபதி என்ற சிவன் தான்.
ஒரே நேரத்தில் சிவனும், சிவனடியாரான திருவள்ளுவரும் தமிழ்ச் சின்னத்தில் இருப்பதை வைத்தே சைவத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதை உணரலாம்.
சம்போ சிவ சம்போ!
இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டுப் போட்டு அதிக மக்களை சென்றடைய உதவுங்கள்!.
நம்ம ஏரியான்னா சும்மாவா
கலக்குங்க
(நான் முசிறி)
விஜய்
அப்படியா, மிக்க மகிழ்ச்சி!.
காவேரி மைந்தர்களுக்கு கலக்கவா சொல்லி தரனும்.!.
தங்கள் தொடர் வருகைக்கும், ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!
super
நன்றி நண்பரே!
nice information to Saivamar
நன்றி நண்பரே.
சிவ சிவன் எல்லாம் சிவன்