இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழனுடைய கலாச்சாரமா?.
தமிழனின் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள். அவனுடைய தந்தைக்கும், அண்ணனுக்கும் கூட இரண்டு மனைவிகள். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நாத்திகத்தில் கூட இரண்டு பொண்டாக்காரன்கள் இருக்கின்றார்கள். தமிழனின் தலைவனாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட தாத்தா கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். பகுத்தறிவு தந்தையான பெரியாருக்கோ இரண்டு மனைவிகள்.

இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ஒரு சின்ன நகைச்சுவைக் கதை. நித்தியானந்தரை குமுதம் அறிமுகப்படுத்தியது, ஆனந்த விகடனில் வெளியான சுவாமி சுகபோனந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” என்ற தொடருக்கு பிறகு தான் என்று சொல்லுகின்றார்கள். அந்த மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,….

அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள்.

“இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்..” என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்.”இப்படி கருகருவென்ற தலைமுடியோடு இருக்கும் உங்களுடன் நான் ஜோடியாக வெளியே வந்தால், பார்ப்பவர்கள் என்னைத் தான் “பாட்டி” என்று பரிகாசம் செய்வார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தலையில் இருந்த கருப்பு முடிகளையெல்லாம் பிடுங்கிவிட்டாள்.

ஆக மொத்தத்தில் அவன் இப்போது முழு மொட்டை.

என்ன சிரித்தீர்களா?…

பின்னூட்டமொன்றை இடுக