சென்னை புத்தக கண்காட்சிக்கு வைரமுத்துவும், வாலியும் வரும் நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களே என் தேர்வாக இருந்தது. இப்போது இருவரின் பேச்சையும் நேரில் கேட்க வேண்டும் என் ஆசையும் பூர்த்தியாகிவிட்டது. நான்காம் நாள் கண்காட்சி அனுபவங்கள் இங்கே!.
வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பிரபல பதிப்பகங்கள், குழந்தைகளுக்கான பதிப்பகங்கள் தவிற மற்ற இடங்களில் காத்து வாங்கியது. மக்களின் ரசனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு சாட்சியாய் கலைஞரின் புத்தகங்களுக்கான இரண்டு அரங்குகளிலும் ஒருவர் கூட இல்லை. அதில் ஒரு அரங்கில் 20க்கும் மேல் புத்தகங்களே இல்லை. சட்டத் துறை நூல்களை கொண்ட இரண்டு அரங்குகள் கண்களில் பட்டன. அங்கே கைதானால் உங்கள் உரிமைகள் என்ன. தகவல் பெரும் உரிமைச் சட்டம் என இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இரண்டு ரூபாய் சில்லரை இல்லையென குட்டிப் புத்தகம் ஒன்றையும் தந்தார்கள்.
1000 ரூபாய் மதிப்புள்ள கீதை 120 ரூபாய் என விற்கப்பட்டது. எப்படிதான் கட்டுப்படி ஆகின்றதோ!. விகடன் 140 புத்தகங்களின் விலையை குறைத்து வெளியிட்டிருந்தது. விலைவாசி உயர்வுக்காக புத்தகங்களின் விலையும் கூட்டி விற்கும் பதிப்பகத்திற்கு மத்தியில் இப்படியும் ஒன்றா என்று வியப்பாக இருந்தது. அந்த பட்டியலில் இருந்த ஏடாகூட கதைகளை வாங்கிக் கொண்டேன்.
வைரமுத்து வரப்போகிறார் என்று மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேரம் குறைவாக இருப்பதால் கிழக்கு பதிப்பகத்தின் பக்கம் செல்லாமல், உயிர்மை பதிப்பகத்திற்கு சென்று விட்டேன். அங்கே பாக்கெட் நாவல் சைசில் எஸ்.ரா மற்றும் சாருவின் புதிய புத்தகங்கள் இருந்தன. ஆனால் விலை 90 ரூபாய்,. எதை வாங்குவது என தெரியவில்லை. வலையில் விமர்சனங்கள் படித்துவிட்டு பொருமையாக வாங்கலாம் என திரும்பினேன். கையில் அருவாளோடு ஐயனார் வீற்றிருக்கும் தமிழ் மண்ணின் சாமிகள் புத்தகம் கண்களில் பட்டது. அதை எடுத்துக் கொண்டேன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் ஏறத்தாள எல்லா அரங்குகளிலும் இருந்தது. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு விலை. நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்துக்களுக்கு பஞ்சமேயில்லை. பிரபல அரங்குகளில் சுஜாதா நிறைந்திருந்தார். சில அரங்குகள் நாவல்களுக்காக மட்டுமே இருந்தன. இம்முறை அந்தப் பகுதிகளுக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.
கண்காட்சிக்கு வெளியே வரும் போது, வரவேற்புரை நிகழ்ந்து கொண்டிருந்தது. வைரமுத்து, நக்கீரன் கோபால் என எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிட்டேன்.
சுவாரசியங்கள் –
ஞாநி அவருடைய அரங்கில் வாசகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பாரதியின் ஓவியம் அவருடைய அரங்கு என்பதை சொல்லிக் கொண்டிருந்தது.
ஒரு அரங்கில் நாஞ்சில் இருந்தார். அவரிடம் ஒரு வாசகி நாவல்களைப் பற்றி பாராட்டிக் கொண்டிருந்தார். சில வரிகளை சுட்டிக் காட்டி அந்த வரிகள் தன்னை பாதித்தாக கூறினார். அவர்கள் வாசகர்களின் வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தமையால் நாஞ்சிலை அறியாத ஒருத்தர், தள்ளி நின்று பேசுங்கள் என்று கூறி சாதாரணமாக நடந்து போனார்.
ஒரு சிறுவன் கண்காட்சிக்குள் வர மாட்டேன் என அடம் பிடிக்க, அவன் தந்தை தூக்கிக் கொண்டு போனார். தாய் அவனை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். சிலர் சாருவின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினார்கள். என்னவென்று பார்த்தால் சாரு அமர்ந்திருந்தார். அவருடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தினை சேர் செய்து வாங்கலாம் என ஒரு இளைஞன் தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
பார்த்தீபனின் கிறுக்கல்கள் புத்தகத்தினை நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் யாரும் வாங்கவில்லை. ஒருவன் சின்னக் கவிதையை தாளில் எழுதிக் கொண்டான். ஏன் என்று பார்த்தால் விலை 270.
சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகேயிருக்கும் சிக்னலில் ஒரு திருடன் தாலிக் கொடியை பறித்துவிட்டதாகவும், அது தவறி எங்கோ விழுந்துவிட்டதை சிலர் தேடிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் எந்த பெண்மணியையும் பார்க்க முடியவில்லை. காவல்துறையினர் கூட்டத்தினை விரட்ட நமக்கென்ன என நானும் வந்துவிட்டேன்.


இனிமையாக நடக்கட்டு!ம்!
நன்றி நண்பரே!.
[...] http://sagotharan.wordpress.com/2011/01/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0… [...]
அருமையான அனுபவப் பகிர்வு!நான்தான் இந்த ஆண்டு இன்னும் அந்தப் பக்கம் போகவில்லை.
பொறுமையாகவே செல்லாம் நண்பரே!. இப்போதுதான் நிறைய புத்தகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஜெ.மோவின் உலோகம் இப்போதுதான் கிடைப்பதாக கூறினார்கள். ஆனந்தவிகடனின் பொக்கிசமும் விரைவில் வரப்போகிறதாம். பொங்கலுக்குப் பிறகு சில நாட்கள் நடத்தினால், இன்னும் ஒரு முறை செல்லலாம்.
நன்றி நண்பரே.
fantastic
நன்றி நண்பரே!@.