பிளேபாய் – இலவச செக்ஸ் புத்தகம்


“பிளேபாய்” இந்த வார்த்தையை உபயோகிக்காத விடலைகளே இல்லை. நிர்வாணப் படங்களுகக்குப் புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிக்கையை ஆரமித்தவர் ஹயூச் ஹெஃப்னர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை. டீச்சர் பிள்ளை மக்கு என்ற பொன்மொழிக்கு மிகப் பொருத்தமாக இருந்தார் ஹயூச்.

ஹயூச் பள்ளிக் கூடத்தில் சரியான மக்கு என்று பெயரெடுத்தான். ஆசிரியையான தன்னுடைய குழந்தை மக்காக இருக்கிறானே என வருந்தினார் அவன் அம்மா. பிறகு ஒரு உளவியல் நிபுணரிடம் கொண்டு போய் சோதித்தார்.

ஹஃபின் அறிவில் ஆச்சரியமடைந்தார் மனோதத்துவ நிபுனர். “இவன் மிகச் சிறந்த அறிவாளி. தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறிவிடுவான்” என்றார். ஹஃபின் அம்மாவோ பையன் மக்காவே இருக்கிறான் என்றார். “இவனுக்கு படிப்பில் ஆர்வமில்ல. அவ்வளவு தான் மத்த படி, இவன் மந்தமான பையன் அல்ல” என்று பாராட்டினார்.

பெரியவன் ஆனதும் ஹெஃப்னர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா. தன் வீட்டில் இருந்த பர்னீச்சர்களை அடமானம் வைத்து அறுநூறு டாலரை புரட்டினான். அந்த பணத்தில் ஐந்நூறு டாலரை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்து கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் நிர்வாணப் படங்களை வாங்கினான். அது காலண்டர்களுக்கா நிர்வாணமாய் நடிகை மன்றோ கொடுத்த புகைப்படங்கள்.

மீதம் இருந்த நூறு டாலரை வைத்து பிளேபாய் முதல் இதழை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்தார். 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்கெட்டுக்கு வந்தது முதல் பிளேபாய் பத்திரிக்கை. காமத்தில் திளைத்திடும் மக்கள் சில நாட்களியே புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் போனார்கள். இந்த புத்தகங்கள் விற்குமோ, விற்காதோவென பயந்து கொண்டிருந்த ஹெஃப்னருக்கு ஆனந்தமாக இருந்தது.

அடுத்தடுத்து புதிய அழகிகளின் நிர்வாணப் படங்களோடு பிளேபாய் தொடர்ந்துவர ஆரமித்தது. அமெரிக்காவில் தொடங்கிய பயணம். உலகின் கடைக்கோடிவரை “பிளேபாய்” பத்திரிக்கையை அறிய செய்தது. நகைச்சுவை கலந்த செக்ஸ் பத்திரிக்கையாக வந்தாலும் பல குடும்ப பெண்கள், டாக்டர்கள், நடுத்தர வர்க்க மக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என எல்லோரும் வாங்கி பெருமைகொள்ளும் அளவிற்கு போனது.

மேலும் பார்க்க -


பிளேபாய் புத்தகங்கள்

நடிகைகளின் படங்கள்

இலவச தரவிரக்கம்


2007 புத்தகங்கள் அனைத்தும் இலவசமாய்

கொஞ்சிக் கொல்பவள்…

கொஞ்சிக் கொல்பவள்

சிலர் ஆயுதம் எடுக்கிறார்கள்
சிலர் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்
ஆனால் யாரும் உன்னைப் போல
கொஞ்சியே கொல்வதில்லை!.

அடுத்தவன் மனைவி

ஏற்கனவே திருமணம் ஆன உன்னை
இனியும் காதலிப்பது தகுமோ என
எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீ வந்தாய்,
கழுத்தில் தாலியில்லாமலும்,
காலில் மெட்டியில்லாமலும்…

அதிர்ந்து போய் நின்றேன்,
சிரித்துக் கொண்டே சொன்னாய்,
“கனவில் நீ கட்டியதெல்லாம்
கண்ணுக்குதெரியாதென!”

மயிலிறகு

குட்டிப்போடுமென நீ கொடுத்த
மயிலிறகுகளுக்கு
பிரசவகாலம் நெருங்கி விட்டது
அதனால்
தாய்வீடு தேடி
கொண்டு வந்திருக்கிறேன்
மறுக்காமல் வாங்கிக் கொள்!

திருட்டுப்பய

காதல் காதலென்று கத்திக்கொண்டு
காதல் தெருவில் ஓடினேன்
நான்…
கள்வன் கள்வன் என்று சொல்லி
துரத்திக் கொண்டுவந்தாய்
நீ…

படங்களுக்கு சில இணைய தளங்கள் -

take earth
webshots
corbisimages

eyefetch
gettyimages
pbase

lonelyplanetimages

மதுரை வீரன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.

எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

கதை -

வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

நன்றி –
மதுரைவீரன் கதைப்பாடல்

சிறந்த 10 உலக அழகிகள் 2010

தமிழ் மண்ணின் சாமிகள் தொடரையே தொடர்ந்து வெளியிட வேண்டாம் வேறு ஏதேனும் செய்யலாம் என்று எண்ணினேன். அந்நேரம் “மாப்பு இது யாருன்னு தெரியுதா” என்று Maxim இதழை தூக்கிப்போட்டவாறு கேட்டான் நண்பன். அட இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்று அதிர்ந்து போனேன். காரணம் அட்டைப்படத்தில் திரிசா இப்படி இருந்தார்.

“விட்டா இந்த வருசம் உலக அழகிகளை தோக்கடிச்சுடுவா நம்மாளு” என்றான், திரிசா ரசிகன். எனக்கும் இந்த வருடம் சிறந்த 10 உலக அழகிகள் யார் என பார்த்துவிடலாம் என தோன்றியது. கூகுளேஸ்வரனிடம் கேட்டேன்,. இதோ,…

10.Jessica Simpson -

9.Christina Aguilera -

8.Lindsay Lohan -

7.Jessica Biel -

6.Charlize Theron -

5.Beyonce -

4.Halle Berry -

3.Angelina Jolie -

2.Scarlett Johansson -

1.Jessica Alba -

திரிசாதான் என்றில்லை, நம்மூர் நடிகைகள் எல்லோரும் ஆடைக்குறைப்பில் இப்போது கவணம் செலுத்து தொடங்கிவிட்டார்கள். தயாரிப்பாளரின் செலவை குறைப்பதற்கான முயற்சி என்பதால் நாம் பாராட்டிவிட்டு போகவேண்டியது. சரி உருப்படியான வேலையை செய்யப் போங்க!,…

முத்துப்பட்டன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.

ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.

முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். ‘ ‘தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா ‘ ‘ என்றனர். முத்துப்பட்டனோ ‘ ‘நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.

முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். வழியில் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் ‘ ‘நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.

முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஒரு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.

அப்பெண்களிடம் ‘ ‘இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள் ‘ ‘ என்றான்.

அந்தப் பெண்களோ ‘ ‘என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது ‘ ‘ என்றனர்.

முத்துப்பட்டன் அவர்களிடம் ‘ ‘நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்

தந்தையிடம் ‘ ‘தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான் ‘ ‘ என்றனர். தந்தையான பகடை ‘ ‘இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன் ‘ ‘ என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ‘ ‘ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். ‘ ‘ நீர் யார் ? ‘ ‘ எனக் கேட்டான்.

சக்கிலியன் ‘ ‘என் பேர் பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் ‘ ‘ என்றான்.

அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ‘ ‘ ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் ‘ ‘ என்றான்.

பகடையோ ‘ ‘ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா ? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே ‘ ‘ என்றான்.

பட்டனோ ‘ ‘மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் ‘ ‘ என்றான்.

பகடை ‘ ‘எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் ‘ ‘ என்றான்.

முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் ‘ ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? ‘ ‘ என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.

முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.

பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.

திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.

அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். ‘ ‘அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் ‘ ‘ என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ‘ என் மாடுகளைத் திருடிய ‘வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் ‘ ‘ எனக் கூறிப் புறப்பட்டான்.

முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை வகை வைக்கவில்லை. மனைவிகள் வளர்த்த பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.

அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். பட்டன் இறந்ததைப் பார்த்து பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.

பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.

அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர். அவர்கல் கதையை கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். மன்னன் அவர்களுக்கு கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி அருள் புரிந்தனர்.

நன்றி -
அ. கா. பெருமாள்

சுயஇன்பம் பற்றி மாபெரும் அலசல் – 1 (முதலில் அனுபவித்தவர்)

விடலைகளின் விசயத்தில் எல்லோரும் கவணம் கொள்வதில்லை. நாளுக்கு நாள் இங்கு பாலியல் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதைத் தடுக்க முடியாவிட்டாலும், தடுக்க முயற்சி செய்கின்ற தொடர்.

ஆண் குழந்தைகளின் முகத்தில் மீசை துளிக்க ஆரமிக்கின்ற நேரம், பாலியல் பற்றிய புரிதல்களும், தேடுதல்களும் தொடங்குகின்றன. அந்த தேடுதலின் விளைவுகளினால் நண்பர்களாலோ, தானாகவோ அவர்களுக்கு சுயஇன்பம் அறிமுகமாகிறது. ஆனால் அப்போதிலிருந்து அவர்களுக்குள் “சுயஇன்பம்” பற்றிய கேள்விகள் துளைத்தெடுக்க ஆரமிக்கின்றன.

இந்த பழக்கம் சரியானதா?.
நாம் மட்டும் தான் இதைச் செய்கிறோமா?.
பெண்களுக்கும் இப்பழக்கம் இருக்கிறதா?.
இதை வி்ட்டுவிட இயலுமா?.
தொடர்ந்தால் ஆண்மை பறிபோகுமா?.
ரத்தம் தான் விந்தனுவாக வெளியேறுகிறதா?.
இந்த உணர்வு ஏன் எனக்கு ஏற்படுகின்றது?.

இதெல்லாம் சிறு எடுத்துக்காட்டுதான். இது போல எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் விடை எளிதில் கிடைப்பதில்லை. இவை எல்லாவற்றிக்கும் விடையளிக்கவே இந்த தொடர். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஆதரவு தாருங்கள்.

சுயஇன்பம் -

ஆணோ, பெண்ணோ தன்னுடைய பிறப்புறுப்பினை வலுக்கட்டாயமாக தூண்டிவிட்டு இன்பம் அனுபவி்ப்பதே சுய இன்பம். இந்த செயலின் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதே நோக்கமாகும். சுயமாக தனக்குதானே பிறப்புறுப்பினை தூண்டிவிட்டுக்கொள்ளுதலையும், பிறருக்கு செய்வதையும் இதோடு இணைத்துவிடலாம். ஆங்கிலத்தில் Masturbation என இது அழைக்கப்படுகிறது.

இதற்கு கைமுட்டி, கைப்பழக்கம், கையடித்தல் என பல்வேறான பெயர்கள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் ஆண்களின் சுயஇன்பத்தினைக் குறிப்பதாக உள்ளது. பெண்களின் சுயஇன்பத்தினைக் குறிக்க, கைப்போடுதல் என்று கிராமத்தில் சொல்வார்கள்.

ஆண் சுயஇன்பம்

ஆண் சுயஇன்பம்

பெண்ணின் சுயஇன்பம்

மாறி சுயஇன்பம் கொள்ளுதல்

மாறி சுயஇன்பம் கொள்ளுதல்

எல்லோரும் நினைக்கிற மாதிரி சுயஇன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால் இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றவர்கள் குறைவு.
- டாக்டர் நாராயணரெட்டி – உயிர் புத்தகத்தில்.

இதை இந்து மதம் தவிற மற்ற எல்லா மதங்களும் மறுக்கின்றன. ஏன் இந்து மதம் மறுக்கவில்லையா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. (இந்து மத குருமார்கள் வேண்டுமானால் மறுக்கலாம்). முனிவரின் சிந்தியிருந்த விந்தினை கிளி உண்டு கிளிக்கு பிள்ளை பிறந்தமையை சுகர் பிரமம் கதை விவரிக்கிறது. சகோதரனில் சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர் என்ற இடுகை கூட வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நான் சொன்னதை அறிந்து கொள்ள இயலும்.

சுயஇன்பத்தை முதலில் அனுபவித்தவர்-

ஆடாம்

சுயஇன்பத்தினை முழுவதுமாக ஆதரிக்கிறது எகிப்திய மதம். பழங்கால எகிப்திய கடவுள் ஆடாம்.இவர் சுயம்புவாக உருவானவர்.உலகமே வெற்றிடமாக இருந்த சமயம்.அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுயஇன்பம் அனுபவித்தார். ஆக முதலில் சுயஇன்பம் அனுபவித்தவர் ஆடாம் கடவுள்.

அவருடைய ஆண்குறியிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷூ மற்றும் டெஃப்நட் என்னும் இரண்டு கடவுள்கள் தோன்றினர்கள். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உயிர்களைப் படைத்தார்கள் என்கிறது எகிப்திய புராணம்.

இன்பம் தொடரும்,…

குறிப்பு -
உங்களுக்கு தேவையி்ல்லாதது இது என்று நினைத்தால், தயவு செய்து படிக்காமல் சென்றுவிடுங்கள். எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வதில் நேரம் கடத்தாதீர்கள்.

சுடலை மாடன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.

பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.

அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.

சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.

சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.

அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.

மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.

காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.

பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.

அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.

திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான்.

நன்றி -
சுடலை வீரன் ஆலயம்

பொன்னிறத்தாள் அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கடையம் என்ற ஊரிலே அணஞ்சபெருமாள் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பொன்மாரி என்பவள் மிகவும் அழகுடையவள். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு குழந்தைகள் பிறந்தன. சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் என அவர்களுக்குப் பெயரிட்டிருந்தான்.

ஏழு பெண் குழந்தைகள் இருந்தும் பெண் குழந்தை இல்லையே என்ற கவலை பொன்மாரிக்கு ஏற்பட்டது . அவள் கோவிலைத் கூட்டிப்பெருக்கி நீர் தெளித்து கடன்செய்தாள். நாள்தவறாமல் விளக்கேற்றி ஈரத்துணி உடுத்து கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலை நாதன், சிவனணைஞ்ச மார்த்தாண்டன் ஆகிய தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக்கொண்டாள். அதன் பலனாக அவள் கர்ப்பமுற்றாள். பத்தாம் மாதத்தில் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பொன்மாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனக்கு உதவி செய்த பெண்களுக்குப் பொன்னை வாரி வாரிக் கொடுத்தாள்.

பொன்னிறமாயிருந்த அக்குழந்தைக்குப் பொன்மாரி எனப் பெயரிட்டனர். அவள் வளர்ந்து அழகிய பெண்ணாக மாறினாள். பொன்னிறத்தாளின் அழகு பக்கத்து ஊரெல்லாம் பரவியது. அவளுக்குத் தோழிகளும் பெருகினர்.

ஒருநாள் பொன்னிறத்தாளும் அவள் தோழிகளும் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே திருமலை நாயக்கனின் தளவாயின் மகன் இணைசூரப்பெருமாள் வந்தான். அவனுடன் துட்டன், வெள்ளையத்தேவன், துங்களபுரி மறவன், சையீட்டிக்காரர்கள் ஆகியோர் வந்தனர். இணை சூரப்பெருமாள் வேகமாய் பந்தாடும் இணையகொடி பொன்னிறத்தாளைக் கண்டதும் மெய்மறந்து நின்றான்.’ நாட்டிலே இவனைப்போல் அழகியைக் கண்டதில்லை ‘ எனத் திகைத்து நின்றான்.

இணைசூரன் பந்து விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியை அழைத்தான். இவள் யார் எந்த ஊர் எனக் கேட்டான். தோழிகள் ஐயா இவள் பெயர் பொன்னிறத்தாள். ஊர் தென்காசி. இவள் தந்தை பெருமாள் தலைவன். இவளுடன் ஏழு சிங்கங்கள் பிறந்துள்ளனர். இவளது உறவினர்கள் கடையத்தில் வாழ்கின்றனர் என்றனர்.

இணைசூரனுக்குப் பொன்னிறத்தின் அழகு அறிவை மயக்கியது. உடம்பை உருக்கியது. தன் அரண்மனையில் சென்று படுத்தான். அவனது சோகக் கோலத்தைக் கண்ட தாய் “என்ன நடந்தது மகனே ? ” எனக் கேட்டாள்.

மகன் அம்மா, நான் உலாப்போகும்போது பொன்னிறத்தாள் என்ற பெண்ணைக் கண்டேன். தளவாய் நாயக்கன் மகனாம், அவளில்லாமல் நான் வாழமுடியாது அம்மா என்றான். அவன் தாயோ மகனே அந்தப் பொன்னிறம் உன் முறைப்பெண்தான். அவளை எப்படியும் உனக்கு மணமுடித்து வைக்கிறேன் கவலைவிடு என்றாள்.

இணைசூரனின்தந்தைனொரு நன்னாளில் உரிய வரிசைகளுடன் தளவாய் நாயக்கனின் வீட்டிற்குப் போய் ‘ உன் மகளை என் மகனுக்குத் தா ‘ எனக் கேட்டான். இணைசூரனும் மகளைக் கொடுக்க இசைந்தான். நல்லநாளில் இனிதாக திருமணமும் நடந்தது. அவர்கள் மதுரையில் மனம் ஒத்து சிறக்க வாழ்ந்தனர்

திருமணம் முடிந்த இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள். ஏழாம் மாதத்தில் தன் குலவழக்கப்படி தன் தாய் வீட்டிற்கு வந்தாள். வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். படி சறுக்கியது. துர்சகுனமாயிற்றே என்ன ஆகுமோ என நொந்துகொண்டே வீட்டினுள் புகுந்தாள். பொன்மாரி மகளின் பருத்த வயிற்றைக் கண்டு மகிழ்ந்தாள். குலம் தழைக்கப்போகிறது என்று நிறைவு கொண்டாள்.

ஒன்பதாம் மாதத்தில் முளைப்பாரி வைக்கவேண்டும் என்றாள் பொன்னிறத்தாள். அவளது இருபத்தொரு தோழிகளும் ஏழு நாட்கள் விரதம் இருந்தனர். பலவகை வித்துக்களைச் சட்டியிலே இட்டு குருத்தோலை கொண்டு மூடிவைத்தனர். ஏழாம்நாள் வளர்ந்திருந்த முளையை எடுத்துப் பார்த்தபோது எல்லா பெண்களும் வைத்த முளைகளும் வளர்ந்திருந்தன. பொன்னிறத்தாளின் முளை அழுகிப்போய் இருந்தது. எல்லாப் பெண்களும் முளைகளைச் சுனையிலே விட்டனர். எல்லாம் நீரில் மிதந்தன. பொன்னிறத்தாளின் முளையோ நீரில் அமிழ்ந்தது. பொன்மாரி இதைஎல்லாம் அறிந்து என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து வருந்தினாள்.

தோழிகள் சுனையாடச் செல்லப் புறப்பட்டனர். பொன்னிறத்தாளையும் அழைத்தனர். அவள் எனக்கு நிரம்ப வேலை இருக்கிறது. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் வருகிறேன் என்றாள். தோழிகள் சென்றதும் பொன்னிறத்தாள் தயிர் கடைய மத்தை எடுத்தாள். அப்போது பூனை பானையை உருட்டியது. இது என்ன தீய சகுனம் என்று நினைத்து வள் மனம் நடுங்கினாள்.

பொன்மாரி சமைமயல் செய்துகொண்டிருக்கும்போது பொன்நிறம் சமைலறைக்கு வந்தாள். மகளே இன்று நீ சுனையாடப் போக வேண்டாம். உன்னைத் திருடர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டாளம்மன் கோவிலில் பலி கொடுப்பதாகக் கனவு கண்டேன். நீ போகாதே என்றாள் பொன்மாரி.

பொன்னிறத்தாளோ விதிப்படி நடப்பதைத் தடுக்கமுடியாது. நடப்பது நடக்கட்டும் என்றாள்.

பொன்னிறத்தாள் சுனையாடுவதற்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு சுனையாடப் புறப்பட்டாள். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்காமல் கிளம்பிப் போனாள். வழியில் தீய சகுனங்கள் எதிர்பட்டன. குறத்தி ஒருத்தி பொன்னிறத்தாளைத் தடுத்து சுனையாடப் போகாதே என எச்சரித்தாள். பொன்னிறமோ எவற்றையும் லட்சியம் செய்யாது சுனைக்குச் சென்றாள்.

சுனைக் கரையில் தோழிகள் நின்றனர். பொன்னிறத்தைக் கண்ட தோழிகளுக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் சுனையாட இறங்கினர். அப்போது திடீரென மேகம் கவிந்தது. மழை கருக்கொண்டது. புயல் வீசியது. தோழிகள் அவசரமாகக் கரை ஏறினர். பொன்னிறத்தாளும் சுனைக்கரைக்கு வந்தாள். தோழிகள் ‘ மழை பெய்யப்போகிறது , வா நாம் வாகைநல்லூர் அம்பலத்துக்குச் செல்வோம் ” என்றனர். எல்லோரும் நடந்தனர். பொன்னிறம் மெல்ல நடந்தாள். முழு கர்ப்பிணியானதனால் அவளால் தோழிகளை எட்டிப் பிடிக்கமுடியவில்லை.

புயல் வேகமாக வீசியது. ஒரு புளியமரத்தின் அருகே சென்றாள். அந்த மரம் காற்றில் சரிந்தது. அவள் எங்கே நிற்பது என்று தெரியாமல் அலைந்தாள். தோழிகளைக் காணாமல் மழையிலும் காற்றிலும் பதறினாள்

அநத நேரத்தில் 61 திருடர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர். ” எங்கே இன்று திருடச் செல்வது ?” என்று கேட்டான் ஒருவன். இன்னொரு திருடன் இந்தக் காட்டில் உள்ள காட்டாளம்மன் கோவிலில் ஒரு கருவூலம் இருக்கிறது. அதை எடுப்போம் என்றான். உடனே ஒரு திருடன் நான் மந்திரம் படித்தவன். கருவூலம் இருக்கும் இடத்தை மையிட்டுப் பார்க்கிறேன் என்றான். அவன் தீ வளர்த்து மையிட்டுப் பார்த்தான். இந்தக் கருவூலத்தில் கெட்ட வாதைகள் [பேய்கள்] உள்ளன. நாம் இங்கே இருக்கவேண்டாம். வட்டப்பாறைக்குப் போவோம் என்றான்.

கள்ளர்கள் எல்லோரும் வட்டப்பாறையில் கூடினர். குறிகாரக் கள்ளன் பிரசன்னம் [சோழி சோதிடம்] வைத்துப் பார்த்தான். ” இக்கருவுலத்தை ஒரு இசக்கி காவல் காக்கிறாள். இந்தக்கருவூலததை எடுக்க பாலாடு சூலாடு கரும்பூனை சேவல் போன்ற பலிகள் கொடுக்கவேண்டும். அதோடு சூலான பெண் ஒருத்தியையைம் இசக்கி பலி கேட்கிறாள் என்றான். மற்ற கள்ளர்கள் எல்லா பலிகளையும் கொடுக்கலாம். சூல் பெண்ணுக்கு எங்கே போவது என சிந்தித்தனர்.

ஒரு கள்ளன் நாம் எல்லோரும் இங்கே வரும்போது சுனைக்கரையில் ஒரு சூலி நின்றதைப் பார்த்தேன் என்றான்.

இந்த நேரத்தில் காட்டாளம்மன் கோவிலுக்குப் பூசை செய்ய ஒரு மறையவன் வந்தான். கோவிலின் முன்னே கள்ளர்கள் கூடியிருப்பதைப் பார்த்து இங்கே எல்லோரும் கூடியிருக்கிறீர்களே என்ன விசேஷம்- என்று கேட்டான்.

ஒரு கள்ளன் குறும்பாக காட்டாளம்மன் கோவிலுக்குப் பலிகொடுக்க ஒருவளைத் தேடிக்கொண்டிருந்தோம். நீ வந்துவிட்டாய் என்றான்.

மறையவன் அய்யோ அண்ணன்மார்களே உங்களுக்குப் பலிகொடுக்க ஒரு சூலியைக் காட்டித் தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்றான்.

கள்ளர்கள் நல்லது. அவளை எங்களுக்குக் காட்டிவிட்டு நீ செல்வாய் என்றனர்.

வேதியன் கள்ளர்களை வழிநடத்தி அழைத்துச் சென்று பொன்னிறம் நின்றுகொண்டிருந்த மரத்தைக் காட்டினான். கள்ளர்கள் பொன்னிறத்தைக் கண்டதும் வேதியனை விட்டுவிட்டனர். பொன்னிறத்தாளின் அருகிலே வந்து பெண்ணே நீ யார் எனக் கேட்டனர். அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.

பொன்னிறம் கள்ளர்களிடம் அண்ணன்மார்களே என்னை என் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தால் என் தந்தை நீங்கள் கேட்ட பொன்னைத் தருவார்கள் என்றாள். அவள் அஞ்சி அழுதுகொண்டே அவர்களிடம் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள்.

கள்ளர்கள் “பெண்ணே நாங்கள் இந்தக் காட்டின் வழி மாடு பிடிக்கப் போகிறோம். உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கிறோம் வா” என்றனர்.

அவள் அவர்களுடன் மெல்ல நடந்தாள் ஒன்பது மாதச் சூலியான அவளால் நடக்கமுடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சிய கள்ளர்கள் அவளை ‘ சீக்கிரம் நட ‘ என்றனர். ஒரு மாபாவிக்கள்ளன் அவளை எருக்கலைக் கொம்பால் அடித்தான். ஒருவன் புளியம் விளாறால் அடித்தான். அவள் அடி பொறுக்கமுடியாமல் அழுதாள். கள்ளர்கள் அவளைக் காட்டாளம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்தனர்.

கோவிலின் முன்னே பெரிய பரண் கட்டி குலை வாழை நட்டனர். குருத்தோலை கட்டினர் துள்ளுகிடாவும். குட்டியும் சூலாடும் கொண்டுவந்து கோவிலின் முன்னே வைத்து அவற்றின் நெஞ்சைப் பிளந்து குருதியைத் தெளித்து வாதைகளுக்கு பலி தந்தனர். வடக்கு வாசலில் பன்றியைப் பலியிட்டனர். சூல் பன்றியின் நெஞ்சைப் பிளந்தனர். மேற்குவாசலில் பூனையை வைத்துக் கீறினர்.

பின்னர் கருவூலம் இருந்த இடத்தில் பலி கொடுக்க பொன்னிறத்தாளைக் கொண்டுவந்தனர். அச்சத்தால் அலறி களைத்து பரண்மீது மயங்கிப்போய் அவள் கிடந்தாள்.

கள்ளர்கள் அவளைப் பரண்மீது வைத்து இறுகக் கட்டினர். ஒருவன் அவள் அடிவயிற்றைக் கீற ஓடிவந்தான். அவளது அழகிய முகத்தைக் கண்டு பின்வாங்கினான். அதன் பிறகு ஒரு மொட்டையன் வந்தான். அவனும் அவளைப் பலிகொடுக்கத் தயங்கினான். கடைசியாக ஒரு மறவன் வந்தான். தயங்காமல் பொன்னிறத்தாளின் அருகே ஒரு தலைவாழை இலையை விரித்தான். அவள் வயிற்றைக் கீறினான். வயிற்றில் இருந்த ண் கருவை வெளியே எடுத்து வைத்து பலிதந்த பிறகு அவள் காலி வயிற்றில் எரியும் திரியை நட்டான்.

கள்ளர்கள் பலியைச் சுற்றி வந்து குரவையிட்டனர். இசக்கியை திருப்தி செய்து கருவூலத்தைத் திறந்து பொன்னை எடுத்தனர். ஒரு கள்ளன் சொன்னான். நாம் பொன்னை அளக்க மரக்கால் கொண்டுவரவில்லை. அதனால் மூங்கில் குழலை வெட்டி வருவோம். வந்தபின் அளக்கலாம் என்று. பத்து திருடர்கள் மூங்கில் வெட்ட காட்டுக்குச் சென்றனர். அவர்களின் கொடூரத்தைக் கண்டு வெகுண்ட காட்டாளம்மை அவர்களின் மேல் புலி கடுவாய்களை ஏவிவிட்டாள். அவர்களை அம்மிருகங்கள் கடித்தன. மற்ற கள்ளர்களை வேதாளங்கள் அடித்தன. எல்லா கள்ளர்களும் இறந்தார்கள். இறந்தவர்கள் நரகத்துக்குச் சென்றார்கள்.

இந்த நேரத்தில் பொன்னிறத்தைக் காணவில்லையே என்று அவள் தாய் பரிதவித்துக்கொண்டிருந்தாள். தோழிகளை அழைத்துக் கேட்டாள். அவர்களுக்கும் பொன்னிறத்தைப் பற்றித் தகவல் தெரியவில்லை. தாய் தந்தையை அழைத்துக் கூறினாள். எல்லா உறவினர்களும் கூடினர். காட்டுவழி சென்று தேடினார்கள். சுனைக்கரையில் பொன்னிறத்தைக் காணவில்லை. காட்டிலும் அவளைக் காணவில்லை.

உறவினர்கள் அவளது காலடித் தடத்தை அடையாளம் கண்டனர். அதை பார்த்து நடந்தனர். அப்போது காயத்தில் கழுகுகள் கூட்டமாகப் பறப்பதைக் கண்டனர். மனம் பதைக்க அந்த இடத்தை அடையாளமாகக் கொண்டு ஓடினார்கள். அந்த இடம் காட்டாளம்மன் கோவிலாக இருந்தது. கோவிலைச் சுற்றி கோழி, ஆடு, பூனை பலிகளைக் கண்டனர். இணைசூரன் கோவிலுக்குள் சென்றான். வயிறு பிளந்தநிலையில் பொன்னிறத்தாளைப் பார்த்தான். அருகிலே கரு. இணைசூரன் அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

மற்றவர்களும் பொன்னிறத்தாளின் உடலைப் பார்த்து பதைத்து விழுந்தனர். பொன்னிறத்தின் தாய் உடனேயே மனமுடைந்து இறந்தாள். ஏழு அண்ணன்மார்களும் மனம் பொறாமல் தங்கள் வாளை மண்ணில் நட்டு அதன்மீது பாய்ந்து உயிரை விட்டனர். எல்லோரும் இறந்தபிறகு இணைசூரனும் வாளை நட்டுப் பாய்ந்து உயிரை விட்டான்.

இறந்துபோன பொன்னிறம் ஆத்மா அடங்காமல் பேயாகி கைலைமலைக்குச் சென்று சிவனிடம் பல வரங்கள் வாங்கினாள். வாவறை, சிறுமாங்குளி, மூன்றரைக் கூடம் போன்ற இடங்களில் இசக்கியாக இருக்க வரம் கேட்டாள். தன்னைப் பலி வாங்கிய கள்ளர்களின் உறவினர்களை தேடிச்சென்று கொன்று குடல்மாலை சூடி பழி வாங்கினாள். தன்னைக் காட்டிக்கொடுத்த வேதியனை கொன்றாள். அவன் குடும்பத்தை அலைக்கழித்தாள்.

அதன் பின் அவள் தன் தோழிகளைப் பார்க்கப் போனாள். அவர்கள்ளேற்கனவே இறந்து சுனைக்கரையில் பேய்களாக நின்றனர். அவர்களுடன் அவள் இரவில் சுனையாடினாள். காட்டாளம்மநை வழிபட்டாள் . அம்மன் பொன்னிறத்துக்குச் சில வரங்கள் கொடுத்தாள்.

பொன்னிறத்தாள் அதன் பிறகு உக்கிரமான பேயாக மதுரைக்குப் போனாள். அங்குள்ள மக்களைத் துன்புறுத்தினாள். பாண்டிநாட்டு பட்டத்து யானை மீது ஏறி மதுரையைச் சூறையாடினாள். மன்னனின் சோதிடன் மலைவேலனை அழைத்து யானையைப் பிடித்த பேயை விரட்டவேண்டும் என்றான். இளவேலன் மந்திரம் போட்டு பொன்னிறத்தை அறிந்துகொண்டான். அவன் தன் மந்திர வல்லமையால் பொன்னிறதாளை விரட்டப் பார்த்தான். பொன்னிறத்தாள் வேலனை அடித்துக் கொன்றாள் . அவளை யாருமே வெல்ல இயலவில்லை

ஆனால் வேலனின் மனைவி வேறு பலிகள் கொடுத்து பொன்னிறத்தை வணங்கினாள். மனம் அடங்கிய பொன்னிறத்தாள் பெண்ணுக்கு இரங்கி கணவனுக்கு உயிர்பிச்சை அளித்தாள். அதன் பின் ஊரார் அவளுக்கு மதுரையில் அவளுக்கு கோயில் கட்டினர்

பொன்னிறத்தாள் மதுரையிலும் நெல்லையிலும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்புரிகிறாள்.

நன்றி -
ஆ.கா.பெருமாள்

வாழைத் தோட்டத்து அய்யன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

வாழைத் தோட்டத்து அய்யன் துணை என்று எழுதப்பட்ட வாகணத்தினைக் கண்டேன். பச்சை வாழையம்மனைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். இந்த அய்யன் இப்போதுதான் கவணத்தில் வருகிறான். வீட்டிற்கு வந்தவுடன் கூகுளாண்டவரைக் கேட்டேன். கிடைத்தது அய்யன் கதை.

வாழையின் மகிமை -
எங்கள் ஊரின் தலையாய விவசாயம் வாழை என்பதால் அதனைப் பற்றி நன்றாக தெரியும். குறுத்து இலை முதல் அடிக்கிழங்கு வரை பயன்படாத பாகங்களே இல்லை. அப்படியிருக்க இந்த வாழைக்கும் அய்யனுக்கும் என்ன தொடர்பென ஆராய்ந்தால். வாழையைப் போல அண்டி வந்தோருக்கு எல்லாமுமாக உதவக் கூடியவன் இந்த அய்யன் என்ற நோக்கில் பெயரிட்டிருக்கின்றார்கள்.

அய்யனின் கதை -

அய்யனின் இயற்பெயர் சின்னையன். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார்.அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார்.

பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை.ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.

அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் “” நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்”, என்று கூறிவிட்டார்.மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார்.

இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

கோவில் -

இந்த வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கோவை மவாட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி ஊரில் இருக்கிறது. புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை .

காரைக்கால் அம்மைக் கோவில் ஓவியங்கள்

அதென்னமோ தெரியவில்லை, வெளிநாடுகளில் இருக்கும் சிறுசிறு கட்டிடங்களின் திறனையும், சின்ன சின்ன ஓவியங்களையும் கொண்டாடத் தெரிந்த நமக்கு நம் அருகில் இருக்கும் சிற்பங்களின் அமைப்பையும், ஓவியங்களின் அதிசயத்தையும் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.

பேயுருவத்தில் காரைக்கால் அம்மையார்

காரைக்காலிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, சென்றேன். கல்லூரி நாட்களில் தவறாது அருள் செய்த அம்மையை காலை முதல் வேளையாக தரிசிக்க சென்றேன். செருப்பினை விடும் வேளையில் எதற்ச்சையாக மேலே பார்க்க, காளையும், யானையும் ஒருசேர இருந்த சுவரோவியம் ஈர்த்தது. காளை, யானை இரண்டின் முகங்களும் ஒட்டியபடி இருக்கும், யானையின் உடலோடு தலையை தேடினால் யானை தெரியும், காளையின் உடலைக் கொண்டு தேடினால் காளை தெரியும்.

யானையும், காளையும் இணைந்திருக்கும் சிற்பம்

எங்கள் ஊரில் இருக்கும் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆஞ்சினேயர் கோவிலில் இந்த ஓவியத்தை சிற்பமாக கண்டிருக்கிறேன்.

அம்மைக்கு மாம்பழம் ஈசன் கொடுத்தல்

பிறகு அம்மையின் சுற்றுப்புறச் சுவர்களில் வரைந்திருந்த வாழ்க்கை வரலாறு ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. தத்துரூபமான ஓவியங்கள். அம்மையின் பிறப்பு முதற்கொண்டு, திருமணம், மாங்கனி திருவிளையாடல், அம்மையின் பேயுருவம் என சகலமும் வரையப்பட்டிருக்கிறது. அம்மையின் சந்நிதியின் முன்புறம் இருக்கும் இரண்டு துவாரபாலகைகளின் உருவம் அம்மனுக்கு இணையான தெய்வீகத்தன்மையுடன் இருந்தது.

குரங்கின் ஓவியம் - காரைக்கால்

பனிரெண்டு ராசி ஓவியமும், இல்யுசன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற அதிசயமான ஓவியங்களும் இருந்தன. அடுத்து நான் கண்டது, ஒரு தலை பல உடல்களுடன் பொருந்திய குரங்கின் ஓவியம். மிகவும் நேர்த்தியாக எல்லா உடல்களுடனும் அந்த ஒரே தலை பொருந்த இருப்பது ஆச்சிரியமான ஒன்று. இந்த ஓவிய அமைப்பை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அது திருச்சியில்.

குரங்கின் ஓவியம் - திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சித்திரக் கூடம் என்ற ஒரு பகுதியுண்டு. அங்கே விதவிதமான ஓவியங்கள் இருக்கின்றன. நிர்வாணமாய் பெண்கள் முலைகள், யோனிகள் தெரிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி, ஏறியபடி என்றெல்லாம் இருப்பதைக் கண்டேன். “ச்சீ என்ன கண்றவி இது” என சிலர் ஓடிப்போனார்கள்.

ஆனால் அந்த ஓவியத்தினை தூரத்தில் இருந்து பார்த்தால் தான் அருமை தெரியும். அந்த ஓவியம் மயிலாக தெரியும். இது போல பல பல ஓவியங்கள். அது போலவே குரங்கின் ஓவியத்தினை முதலில் அங்குதான் பார்த்தேன். அவற்றை புகைப்படம் பிடிக்கவும் தடை உண்டு. அப்படியிருந்தும் என் சகோதரன் தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்தான்.

காரைக்காலிற்கு வருவோம், அங்கு மாங்கனி திருவிழா முடிந்து சில நாட்களே ஆனதால், விழாவிற்காக போடப்பட்டிருந்த கடைகள் அப்படியே இருந்தன. மற்றக் கடைகளைவிட வீட்டுச் சாமான்கள் இருந்த கடைகளிலும், அழகு சாதனங்கள் இருந்த கடைகளிலுமே அதிகக் கூட்டம். சில கடைகளில் இஸ்லாமியப் பெண்களும் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுதப்பட வேண்டியது நிறைய இருந்தாலும், இடுகையில் படங்களை இணைப்பதால் பெரியதாக மாறக் கூடும் என சுருக்கிவிட்டேன்.

சில திருச்சி மலைக்கோட்டை ஓவியங்கள் -

மயிலாய் நிர்வாணப் பெண்கள்

முடிவறிய இயலாத பாம்புகள் - சித்திரக் கூடம்