அமில வீ்ச்சு – கனத்த இதயம் படைத்தவர்களுக்கு மட்டும்.

நேற்று சென்னை மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் இதமாக ஒலித்தது. சில நிமிடங்களுக்கு பிறகு தான் அந்தப்பாடல் யாரோ ஒருவரால் பாடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. குரலில் அத்தனை இனிமை. யார் பாடுகிறார் என ஆவலோடு பார்க்க முற்பட்ட போது கொஞ்சம் அதிர்ந்து போனேன். முகமே தெரியாத அளவிற்கு சிதைந்து போயிருந்த பெண்மணி பாடிக்கொண்டிருந்தார்.

எல்லாப் பெண்களைப் போலவும் ஒரு காலத்தில் அவருக்கும் அழகிய முகமுண்டு. ஆனால் இப்போது அழகிய குரலைக் கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். இது ஏன் நடந்தது. யார்க் காரணம்?. உண்மையைச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?. ஒருவகையில் நாமும் இதற்கு காரணம். எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

ஒரு பெண் (காதலியோ, மனைவியோ) தவறு செய்வதாகத் தோன்றினால், அதற்கு தண்டனையாக ஆண் செய்வது அவளது அழகை குழைப்பதுதான்.அதற்கு காரணம் ஒரு பெண் என்றாலே அவளுக்கு அழகு முக்கியம் என இந்தச் சமூகம் கருதுகிறது. (சமூகம் என்பது நம்மையும் சேர்த்துதானே!)

முடியை வெட்டிவிடுவது, மொட்டை அடிப்பது என தொடங்கும் இந்த தண்டனைகள் பெரும்பாலும் உச்சக்கட்டமாக அமில வீச்சில் போய் முடிவடைகின்றன. மிக சமீபகாலமாக இந்த பழக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

முடியை அறுத்து துன்புருத்துதல்

சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுலட்சனா என்ற மாணவி இரட்டை ஜடை போடாமல் ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஷகீலா சுலட்சணாவின் ஜடையை கத்திரிக்கோலால் கரகரவென அறுத்து கையில் கொடுத்து இனிமேல் ஒற்றை ஜடையில் வந்தால் இதுதான் கதி என்றும் எச்சரித்தார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி மேலும் படிக்க இங்கு சொடுக்கவும்.

மொட்டையடித்து துன்புறுத்துதல்

இந்த சம்பவம் கொஞ்சம் பழையது. கோவையில் இப்ராகிம் என்பவர் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்து மனைவி நதீராபானுவுக்கு மொட்டையடித்து துன்புறுத்திய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

அமில வீச்சு

காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.

ஏப்ரல் 28ம் தேதி திருச்சியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது’ ஆசிட்’ வீசியுள்ளான் காதலன். அவனுடைய வாக்குமூலத்தில் சொல்லப்பட்டது,.

சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.

அமில வீச்சில் தாக்குதலுக்குண்டான சில பெண்கள்

மேலும் பார்க்க-

எண்ணச் சிதறல்கள்.

The New York Times காணோளி

Acid Violence

இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டு போட்டு அதிக மக்களை சென்றடைய உதவுங்கள்.

காமவியலில் இந்தியாவின் பங்கு

காமவியலைப் பற்றிய நூலாக இன்று உலகம் முழுதும் வாத்ஸாயனாவின் காமசூத்ரா அறியப்படுகிறது. இது போன்ற பல புத்தகங்களை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. அவற்றின் பட்டியல் இதோ!.

வாத்ஸாயனா (கி.பி 300 – கி.பி 400)

உலகின் முதல் காமவியல் நூலான “காம சூத்ரா”வை இயற்றியவர் இவர். இந்நூலில் காமத்தைப் பற்றி மிகவும் துணிச்சலாகவும், அறிவியல் பூர்வமாகவும் விளக்கங்களை எழுதியிருந்தார் இந்த ரிஷி. ஐம்புலன்களாலும் இன்பத்தை அனுபவிப்பதே சிறப்பு. பார்த்து, கேட்டு, தொட்டு, சுவைத்து, முகர்ந்து இன்புறுதலைப் பர்றியும், முத்தமிடுதல், அரவணைத்தல், செல்லமாய்க் கடித்தல், பிரியமாய்ப் பிராண்டுதல், முயக்க பாவங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக விவரமாக எழுதியுள்ளார்.

காமம் என்பதன் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலில் அதிகசுகம் பெறப் பயண்படுத்தக்கூடிய உபகரணங்கள், சொக்கு மருந்துகள், வழிமுறைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அந்தக் காலத்து நூலாக இருந்தாலும் அதன் நூதன கருத்துகள் இன்ரும் மக்களைக் கவருவதாக அமைந்திருக்கின்றன.

கொக்கோகா(கி.பி 100 – கி.பி 1200)

இவர் “ரதி ரகசியம்” என்ற நூலை இயற்றியவர். இவர் பெண்களின் காம சுபாவங்களையும், காமக் களிப்போற்றும் உடல் பாகங்களைப் பர்றியும் பெண்கள் காமத்தை அதிகமாய் விரும்பும் தருணங்களைப் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார். சொக்கு மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆண் பxண்ணின் உடல் உறுப்பின் அளவைக் கொண்டு அவர்களை ஒன்பது வகையினராகப் பிரித்து வருணித்துள்ளார்.

பத்ம ஸ்ரீ(கி.பி 1000)

பத்ம ஸ்ரீ என்பவர் பௌத்த மதத் துறவி. இவரது நூலான “நகர சர்வஸ்வம்” சங்கேத மொழியால் காதலை தெரிவிக்கும் கலையைப் பற்றிய விரரங்கள் கொண்டதாகும்.

ஜோதிரிஸா (எ) கவிசேகரா(கி.பி 1300)

“பஞ்ச சயகா” என்ற இவரது நூல் காமசுகத்தை மேம்மபடுத்தும் மருந்துகளைப் பற்றியும், காமம் சம்பந்தப்பட்ட பாகங்களின் பராமரிப்புப் பர்றியும் விளக்குகிறது.

பிரௌத தேவராஜா(கி.பி 1400)

“ரதி ரத்ன பிரதிபிகா” என்ற இவரது நூல் வெவ்வேறு தேசத்தை சேர்ந்த பெண்களின் அழகை வர்ணிப்பதாகும். காமத்தின் போது ஆலிங்கணம் கொள்ளும் பல காரணங்களையும் இது விவரித்தது. அவற்றில் 21 மல்லாந்து , 3 ஒருக்கழித்து, 2. அமர்ந்து, 5 நின்று, 11 வளைந்து, குனிந்து, 2 பெண் மேலிருந்து காமுறும் கரணங்களாகும்.

ஜெதேவா(கி.பி 1500)

“ரதி மஞ்சரி”, அதாவது “காதல் மாலை”, என்ற இவரது கவிதை தொகுப்பு எளிய முறையில் காமவியலை வர்ணிப்பதாக அமைந்துள்ளது.

கல்யாண மாலா(கி.பி 1600)

“அனங்க ரங்கா” என்ற இவரது நூல் திருமண வாழ்வில் வெற்றி வழிகளையும், எதிர் பாலினரை மயக்கும் வழிகளையும் விவரிக்கிறது.

நரசிங்க சாஸ்திரி(கி.பி 1800)

“சுத்ர விருத்தி” என்ற இவரது நூல் வாட்சாயானாவின் “காமசூத்ரதா”வை எளிய முறையில் விளக்குவதாக அமைந்துள்ளது.

யஸோதாரா(கி.பி 1000 – 1300)

“ஜெயமங்களா” என்எற இவரது நூல் இவர் காலத்திற்கு முன் எழுதப்பட்ட காமசூத்ரா போன்ற நூல்களின் தாத்பரியத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

வஜிகரணம்

வஜிகரணம் ஆயுர்வேதத்தின் எட்டு கிளைகளில் ஒன்று. “சாரகா சம்ஹிதா” என்ற அவரது மருத்துவ நூலில் வஜிகரணத்தை பற்றி விளக்கியுள்ளார்.

தொடர்புடைய இடுகைகள் -
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

பிரபலங்களின் வலைப்பூக்கள்

தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள் பலரும் இணையத்தில் தங்களுக்கென ஒரு வலைப்பூவை ஆரமித்து இணைய சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கு தெரிந்த சில பிரபலங்களின் வலைப்பூ முகவரியை இங்கு தருகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் இன்று பலரும் சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதுவதற்கு இவர் எழுத்துகள் ஒரு காரணம். இவரின் கதாவிலாசம் என்ற புத்தகத்தில் ஐம்பது சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்திருப்பார். இதிலிருந்தே இவருக்கு இலக்கிய உலகில் எத்தனை அனுபவம் இருக்கிறது என அறிந்து கொள்ள முடியும்.

இவர் ஒரு தேசாந்திரி. உலகமுழுவதும் சுற்றி சுற்றி ஏகப்பட்ட அனுபவங்களை வைத்திருக்கின்றார். உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றியும் இவருக்கு பரிச்சயம் உண்டு. பாபா, பீமா போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

எஸ்.ராவின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஜெயமோகன்

உங்களுக்கு இலக்கிய உலகம் பரிச்சயம் என்றால் நிச்சயம் ஜெயமோகனைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மதங்களைப் பற்றி பேசத் தயங்குகின்ற எழுத்தாளர்கள் மத்தியில் தன்னுடைய தீர்க்கமான பார்வையை செலுத்துபவர்.

இணையத்தில் மிக அதிகமாக இவருடைய கட்டுரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசகனின் தனிப்பட்ட கேள்விக்கும் அழகாக பதிலளித்துக் கொண்டிருக்கின்றார். நான்கடவுள் படத்தில் இவரின் வசனங்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

ஜெயமோகனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

தமயந்தி

தமயந்தியைப் பற்றி எஸ்.ராவின் புத்தகத்தில் தான் படித்து தெரிந்து கொண்டேன். அக்கக்கா குருவிகள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் எல்லோராலும் அறியப்படுகிறார்.

தமயந்தியின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஞாநி

ஞாநியை எனக்கு ஓ பக்கங்கள் மூலமாகதான் தெரியும். அரசியலில் தன்னுடைய கருத்துகளை தயங்காமல் சொல்பவர். இவர் தீம்தரிகிட என்ற பத்திரிக்கையை நடத்தி வந்துள்ளார். அதில் உள்ள பல கட்டுரைகள் எல்லா காலத்திற்கும் பொருந்துபவை. இவற்றைக்கூட தன்னுடைய வலைப்பூவிலேயே இணைத்துள்ளார்.

ஞாநியின் வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

சாரு நிவேதிதா

தமிழில் குறிப்பிடத் தக்க ஒரு எழுத்தாளர். நித்தியாநந்தரைப் பற்றி இவருடைய வலைப்பூவில் “கடவுளைக் கண்டேன்” என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இப்போது இவர் நித்தியானந்தரின் லீலைகளை குமுதம் ரிப்போட்டரில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சாரு நிவேதிதாவின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மனுஷ்ய புத்திரன்

தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது.

மனுஷ்ய புத்திரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பாலக்குமாரன்

படிக்க படிக்க திகட்டாத நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். இவரின் உடையார் தொகுப்பு மிகவும் பிரபலம்.

பாலக்குமாரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மாலன்

எழுத்தாளர் மாலன் அவர்களின் வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பாமரன்

இவர் கேலியும் கிண்டலும் சேர்ந்த வகையில் சமுதாய அவலங்களைப் பொதுக்கடிதங்கள் (Open Letters) மூலமாக விமர்சிப்பதில் பெயரெடுத்தவர்.

பாமரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

அ. முத்துலிங்கம்

எஸ்.ராவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

முத்துலிங்கத்தின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

இந்த இடுகை மேலும் மேலும் பிரபலங்களின் வலைப்பூகளைச் சந்திக்கும் போது திருத்தப்படும். உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யாராவது வலைப்பூ வைத்திருந்தால் மறுமொழியில் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே.!.

இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டு போட இங்கு சொடுக்கவும்.

விலங்குகளுடன் கில்மா – 18+

சில ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், சில பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தால் இப்படி தோன்றும். ஆனால் ஆணோ பெண்ணோ யாரெனும் விலங்குகளைப் பார்த்தால் அதனோடு உறவு கொள்ள தோன்றினால், அதற்கு மருத்துவம் Zoophilia ஜுபீலியா என்று கூறுகிறது.

பழங்காலத்திலும் -

எதுவும் இன்றோ நேற்றோ புதிதாக முளைத்துவிடும் விசயமில்லை. பழங்காலத்திலும் மனிதன் விலங்கோடு புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். அதற்கு சான்றாக கஜரோகாவில் உள்ள சிற்பங்களில் ஒன்று இருக்கிறது. கிரேக்க புராணங்களில் இப்படிபட்ட கதைகள் வருகின்றன.

இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறவைகளுடன் -

இந்த பழங்கால ஓவியம் பறவைகளுடன் மக்கள் ஈடுபட்டிருந்த புணர்ச்சியை தெரிவிக்கின்றது.

வீட்டு விலங்குகளுடன் -

டாக்டர் ஷாலினி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் ஆடுகளுடன் புணர்ந்த மனிதர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இந்த புணர்ச்சி மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு மட்டுமல்ல, மாடு, மீன், பாம்பு எனவும் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

காட்டு விலங்குகளுடன் -

இதற்கென பல தளங்கள் கூட இயங்கி வருகின்றன. காமத்தினை காசு பார்க்க அலைகின்ற கூட்டம், இதை மட்டும் விட்டுவிடுமா என்ன.

இதைப் பற்றி விக்கிப் பீடியாவில் படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த இடுகை அதிக மக்களை சென்றடைய தமிழிஸில் ஓட்டு போடவும். அதற்கு இங்கு சொடுக்கவும்.

இது தான் இந்தியா-ஐபில் vs மானம்.

ஒரு புறம் சொதப்பலாக விளையாடியே பழக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், அபாரமாக கைப்பற்றிய வைரக் கோப்பை. அதற்காக ஆர்ப்பரிக்கும் மக்களும், கொண்டாட்டங்களும். முதன் முதலாவதாக இந்திய கேப்டன் கைப்பற்றிய கோப்பை என்பதால் இன்னும் கூடுதல் உற்சாகம்.

மறுபுறம் பசிக் கொடுமை தாங்க முடியாமல், பூக்களை காய வைத்து தின்று உயிர் வாழும் கூட்டம். என்ன எங்கே என கேட்கின்றீர்களா?. இது சோமாலியாவில் இல்லை. இந்தியாவில்,.

தினமலரில் இன்று வெளிவந்த அந்தக் கட்டுரை இதோ!.

லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், ‘மாகுயா’ எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தூண்களை தூங்க வைக்க புகையிலை போதைமருந்து பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தால் நமக்கு சென்னை சூப்பர் கிங்சின் வெற்றி மறந்து போய்விடும்.

வாழ்க ஜனநாயக இந்தியா!.

சில பயனுள்ள வலைதளங்கள்

தமிழ் ரேடியோ

இணையத்தில் தமிழ் ரேடியோக்களைக் கேட்க tamilradios வலைதளம் உதவும். சென்னையின் மிக முக்கிய ரேடியோ நிலையங்களை உடனே கேட்கலாம்.

தொலைக்காட்சி காணொளிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் பைலாக மாற்றி சேமிக்க

வலைப்பூக்களில் மிகவும் பயனுள்ள ஒரு பக்கத்தினை படிக்கின்றீர்கள். அதை சேமித்து வைத்து பிற நண்பர்களுடன் பகிர ஆசைப்படுகிறீர்கள். அல்லது உங்களுடைய பிற்காலத்திற்காக சேமிக்கின்றீர்கள் என்றால், அந்த வலைப்பூவின் பக்கத்தினை html லாக அல்லாமல், பி.டி.எப்பாக மாற்றி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.

அதற்கு ExpressPDF வலைப்பூவை உபயோகம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையானது.

Convert Web pages to PDF உங்களுக்கு தேவையான இணைய பக்கத்தின் முகவரி இதில் இட்டால் போதுமானது.

ஆங்கில அகராதி

சிலப்பதிகாரத்தில் கோவலனை கொண்டு வா என்பதற்கு பதில் கொன்று வாவென பாண்டியன் சொன்னது, ஒரு சொற்பிழையால் ஏற்படுகின்ற பொருள் மாறுபாட்டின் அபாயத்தை நன்கு உணர்த்துகிறது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இப்படி ஏகப்பட்ட சொல்லாடல்கள் இருக்கின்றன. மிகச் சரியான பொருளை அறிந்து கொள்ள TheFreeDictionary என்ற அகராதி வலைப்பூ உபயோகமாக இருக்கும்.

இணையத்தில் தேடப்படுபவைகள்

இந்த பறந்து விரிந்த வலையுலகில் மற்றவர்கள் என்ன தேடுகின்றார்கள் என்பதை அறிய கூகுளாண்டவர் வழி செய்கின்றார். அந்தப் பக்கத்தினை காண Google Trends உதவும்.

இலவச எஸ்எம்எஸ் அனுப்ப

இணையத்தில் இதற்காக ஏகப்பட்ட வலைப்பூக்கள் இருக்கின்றன. உங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்வது மட்டும் போதுமானது. 160பை2 தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாவேந்தர் பாரதிதாசன் புத்தகங்கள் – இலவச தரவிரக்கம்

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு தான், நான் முதன் முதலாக வாசித்த வரலாற்று நாவல். அதன் அழகு அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்க தூண்டியது.

இருண்ட வீடு அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. மொழி நடைமுதல் அந்த நாவலின் சூழல், கதாபாத்திரங்கள் என எல்லாவற்றிலும் வினோதம் இருக்கும்.

இளைஞர் இலக்கியம் முழுக்க முழுக்க எளிமையான பாடல்களைக் கொண்டது.

அழகின் சிரிப்பு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இளைஞர் இலக்கியம் புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இசை அமுது புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

குடும்ப விளக்கு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

பாண்டியன் பரிசு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

தமிழச்சியின் கத்தி புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

ஐந்து காணோளிகளும் அறிய பொக்கிசங்களும்

“அருகிலிருப்பவனுக்கு அருமை தெரியாது” என்று என்னுடைய அம்மாச்சி அடிக்கடி சொல்லுவார். அது எவ்வளவு உண்மை என்பதை இந்தக் காணோளிகள் உங்களுக்குச் சொல்லும்.

முதலாம் காணோளி -

இரண்டாம் காணோளி -

மூன்றாம் காணோளி –

நான்காம் காணோளி -

ஐந்தாம் காணோளி -

அருகிலிருப்பவைகளின் அருமைகளை அறிவோம். பொக்கிசங்களைப் போற்றி பாதுகாப்போம்.

தமிழிஸில் இந்த இடுகைக்கு ஓட்டு போட இங்கு சொடுக்கவும்.

பி.கு – ஒவ்வொறு காணொளியைப் பற்றியும் தனித்தனி இடுகைகள் இட வேண்டியிருக்கும். அந்தளவிற்கு செய்திகள் இருக்கின்றன.

ஐயோ என் மோனாலிசா!

மர்மம்!. இது 77 × 53 cm, 30 × 21 inches அளவே உள்ள மோனாலிசா ஓவியத்தின் ஒரு சிறப்பு பெயர். இதுவே பலதுறை வித்தகன் டாவின்சியின் வியக்கவைக்கும் படைப்புகளில் தலைசிறந்ததாக கொண்டாடப்படுகிறது.

மர்மப் புன்னகை -

மோனாலிசாவின் புன்னகை மிகவும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சோகப் புன்னகையாகவும், அதே நேரத்தில் குரூரப் புன்னகையாகவும் சிலருக்கு தெரிகிறது.

ஆண் ரூபம் -

இந்த மோனாலிசாவை சற்று ஆண்மை கலந்த பெண்ணாக சிலர் குறிப்பிடுகின்றார்கள். சிலர் டாவின்சி தன்னையே பெண்ணாக வைரைந்திருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார்கள்.

ஆனால் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி நம் கலைரசிக சிகாமணிகள் செய்துள்ளமையை கீழே பாருங்கள்.

மர்மப் புன்னைக்கான விடை -

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழனுடைய கலாச்சாரமா?.
தமிழனின் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள். அவனுடைய தந்தைக்கும், அண்ணனுக்கும் கூட இரண்டு மனைவிகள். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நாத்திகத்தில் கூட இரண்டு பொண்டாக்காரன்கள் இருக்கின்றார்கள். தமிழனின் தலைவனாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட தாத்தா கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். பகுத்தறிவு தந்தையான பெரியாருக்கோ இரண்டு மனைவிகள்.

இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ஒரு சின்ன நகைச்சுவைக் கதை. நித்தியானந்தரை குமுதம் அறிமுகப்படுத்தியது, ஆனந்த விகடனில் வெளியான சுவாமி சுகபோனந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” என்ற தொடருக்கு பிறகு தான் என்று சொல்லுகின்றார்கள். அந்த மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,….

அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள்.

“இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்..” என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்.”இப்படி கருகருவென்ற தலைமுடியோடு இருக்கும் உங்களுடன் நான் ஜோடியாக வெளியே வந்தால், பார்ப்பவர்கள் என்னைத் தான் “பாட்டி” என்று பரிகாசம் செய்வார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தலையில் இருந்த கருப்பு முடிகளையெல்லாம் பிடுங்கிவிட்டாள்.

ஆக மொத்தத்தில் அவன் இப்போது முழு மொட்டை.

என்ன சிரித்தீர்களா?…